Tuesday 21 August 2012

கிரிக்கெட் - ஒரு விளையாட்டு

அவனது பள்ளி வாழ்க்கை பல சோகங்களை உள்ளடக்கியிருந்தாலும் மிகவும் சுவாரஸ்யமானது.
அடிப்படையில் அவனொரு ஹாக்கி வீரன்தான். பின்னாளில்தான் கிரிக்கெட்டை விளையாடினான். அது ஒரு அருமையான கதை. அவன் பள்ளியின் டீமில் இடம்பெற்றிருந்தான். லெப்ட்டெக்ஸ் இல் தேர்ந்திருந்தான். அந்த பொசிசன்தான் முக்கியமானது ஹாக்கியில். வெற்றிக்கு வழி வகுக்கக்கூடியது. கடினமானது.
தினமும் மாலை 5 மணிக்குப் பயிற்சி. மூன்று மாதங்கள் நல்லபடியாகவே சென்றது. ஒருநாள் கோச்சுடன் லடாய். அவர் பழிவாங்கும்விதமாக செயல்படத் துவங்கினார். ஒருநாள் 5 .05 க்கு பயிற்சிக்கு வந்தான். லேட்டானதால் அவனை அவர் 10 முறை கிரௌண்டைச் சுற்றிவரும்படி தண்டனை கொடுத்தார். சாதரணமாக 2 முறைதான். அவன் ஓடச்செல்வதுபோல வீட்டுக்குச் சென்றுவிட்டான்.
பின்னாளில் ஒரு முக்கியமான கிரிக்கெட் மேட்சைக் கண்டுகொண்டிருந்தான் நண்பர்களுடன். ஒரு டீமில் ஒரு பிளேயர் வரவில்லை. வெளியே உட்கார்ந்
த அவனை சும்மா பில்டிங்குக்கு மட்டும் என்று அழைத்தனர். ஏனெனில் அவன் கிரிக்கெட் மட்டையைக்கூட அதற்குமுன் பார்த்திருக்கவில்லை. இப்பொழுதுதான் வேடிக்கை ஆரம்பமானது. அவன் மிக நன்றாக பில்டிங் செய்து நல்ல பெயர் வாங்கிவிட்டான் முதல் பாதியில். அடுத்து பேட்டிங் ஆரம்பமாயிற்று. மொத்தம் வெற்றிக்கு 80 ரன்கள் எடுக்கவேண்டும். பந்தயம் 12 கடலைமிட்டாய் பாக்கெட்டுகள். ஒன்பதுபேர்கள் அவுட்டாகி வெளியேறிவிட்டனர். ஸ்கோர் 35. ஒருவன் திவங்கிக்கொண்டு நின்று இருந்தான். அவன் அவனுக்கு எப்படி விளையாடவேண்டும் என்று அறிவுரை வேறு  கொடுத்து நின்றான். அதாவது சும்மா மட்டைபோட்டுக் கொண்டிருக்குமாறு அவனைக் கூறினான். இன்னும் 45 ரன்கள் வெற்றிக்குத் தேவையை இருந்தது.
எல்லோரும் புதியவர்கள் அவனுக்கு. இருந்தும் எந்த பயமும் எதிலும் யாரிடமும் இருந்ததில்லை அவனுக்கு.
ஹாக்கியில் பந்து தரையோடு வரும், இதில் குதித்து வருகிறது அவ்வளவுதானே வித்தியாசம் என்று நினைத்து பந்தின்மேல் மட்டும் கவனமாய் குறிவைத்தான்.
அவன் வாழ்க்கையின் முதல்பந்து. அதுஒரு short பிட்ச் ஆனா பந்து. கண்களுக்கு அழகாகத் தெரிந்தது.
ஒரே சுற்று பந்து square லெக்கில் நான்கு ரன்கள். பௌண்டரி என்பதினைக்கூட அப்பொழுதுதான் அவனுக்குத் தெரிந்தது.
அடுத்த பந்தை இப்பொழுது முழுவேகத்தில் அடித்தான். அதுவும் நான்கு, லாங்கானில்.
இப்படியாக பந்தைச் சிதைத்து, எதிராளிகளையும் துவைத்து, பார்ப்பவர்களையும் திகைக்கவைத்து,  அவனை சேர்த்துக்கொண்ட நண்பர்களையும் கொண்டாடவைத்து, 45 ரன்களையும் எடுத்து அவுட்டாகாமல், 6 கடலைமிட்டாய் பாக்கெட்டுகளைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.
இதுதான் அவனின் கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்கம்.

