Tuesday 13 March 2012

கனவுக்காதலி

வாழைப்பூவோ என்று மலைத்துநிற்க
அப்படியில்லையென முறைத்துநின்றன
கவ்வியிழுத்த கறுத்த கண்கள்.

வளைந்த இடையின் இடைகாண
குனிந்த பார்வை பணிந்து கிடக்க,
அணிந்த ஒட்டி அவிழ்த்து வீச,

அழகிய ஓவியமாம், உச்ச மச்ச
இருப்பினைப் பார்க்க மறுத்தும்
வீசின ஒளி உள்வாங்கி விழித்தும்

ஒடிந்து ஆடிநடந்த ஒயிலாள்
தங்கத்தாம்பலம் மறைந்து
மறைத்த மயிலாள், ஓடினாள்.

கோடை மேகக்கூட்டம் மழைமுகம்
காட்டி எடுக்கும் ஓட்டம், பொய்மை.

வெம்மையின் முழுமையில் கானலை
காட்டி களிப்புறச் செய்வது பொய்மை.

கட்டாயம் வருவேன், சந்திப்பேனெனில்
நிச்சயமான ஏமாற்று விதைவிதைப்பு.

நம் மனக்கலப்பு அமாவாசை தினம்
என நிலா உறுதியிட்டால் பொய்மை.

அகக்கண் உள்வைப்பை தவிர்க்க முடியாமல்
முன்வைக்குமாம் முத்தழகியின் முகக்கண்.

பூவையர் எப்பொழுதும் தம்தம்
மலர்முகம் காட்டி வீழ்வதில்லை.

பொய்மையின் வித்தகர்கள், அவர்களின்
கவிதைமுகத்தில் உண்மையுமுண்டு.

பொய்யில் ஆண் பெண்னெனில்
தவறேயில்லை காண். அக்தே

கைபிடித்து பின் மனமுடைக்கும்
பாவம், பின் வந்தேயடையும் முகம்தேடி.

நிலாப்பெண்ணே!
மோகனம் பாடிவரும் கானகக்குயிலே!
வண்ணமுகத் தாமரை மின்னிவரும்,
புன்னகை ஜொலிக்கும் பிறைநிலவே!

முத்து விளையாடும் களமொத்தக்
கொங்கைகள்,அத்துத்தெரித்த
வெண்முல்லை ஆடிமகிழ்ந்து
அணிவகுத்த பூரணநிலா!

மூடிச் சிரிக்கும் பிறையிலும்,
ஆடிச் சரிக்கும் பூரணமும்,
தேடிக்கிடைக்காத நடையினில்
குழுங்கிக்கவிழும் அழகிலும்
வெற்றிதான் உனக்கு முழுநிலவே!

முன்வந்து ஒயிலாக மனக்கதவினை
விரைந்து வந்து திறந்து நிற்கமாட்டாயோ?

ஒரு இனிய பயணம்

சுதந்திர வாழ்க்கை
சுற்றித் திரியுது காக்கை.

சுகமான சிந்தனை
சுளுக்கு இல்லாத மனதினை,
சுமந்த சுத்தக்காற்றின் சுகந்தம்.

சுகந்தம் பரப்பும் நினைவுகளில்
சுமையாய் நிகழும் கனவுகள்.

கனவுகளின் சங்கமம்
நிலவுத்தோழியின் இனிய காதல்.

உறவுக்கும் கைகொடுக்கும்
நிறைவுக்கும் வழிவகுக்கும்.

உறவு சொன்ன ஒருவனுக்காக வாழ்பவள்.
உலக வாழ்க்கைப் பள்ளியிலுமானவள்.
இனிய உலகை இன்பமாக்க விழைபவள்.
இன்னொரு முறை அவனைக்காண நினைப்பவள்.
சின்ன சின்ன ஆசைகளைச் சுமப்பவள்.
சிறுகச் சிறுக உயிரையும் குடிப்பவள்.
உள்ளமெல்லாம் வெள்ளையாகச் சிரிப்பவள்.
உள்ளதெல்லாம் அவனுக்கே கொடுப்பவள்.

உனக்காகவே நான்.