Tuesday 23 October 2012

தியானத்தின் அடிப்படை - 2

தியானம் இருப்பது, நிலையான கலவி சுகம் அனுபவித்தல், இறைவனில் மிதத்தல் எல்லாம் ஒன்றுதான் பேரின்பம் அடைதல். ஆன்மாவின் ராகங்கள்.
செக்ஸ், விந்துநாத வெளியேற்றம், தும்மல் எல்லாம் சிற்றின்பம், உடலின் இச்சைகள்.
ஒன்று விந்துவை மூலாதாரத்தில் (G - ஸ்பாட்டில்) நிரப்பி உட்புறம் சுழற்றுதல்.
மற்றொன்று வெளியேற்றல்.
செக்ஸ் உணர்வு பெற்றதும் உடலின் வெள்ளைரத்தம் மூலாதாரத்தில் நிரம்பி முட்டிநிற்கும். பின் வெளியேறும். வெளியேறும்பொழுது மூலாதாரத்தின் காந்த முனைகள் ஒன்று உடலின் அர்த்தனாரீஸ்வர் +veமுனையில் இணைந்து, மற்றது -ve இலும் இணையும்பொழுது அது மின்காந்த அலைகளைப் பரப்புகிறது. அதுவே கலவிசுகமாக உணரப்படுகிறது. வெளியேறியபின் வெறுமைதான்.
விந்துநாதம் வெளியேறும் பொழுது சில நிமிடங்கள் இதுதான் நடைபெறுகிறது.
தியானத்தில், முட்டிநிற்கும் மூலாதார விந்துநாதம் வெளியேறாமல் உட்புறம் சுழன்றுகொண்டேயிருக்கும். இப்பொழுதும் அர்த்தனாரீஸ்வர் முனைகள் இணைகின்றன, விந்துநாதம் வெளியேறாமலேயே. அது நினைக்கும்பொழுதெல்லாம் கலவிசுகம் கொடுத்தவண்ணமே இருக்கும். இங்கு எந்த இழப்புமில்லை. தியானநிலை, பேரின்பப்பெருவிழா.

Monday 1 October 2012

ஒரு கேள்வி-ஒரு பதில்


நெல்லையப்பன், திருநெல்வேலி.

கேள்வி: சாரு, உங்களால் எந்த ஜென்மத்திலும் மறக்கவே முடியாதவன் நான். திமுகவுக்கும், கருணாநிதிக்கும் ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: உங்கள் தொலைபேசி எண் என்ன நெல்லையப்பன்? உங்களையும் உங்கள் பெயரில் திருநெல்வேலியில் வாழும் அந்தக் கொடூரமான ரவுடியையும் என்னால் மறக்கவே முடியாது. அதிலும் பயங்கரம், உங்களுடைய பழைய தொலைபேசி எண் அந்த ரவுடிக்குப் போய் இருக்கிறது என்பது. இது எல்லாவற்றையும் விட பயங்கரம், அந்தப் பழைய எண்ணை உங்களின் லெட்டர் பேடிலிருந்து நீக்காமல் வைத்திருப்பது. என்னைப் போல் இன்னும் எத்தனை பேர் ‘அந்த’ நெல்லையப்பனிடம் மாட்டி அவதிப்பட்டார்கள்?

வைரமுத்து கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பதை விடுங்கள். அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் இந்த எழுத்தாளர்கள் செய்யும் அக்குறும்புதான் தாங்க முடியவில்லை. ஒருமுறை கருணாநிதி திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் ஒரு விழா நடத்தி, சில எழுத்தாளர்களை அழைத்திருந்தார். அப்போது நம் எழுத்தாளர்கள் நடந்து கொண்ட விதம் தமிழ் இலக்கியத்துக்கே அவமானகரமானது. தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான ஞானக்கூத்தன் கருணாநிதி கை குலுக்கிய போது தன் தேகமே சிலிர்த்ததாக மேடையிலேயே குறிப்பிட்டார். இவ்வளவுக்கும் தன் வாழ்நாள் பூராவும் திராவிடக் கட்சிகளைப் பற்றிப் படு பயங்கரமாகக் கிண்டல் அடித்துக் கவிதை எழுதிக் கொண்டிருந்தவர் ஞானக்கூத்தம். மற்ற எழுத்தாளர்கள் அடித்த ஜால்ராவோ அதை விட அதிகம். கருணாநிதியே இதைப் பார்த்து மிரண்டு போய் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அப்துல் ரகுமானிடம் “என்ன இது, நம் கட்சிக்காரர்களே தேவலாம் போலிருக்கிறது; இப்படிப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்!” என்றாராம். இது பற்றிக் கடுமையான கண்டனத்தை அப்போது தெரிவித்திருந்தார் ஜெயமோகன். ஆனால் இப்போது அவர் சினிமாவில் வசனம் எழுதும் சான்ஸுக்காக எப்படியெல்லாம் சமரசம் செய்து கொள்கிறார் என்பதை நாம் கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறோம்.

ஞானக்கூத்தனைப் போல் தன் வாழ்நாள் பூராவும் திராவிடக் கட்சிகளையும் கருணாநிதியையும் திட்டிக் கொண்டிருந்த இன்னொரு எழுத்தாளர் நாஞ்சில் நாடன். ஆனால் அவர் சாகித்ய அகாதமி பரிசு வாங்குவதற்காக அடித்த குட்டிக்கரணங்கள் எல்லாம் குரங்காட்டி தன் குரங்கை வைத்துச் செய்யும் சேஷ்டைகளை விடவும் கேவலமானவை. ஆனால் இது பற்றியெல்லாம் எந்த எழுத்தாளனும் இங்கே பேச மாட்டான். நாஞ்சில் நாடனைப் பகைத்துக் கொள்ள முடியாதே? நாஞ்சில் நாடனைப் பகைத்துக் கொள்வது ஜெயமோகனையே பகைத்துக் கொள்வதைப் போன்றது. ஜெயமோகனைப் பகைத்துக் கொள்வதும் மதுரை அழகிரியைப் பகைத்துக் கொள்வதும் ஒரே விஷயம்தான். சாகித்ய அகாதமி பரிசு வாங்கிய கையோடு உலகத்தின் மிக கௌரவமான பரிசான கலைமாமணி விருது வாங்க நாஞ்சில் நாடன் செய்த குரங்கு வித்தைகளை எழுதினால் எனக்கும் சாதிக் பாட்சாவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்று அஞ்சுவதால் அதை எழுதாமல் விடுகிறேன்.