Thursday 16 August 2012

தியானத்தின் அடிப்படை

மனித உடலில் ரத்த வெள்ளையணுக்கள் முக்கிய இடம்பெறுகின்றன. தியானத்தின் மையமே அவைகள்தான். முக்கியமாக 23 சுரப்பிகளுக்கும் அதனதன் திரவங்களை தயார் செய்வதற்கு உதவுகின்றன.
சாதரணமாக லௌகீக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள், அதாவது வாரம் இருமுறை செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு உடலின் ரத்தத்தின் வெள்ளையணுக்களின் அளவு 20 % மட்டுமே இருக்கும். இதனால் அவர்களின் ஆன்மா ( காந்தக்களம் ) அளவும் குறைவாகவே இருக்கும். இந்தநிலையில் தியானம் மருவாது. வெள்ளையணுக்கள் கிருமிகளுடன் போராடுவதும், எலும்பை திடப்படுத்துதல், செமன், நாத உற்பத்தி, இதுபோன்றவைகளுக்கு உதவுகின்றன.
48 நாட்களுக்கு செக்ஸ் விரதம் இருக்கும் பொழுது, விந்து, நாதம் வெளியேற்றம் இல்லாததால் வெள்ளையணுக்கள் உடலில் 100 % அளவுக்கு நிறைந்திருக்கும். ( பின்னர் 15 நாட்களுக்கொருமுறை செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்.)
ஒவ்வொரு சுரப்பிகளிலும் +ve, -ve, காந்த முனைகள் இருக்கும். அதாவது அர்த்தநாரீஸ்வர் பிரிவு நடுச்சுவரின் முனைகள். சுரப்பிகள் முழுவதும் நிறைந்திருந்தால் மட்டுமே அவைகள் ஒரு காந்தக் களத்தை அங்கே உருவாக்கி இன்ப அதிர்வுகளை கொடுக்கமுடியும்.
அந்த நிலையில் மட்டுமே தியானமாக அந்த அதிர்வுகள் மாற்றம்பெற வழியேற்படும். அந்த இன்ப அதிர்வுகளை ஸ்திரமாக நிலைபெறச் செய்வதே தியானம்.

 

கடவுள் ஒரு கல் - 3

இப்படியாக ஒரேயொரு ஏலக்ட்ரோனைக் கொண்டு அமைக்கப்பட்ட அணு - மூலங்களின் கட்டிடம், ஆண் என்று கொள்ளப்பட்டது. ப்ரோடான் பெண் எனக் கொள்ளப்பட்டது.
23 சுரப்பிகளின் மூலமாக அவன் முழுமையடைந்தான். அவனுக்குள் சேமிக்கப்பட்ட தனித்தனி எலக்ட்ரோன்களை ஒவ்வொன்றாக அவனின் 23 குரோமோசோம்களால் அதனுள் நிரப்பி சிறு அணு-மூலக்கூறு, அதாவது விந்துக்களைக் கோடிக்கணக்கில் உருவாக்கத் துவங்கினான்.
அதுபோல பெண், ப்ரோடான்ஐக் கொண்டு முட்டைகளை உருவாக்கினாள்.
இப்பொழுது ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 23 குரோமோசோம்கள் என்பது, 23 சுரப்பிகள். அவைதான் மனிதனின் அங்கங்கள் எல்லாம் எப்படியெப்படி அமையவேண்டும், என்பதினை சுருக்கி முடிந்துவைத்து முடிவு செய்கின்றன. வழிநடத்துகின்றன.
இவற்றில் 7 சுரப்பிகள் முக்கியமானவை. 7 சக்கராக்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றில் சகஸ்ராரம், ஆக்னை, விசுத்தி, இவை தெய்வ சக்ராக்கள்.
அனாகாதா சக்ரா மட்டும் ஆவிநிலை.
மற்ற மணிப்புரா, ஸ்வாதிஷ்டானம், மூலாதாரம் இவைகள் மனித உடல் சக்ராக்கள்.
பிறக்கும் நிலையில் சகஸ்ராரம் சுரப்பி நிறைந்திருக்கும். அது கிருஷ்ணாவின் சக்ரா.
குழந்தை வளர்ந்து ஒவ்வொரு சுரப்பியாக நிரம்பி முடிந்து, மூலாதாரம் நிரம்பும்போழுது மனிதன் வயதுக்குவந்து முழுமையாகி தன்னின் வடிவமாக்க வல்ல விந்துவினையோ, முட்டையினையோ உற்பத்திசெய்யத் துவங்குகிறான்/ள்.
இதன்பின் பிறப்பு பற்றின அனைத்து படித்திருப்போம். சிற்றின்பம்.
இனி தியானம்,பேரின்பம் பற்றி.
விந்துக்களோ, நாதமோ மூலாதாரத்தில் ( ஒரு கலவிக்குப்பின் ) முழுமையாய் நிரம்ப ஒரு மண்டலம், 48 நாட்கள் ஆகின்றன. இதுதான் தியானத்திற்கு மிகமுக்கியம். அதாவது நம்மின் எல்லா 23 சுரப்பிகளும் அதனதன் திரவங்களால் இப்பொழுது இந்த 48 நாட்களில் நிரப்பப்பட்டிருக்கும். ஆன்மா என்கிற ஆரா பெரிதாகியிருக்கும்.
இப்பொழுது தியானங்கள் பலவகைகளில் உங்களில் நிகழ்ந்துவிடலாம்.
நல்ல இசையை கேட்கும்பொழுது, இயற்கை அழகை ரசிக்கும்போழுது, விளையாடும்பொழுது, கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கும்பொழுது ஒரு நடனத்தில் இப்படி, ஐம்புலன்களில் ஏதாவதொன்றில் நீங்கள் ஐக்கியம் ஆகிவிடும்பொழுது அது நிகழலாம்.
வெள்ளை ரத்தம் அழிவில்லாததால் அது உங்களின் ஆன்ம எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும்.
உங்கள் பாதியைக் கண்டுகொண்ட, அதாவது ஆதியில் நீங்கள் இறைச்சக்தியிலிருந்து ஏலேக்ட்ரோனாகவும் ப்ரோடோனாகவும் பிரியும்பொழுது உங்களிலிருந்து பிரிந்துசென்ற
காதலனை ( அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த ஆணை ) உங்களருகில் இருப்பதைப் போல கற்பனை செய்துகொள்ளுங்கள். அவன் உங்களுடன் ஊடலில், உடலுறவில் திளைத்திருப்பதாய் நினைத்துக்கொள்ளுங்கள். உடலின் அத்தனை திசுக்களும் அசைவற்று இறந்தநிலையில் கிடக்கட்டும். இப்பொழுது உங்களின் உடலிலுள்ள அணுக்களத்தனையும் இன்ப அதிர்வுகளால் துடிக்கும். அதை உடல் முழுவதும் பரவவிட்டு அனுபவிக்கவிடுங்கள். மெதுவாக கற்பனையில் உங்கள் காதலனுடன் அவன்மேலேறி அவன் ஆன்மாவுடன் உங்கள் ஆன்மா ஒருமித்துக் கலப்பதுபோல் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களின் ப்ரோடோனின் ஆன்மா, காதலனின் ஏலேக்ட்ரோனின் ஆன்மாவில் ஐக்கியமாகி, ஆதிநிலையின் அளவில்லா இன்பம் உங்கள்மீது பரவிநிற்கும். முடிவில்லாத அந்த இன்பத்தை அசையாமல் அள்ளியள்ளிப் பருகுங்கள். இதுதான் இறைவனுடன் கலந்துகிடக்க இருக்கும் முயற்சி. நம் வாழ்வின் இலக்கு, லட்சியம், குறிக்கோள் எல்லாம்.
தியானத்தை விளக்க எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியே இது. முழுமையாய் உணரவைக்க முயன்றிருக்கிறேன். முடியவில்லை. திருப்தியுமில்லை.

Tuesday 14 August 2012

கடவுள் ஒரு கல் - 2

பிரபஞ்சம் இப்படியாக ப்ரோடான், எலேக்ட்ரோன், நியுட்ரான் இவைகளால் நிரப்பப்பட்டு, பின் சிலபல, ஒழுங்கினுள் வந்து அணுவாகி, பின் இரசாயன மூலங்களாகின்றன.
இறைத்தன்மையிலிருந்து ( அர்த்தநாரீஸ்வரர் ) பிரிந்தவற்றுள் அணுவாக மாற்றம்பெறாமல் தனித்தனியே பறந்து கிடக்கும் ஏலேக்ட்ரோனும் ப்ரோடானும் மட்டுமே உயிர் உற்பத்திக்கு பெரும் பங்காற்றுகின்றன.
எலேக்ட்ரோன் -ve காந்தத்துகள். ஆண் சக்தி, சிவம். துடிப்புடன் விண்ணில் பரவிக்கிடப்பது. இது தன்னைப் பாதிக்கும் வெளிக்காந்த சக்தியினைக் கொண்டு அணுக்களால் ஒரு கட்டுமானம் அமைக்கிறது. இதுவே X க்ரோமோசோம்.
விந்துசக்தி, X க்ரோமோசோம் ஒன்றையும் Y க்ரோமோசோம் ஒன்றையும் தாங்கிநிற்கிறது.
ப்ரோடான் +ve காந்தத்துகள். பெண் சக்தி. சவமாக கிடப்பது. அணுக்களின் கட்டுமானத்தால் Y க்ரோமோசோம் ஆகிறது.
நாதசக்தி, 2 - Y க்ரோமோசோம்களை தாங்கிநிற்கிறது.
விண்ணில் மிதந்து கிடக்கும் ஒரேயொரு தனி எலேக்ட்ரோன் தன்னைத்தானே அணுக்களாலும் இராசாயன மூலங்களாலும் இறைக்காந்த உதவியுடன் உரு அமையபெற்று ஒரு ஆணுயிராய் அவதரிக்கிறது.
அதுபோல ப்ரோட்டன்கள் ஒரு பெண்ணுயிராய் அவதரிக்கிறது.
( விண்ணில் கோடானுகோடி பிரிந்த எல்க்ட்ரோனும் ப்ரோடோனும் பரவி இருக்கின்றன.)
ஆதியில் பிரியும்பொழுது உண்டான எல்க்ட்ரோனும், ப்ரோடோனும் சரியாக ஒன்றுடன் ஒன்று இணையும்போழுதே ஜென்ம முடிவு நிகழ்கிறது.
அதுவே நம்மின் உண்மையான பாதி.
மற்ற பாதிகளுடன் இணையும்பொழுது பலபல ஜென்மங்கள் உருவாகி ஈடேருகின்றன.
உண்மையான நம் பாதியைக் கண்டுகொண்டு ஆத்மார்த்தமாக இணையும்பொழுது ஜென்மமுடிவு ஏற்பட்டு, இறைவனுடன் ஐக்கியமாகிவிடுகிறோம்.
இதுவே மறுபடியும் இறைவனை ஐக்கியமாகிக் கலக்கமுடியும் வரம்.

ஒரு ஆண்மகனிடம் அணுக்களின் மூலங்களைத் தவிர ஒரேயொரு ஏலேக்ட்ரோனை மட்டுமே அதிகமாகப் பெற்றிருப்பான். அந்த ஒரேயொரு எலேக்ட்ரோன்தான் அவனின் அடிப்படை ஆன்மா. அவனுக்கு ஆண்தன்மையினைக் கொடுத்துநிற்பது.
அதுபோல பெண்ணுக்கு ஒரேயொரு ப்ரோடான்.
வேறெந்த வகையிலும் எந்த ஒரு வித்தியாசமும் உடல் கட்டமைப்பில் கிடையாது.
எல்லா வகை உயிரினங்களுக்கும் இது பொருந்தும்.


Saturday 11 August 2012

கடவுள் ஒரு கல்

ஆகாயம், ஆண்டவன், பரம்பொருள், பாற்கடல், ஆதிமூலம், அமுதம், கிருஷ்ணா, மகாசிவம், நிர்வாணா, வெற்றுவெளி, வெளி, ஒன்றுமில்லாமை. கற்பனையில் அளவிடமுடியாதது, வரைமுறையற்றது, எங்கும் பரவியிருப்பது, அளப்பறிய உள்வாங்கும் மின்காந்த சக்தியைக் கொண்டிருப்பது, எதிலும் அடங்காதது, இப்படியெல்லாம் அதைப் புரிந்துகொள்ளலாம்.
அது தன்மாற்றம் பெற்றபின் பிரபஞ்சம், (நஞ்சு, அமுதம்,) தோன்றியது.
அது தன்னுள், எலெக்ட்ரான்கள், ப்ரோட்டான்கள், நியுட்ரான்கள் இவைகளாகப் பிரிந்து முழுவதுமாய் நிரப்பிக்கொண்டு ஒரு எல்லைக்குள் மிதக்கவிட்டிருக்கின்றன.
அதாவது ஒரு இலையினில் ஒரு கூட்டுப்புழு தொங்கிநிற்பதுபோல். இங்கு இலை ஆகாயம். கூட்டுப்புழு பிரபஞ்சம்.
இணைக்கும் நுனி கேது.
அதனின் மையம் ராகு. (கேது-ராகு : பாம்பு, அதாவது அதுபோன்ற அமைப்பு)
எலெக்ட்ரான் - ஷிவம்.
ப்ரோடான் - ஷக்தி.
நியுட்ரான் - விஷ்ணு.
ஆக நம் பிரபஞ்சம் இப்படியான அடிப்படைச் சக்தியினாலேயே அமையப் பெற்றிருக்கின்றது.
இவற்றிலிருந்தே உலகின் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியுட்ரான், இவைகளின் தன்மாற்றக் காந்தச் சுழற்சி ஒழுங்கினால் அணு உருவானது.
அணுக்கள் இணைந்து ரசாயன மூலங்கள் தோன்றின.
ரசாயன மூலங்கள் இணைந்து கிரகங்கள் ஆயின.
உலகில் தற்பொழுது காணும் பொருட்கள், கல்  அனைத்திற்கும் இதுவே மூலம்.
உயிர் உருவானதற்கும் ஆதாரம் இதுவே. 
பிள்ளையார் - எல்லா ஐந்தறிவு வரையிலான உயிரினங்கள்.
முருகன் - ஆறறிவுள்ள மனிதன்.
இவ்வளவுதான் இந்துமதம்.

Friday 10 August 2012

hallo mr. manushyaputthiran sir, listen...

"புனித முகமூடிகள்" என்று அழகாக வர்ணித்து எழுதிவிட்டீர்கள் என்பதற்காக நீங்கள் கூறுவதையெல்லாம் ஏற்கமுடியாது. இந்திய நாட்டின் நிலையறியாமல், லட்சணம் புரியாமல் உங்கள் இஷ்டத்திற்கு எழுதிவிட்டீர்கள்.
வருமான வரி வரம்பு 2 லட்சம். சென்னையில் ஒரு சராசரியான வீட்டின் வாடகை, 12000 . மீதியிலும் நீங்கள் வாழ்வதற்காக உள்ள பணத்திற்கே வரி கட்டித்தான் நிற்கவேண்டும். கிராமத்துமக்களும் நகரத்தில் வாழும் ஏழைகளும் மாதம் 2000 ல் கூட வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர எந்த அரசியலும் உதவிடவில்லை. ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவனே தினமும் மாமூல் கொடுத்துத்தான் வாழவேண்டியதிருக்கிறது. அதுபோலவே எல்லா வியாபார நிறுவனங்களும் தங்களின் தொழில் அளவைப்பொறுத்து லஞ்சம் தரவேண்டியதிருக்கிறது. விரும்பிக்கொடுப்பதில்லை.
நம் நாட்டில் இருக்கும் அத்தனைத் தவறுகளுக்கும் அடிப்படையே லஞ்சமும் மாமூலும்தான். மற்ற அத்தனை பிரச்சனைகளும் அதிலிருந்து விளைந்த பாதிப்புகள்மட்டுமே. ஆகவே ஊழலையும் லஞ்சத்தினையும் ஒழித்தாலே தலையாயக் கடமை.
ஊழல் செய்யும், எந்த அரசியவாதிக்கும், அரசு ஊழியர்க்கும் தண்டனை என்பதே இல்லை.
இப்பொழுது நம் நாட்டின் சிறந்த வியாபாரமே அரசியலும், அரசாங்க உத்தியோகமும்தான் என்றாகிவிட்டது. அதிகாரம், ஊழல் பணத்திற்கு எந்தவரியுமில்லாமை, வழக்கு என்று வந்தால் கோர்டில் கேஸ் முடிய 10 வருடங்கள் என்ற கால தாமதம், ரௌடிகளை வளர்ப்பது, இப்படி எல்லா அடிப்படை தன்மைகளையும் தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள். ஏன்? எந்த தண்டனையும் இல்லை. மக்களால் ஒட்டுமட்டுமே போடமுடியும். அடுத்த 5 வருடத்தின் பட்டா அது. கேட்கமுடியாது.
நீங்கள் ஒரு வருடம் வரிகட்டாமல் இருந்துவிடுங்கள் பார்ப்போம், அறுத்து எறிந்துவிடுவார்கள்.
சாலை வரி கட்டுகிறோம், பின்னர் ஹைவேஸ் சாலைகளுக்கு டோல் கலெக்ஷன் வேறு. கேட்க நாதியில்லை இந்த நாட்டில்.
உண்மையைச் சொல்லப்போனால், நாட்டு மக்கள் தங்கள்தங்கள் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் முற்றிலும் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், வெவ்வேறு பாதைகளில் சென்று மொத்த பணத்தையும் சுருட்டி வெளிநாடுகளில் பதுக்கிவிடுகிறார்கள்.
ஊழல் நாட்டில் அளவுகடந்து சென்றுகொண்டிருக்கிறது. நம் போன்ற தனி மனிதனாலோ, குழுக்களாலோ எதுமே தட்டிக்கேட்க முடிவதில்லை. சோ போன்ற நல்ல பெரியமனிதர்கள், நொட்டை சொல்வதற்கு மட்டுமே பயன்படுகிறார்கள். எதனினையும் துவக்கி, முடித்துவிடும் தைரியம், துணிவு இல்லை.
அரசியல் வியாபாரமாக மாறிக்கொண்டிருக்கிறது. வைக்கோ போன்றோர், மனித உரிமை பற்றின விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நிற்கின்றார்கள்.
ஒரு ஊழலை ஒழித்திடத் துவங்கிநிற்கும் புரட்சியாளர்களாய் அண்ணா ஹசாரே திகழ்கிறார். அவரின் பாதையில் சிலபல தடைகளும் தவறுகளும் இருக்கலாம். அடிப்படையினை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். அவருடைய இந்த போராட்டம் வெற்றியடைந்தால் மக்களுக்கே நன்மை.
வலிய தண்டனை என்ற ஒரு சட்டத்தினைத்தவிர ஊழலினை குறைத்திட வழியில்லை.
கலாம் சொல்லியதுபோல, பிள்ளைகள் ஊழல்வாதித் தந்தைகளைத் திருத்திடவேண்டும் என்பனவற்றுக்கு நடைமுறை சாத்தியங்கள் இல்லை.
ஆகவே அண்ணா ஹசாரேயினை, நல்ல இந்தியாவினை அமைக்க விரும்பும் நெஞ்சங்கள் வாழ்த்தி தங்களால் முடிந்த ஆதரவினைத் தரவேண்டும்.
நான் லஞ்சமும் மாமூலும் கொடுத்திருக்கின்றேன் என்பதற்காக நான் லஞ்சம் வாங்கிநிற்கும் அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் ஒன்றும் கேட்கக்கூடாது என்பது சரியல்ல.
இப்படித்தான் காங்கிரஸ் மக்களைக் குழப்புகிறது.
தெருவில் நிற்கும் ஆயிரம் பேருக்காகவேல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்கிறது அமைச்சர்கள் கபினெட்.
அவர்கள் என்ன நூறு கோடிமக்களும் தெருவுக்கு வந்து போராடவேண்டும் என்று நினைக்கிறார்களா? எதற்குமே ஒரு துவக்கம் வேண்டும் என்பதினை புரிந்துகொள்ளுங்கள் நண்பரே. நீங்களும் நொட்டை சொல்லி நிற்கவேண்டாம் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

என்ன நடந்திருக்கிறது இதுவரை?

அண்ணா ஊழலை ஒழிக்க போராடத்துவங்கினார். அவரையும் அவரது ஆதரவாளர்களையும் அவதூறுகள் சொல்லி அடக்க முயன்றது அரசு.
அரசு எந்திரத்தின் சக்திகளை அதற்காக உபயோகித்தது.
அளவுக்கதிகமாக காலம் தாழ்த்தியது.
பின்னர் சமரசமானது மாதிரி காட்டிக்கொண்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
பின்னர் தெருவில் நின்று போராடிநிற்க்கும் ஆயிரம் பேர்களுக்காகவேல்லாம் சட்டம் போடமுடியாது, எங்களை ஆட்சிக்கு அனுப்பிய நூறு கொடிமக்களைக் கருத்தில் கொண்டுமட்டும் முடிவுசெய்வோம் என்றது.
இப்படியாக அரசு கடுப்பேற்றிமுடித்து iac குழுவினை ஆத்திரமூட்டி மக்களிடமிருந்து அந்நியப்படுத்த முயன்றது.
இப்பொழுது அண்ணாவின் செயல்பாடுகளை மட்டுமே மக்களை சிந்திக்கவைத்து, கொள்கைகளை மக்களிடமிருந்து மறக்கடித்திருக்கிறது.
இதற்கு மனிஷ்யபுத்திரன், சோ போன்ற அறிவு ஜீவிகளும் ஜால்ரா தட்டி நிற்கிறார்கள்.
இப்பொழுது மக்கள்மனதில் குழப்பத்தினை ஏற்படுத்தி வெற்றியடைந்தார்கள் அரசியல்வாதிகள்.
அண்ணா ஹசாரே நல்லவரா? செயல்த் திறமையுடையவரா? குழப்பவாதியா என்பதுபோன்ற அரட்டையரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. கொள்கையினை மறக்கடித்தேவிட்டனர் செய்திச் சேனல்கள்.
ஊழல்களைஎல்லாம் செய்துவிட்டு, அவை வெளியில் தெரிந்தபின்னும் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும், காந்தி உருவாக்கின ஒரு தேசியக்கட்சிக்கு, இதைவிடவும் ஒரு அவமானத்தினைத் இருந்துவிடமுடியாது.
கொள்ளைக்குக் கொள்ளையும் அடித்து அரசு எந்திரங்களை துஷ்ப்ரயோகம் செய்து மக்களைக் குழப்பும் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் சவுக்கடி படாமல் தப்பமுடியாது.
ஒன்றுமட்டும் நிச்சயம், இதுபோன்ற ஒரு துவக்கம் இனி வரப்போவதில்லை. இப்பொழுது இல்லைஎன்றால் எப்பொழுதும் நம்மால் முடியாமல் போய்விடும். எல்லாவற்றையும் சரிசெய்திட உதவுங்கள். குழம்பிவிடாதீர்கள்.

Thursday 9 August 2012

இரண்டாம் சுதந்திரப்போர்


எல்லோரும் என்ன நினைக்கிறார்கள், அன்ன ஹசாரேயையும் ராம்தேவையும் பற்றி?
அவர்கள் குழப்பவாதிகள், ஸ்திரமான முடிவு எடுக்கமுடியாததினால் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை என்று.
ராம்தேவ் தொழிலில் கோடிகளை சம்பாதித்திருக்கிறார், அதனால் அவரும் எதுவும் பேசிவிடக்கூடாது என்று. முதலில் தொழில் செய்து சம்பாதிப்பது தவறில்லை. மற்றும் இவ்வளவு நாட்கள் வாயை மூடியிருந்துவிட்டு இப்பொழுது அவர் கேள்வி கேட்கிறார் என்பதற்காக அவரை அவதூறாக பேசிவிட அவசியமில்லை.
இவர்களைப்போன்றவர்கள்கூட முன்னிற்கவில்லை என்றால் நம் கதி என்ன? கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு 5 வருடப்பட்டா கொடுத்திருக்கிறோம். நான் இங்கு நாட்டுக்கு நன்மை செய்துநிற்கும் அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவில்லை. கொள்ளையடிக்கும் ஜென்மங்களைப்பற்றி சொல்கிறேன். தவறு செய்யும் அமைச்சர்கள் பதவிவிலகுவதில்லை.
இன்னும் இரண்டு வருடங்கள் அவர்களுக்கு சம்பாத்திய வாய்ப்புகள் இருக்கின்றன. கூட்டணிக்கட்சிகளும் சரியான முறையில் ஜால்ரா அடிக்க அவர்களுக்கும் பங்கு கிடைக்கிறது. வெளியிலிருந்து எந்த நாய் எப்படிப்பேசினால் என்ன என்றே நினைக்கிறார்கள். 5 வருடங்கள் அவர்களை அசைக்கமுடியாது. எல்லாம் கூட்டாக நடக்கும் கொள்ளை. வாயை மூடிக்கொண்டு மக்களுக்குள் கருத்து வேறுபாடுகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்
நினைத்துப்பாருங்கள் ஒவ்வொரு முறையும் அவர்கள் யாருடன் போராட்டம் செய்பவர்களை ஒப்பிடப்படுகிறார்கள் என்று. காந்தியுடன். உண்மையிலேயே காந்தி உயிரோடிருந்து, இப்பொழுது ஏதாவது உண்ணாவிரதம் என்று துவங்கியிருந்தால் என்ன கதியாகி இருப்பார் என்று கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். முதலில் அவரை உள்ளே தள்ள என்ன வழி என்றுதான் சிந்தித்திருப்பார்கள். அவருக்கும் வருமானவரி நோட்டீஸ் போயிருக்கும்.
அடுத்து ஞாயம் கேட்டுப் போராடும் அவர்களை காந்தியளவுக்கு நேர்மையாய் இருந்தால் மட்டும்தான் அவர்கள் கேள்வி கேட்க வேண்டுமா? மற்றவர்கள் எவரும் கேள்வி கேட்கக்கூடாதா?
ஓட்டுப்போட்டுவிட்டு வாயையும் விரையும் பொத்திக்கொண்டு எல்லாவனும் கொல்லையடிப்பதைப் பார்த்து நிற்கவேண்டுமா?
நன்றாக யோசியுங்கள், இப்படி ஒரு போராட்டம் துவங்காமல் இருந்திருந்தால் நாளைய நம் இந்தியாவின் நிலை என்ன? இங்குள்ள ஏழை மக்களின் கதி என்ன? நேர்மையானவர்கள் என்று உறுதிப்படுத்தினால் மட்டுமே இந்த கொள்ளையர்களை கேள்வி கேட்க முடியுமா என்ன?
முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்களாம் அவர்கள், அதனால் நம்பமுடியவில்லையாம்.
அப்படியானால் கொள்ளையர்களை நம்புவீர்கள் இவர்களை நம்பமுடியாதா?
புதிதாக ஒரு இயக்கம் வரும்பொழுது இப்படித்தான் கருத்து முரண்பாடுகளும் குழப்பங்களும் உருவாகிவிடும். அதையெல்லாம் வென்று கடந்து வர நாம் முனையவேண்டும். அதைவிடுத்து நொட்டை சொல்லி மக்களை திசைதிருப்ப முயலவேண்டாம்.
100 % யோக்கியத்தனமாய் உள்ளவன்தான் கேள்வி கேட்கவேண்டுமெனில் யார் கேள்வி கேட்பது. மறுபடியும் காந்தியைத்தான் பிறப்புவித்து கொண்டுவரவேண்டும்.