Thursday 29 September 2011

நம் இறைவன் ஒரு விளக்கம்

மிகமிகச் சிறியாதாகவே சிவா,
இயற்கையின் கொள்ளளவில்.

இருப்புநிலையில் மிகப் பெரிதாயே கிருஷ்ணா,
வான்வெளியின் மொத்த அளவில்.

அனுபவிப்பில் இருவரும் ஒருவரே
உருவமற்ற தியான உலகத்தினில்.

காணும் பருப்பொருட்கள் அனைத்தும்
சக்தியின் உருவ வெளிப்பாடே.

உலவும் உயிர்பொருள் உருவில் சிறிதாய்,
பெரிதாய் வாழும் எல்லாம் ஆனைமுகனே.

வலியுணர்வு அற்ற உயிர்த் துடிப்புகள்
இயற்கையின் இனிய உணவுகளே.

மின்காந்த துண்டிப்பில் துடிப்பின்
அசைவமாயே அதன் அணுக்கள்.

மாறிவிழுந்த உயிர்த்துளியாய் மனிதம்
ஆறாம் அறிவுசுமந்த ஆறுமுகமே.

எல்லாமும் தெய்வமாகவே கொண்டாடும்
மரபே இறைக்கலப்பு இந்திரியம்.

Sunday 25 September 2011

மறக்கமுடியவில்லை

அடிவான அமைதி முழுநிலா
பூமிக்கு வைத்த வெண் போட்டு.

உச்சந்தலை உலவும் வெண்ணிலா
பெண்ணழகை முன்னிறுத்தும் விளக்கு.

வான்னிலவினைக் கண்ணுற்றபோழுது
உன் மலர் முகம் நினைவுற மறுத்து,

அதன் கலங்கமிகு கறைகளே
கவனத்தை விழுங்கிநிற்கிறது.

உன்பற்றிய இன்பநினைவுகளில்
மூழ்கித் திளைக்கும்போழுது,

உன் சந்திப்பு மறுத்த நிலையே
 மூளையோரம் முடங்கிக் கிடக்கின்றது.

தேளாய்க் கொட்டிச் சித்ரவதை
செய்து நினைவுகளைச் சிதைக்கிறது.

முழுமதியாய் முகம் காட்டவும்
மறுத்துவிட்டாய்.

முன்னின்று கவிதைமணம் பரப்புவதையும்
நிறுத்திவிட்டாய்.

நிறம் காட்டிப் பரவசப்படுத்திப்
பின் புறம்காட்டி பரிதவிக்கவைக்கின்றாய்.

நிமிடம் நேரம் கழிய மணித்துளிகள்
நித்திரையிலும் வெற்றுத்திரையாய்.

கண் திறந்து ஒரு அசைவை
தந்து என்னைக் கவிழவைக்க மாட்டாயா.

Wednesday 21 September 2011

அடிமையாகாத நீ

அளவு வடிவம் பெற்ற உன் அழகிய
தோள்களுக்கு நான் அடிமை.

நிமிர்ந்த நேர்மையான உன் கூறிய
பார்வைத் தோற்றத்திற்கு அடிமை.

என் விழிகளை காணமாட்டாயா என் ஏங்கும்
உன் என்னோக்கா விழிகளுக்கும் அடிமை.

தெருக்கோடியில் நின்று வாதிட்டு மகிழும்
உன் கம்பீரக் குரலுக்கும் அடிமை.

நம்பி வந்தவர்க்கு இல்லையெனா
உன் கொடை உள்ளத்திற்கும் அடிமை.

என்மீது காதல் என்றுரைத்த வாலிபக்
கூட்டங்களருகே முகம் காட்டவே மறுத்து,

உன் மீது அளவில்லா காதலில் துடித்தும்
கண்டுகொள்ளாத மாசற்ற மனதிற்கு அடிமை.

மாலை ஆதவனின் மறைவு பொறுக்காமல்
கன்னம் சிவந்துகிடக்கும் மேகங்கள்போல்,

மணமுடித்துச் செல்கிறேன், என் காதல்
உணர்த்தமுடியாத சங்கடங்கள் சுமந்தே.

விதித்த தடை

வலைந்த பாதைவழி கடக்கும்
உன் நடனமிடும் இடை.

அத்தனையையும் அனுபவிக்கத் துடிக்கும்
நாட்டமுடனே என் நடை.

அங்குமிங்கும் அசைந்தாடி அழைக்கும்
உன் பின்னலிடப்பட்ட ஜடை.

உள்ளிருக்கும் ரகசியங்களை உலகுபரப்பும்
உன் மெல்லிய ஜன்னல் உடை.

படை திரண்டு நிற்கும் உன்
விழியம்புகளின் ஊர்வலம்.

கடை பரப்பிக் குழப்பி நிற்கும்
உன் மயக்கும் முகத்தழகு.

ஊஞ்சலாட்டத்தில் ஆடிமகிழும்
உன் நெஞ்சம் உதிர்த்த தேன் அடை.

உளுந்து வடை அதற்கு ஏன் துளை,
நடுவினில் ஓர் கருமுத்து பொட்டு.

சுற்றிப் பார்ப்பின் சுழலும் சுற்றம்
சுத்தமாக விதித்த சுகத் தடை.

காதலின் கவிதைகள்

நாகங்களின் அற்புத நடனம்
அதன் புணர்வு ரகசியம்தான்.

கயிறு இழுக்கும் போட்டிகொண்ட
புணர்வு மிகமிக அழகு.

நீண்ட நேர கூத்துதான் ஆனையாரின்
கட்டுப்பட்டப் புணர்வு.

கலவி சுகம் முழுமை பெற்றது
குயில்களின் புணர்வு.

புணர்வுகளே வாழ்க்கையாய்க் கொண்டது
பஞ்சு முயல்களின் பள்ளியறை.

காட்டுராஜாவின் கதையே வேறு
கண்டவளுடன் காதல்.

மனிதக் கதறல்களுடனே முடியும்
காட்டுப் பூனையின் கலவி மணம்பரப்பி.

கண்ணுக்குப் புரிவதில்லை உண்மைக்
காதலின் உறைவிட்டு வந்த வாள்.

உன் கண்ணசைவு

எனக்காக மட்டுமே வரையப்படும்
உன் கவிதை இதழ்கள்.

உனக்காக மட்டுமே நிலைகொண்டிருக்கும்
என் காதல் கணைகள்.

வெப்பத்தினை உணர மறுத்துவிட்டாய்
தவிப்பினைத் தந்துவிட்டு.

உலையில் கொதிக்கிறேன் தேன் தந்து
பசியாற்ற வரமாட்டாயா.

காரண காரியங்கள் பலவுண்டு.
காட்சிப் பொருட்களும் இங்குண்டு
கலைக்கூத்தாட களமுண்டு.
கைத்தாளம் தட்ட மனமுமுண்டு.
கண நேரக் கைகலப்புமுண்டு.
கவிதை வழி நாணமுமுண்டு.
கண்ணில் மையிடக் கருவியுமுண்டு.
கரிசனம்கொண்ட ஜென்ம வரமுமுண்டு.


கருணைக் கண் திறக்க ஏதேனும்
வழியுண்டா? தினவுகொண்ட தோள்களே!

Tuesday 20 September 2011

iac and janlokpal

how the corruption starts:
the govt officials 're delaying all the "day to day" regular processes.
for finishing these processes early, the public 're cornered to give bribe money.
so the public and the business people 're being pushed to create black money to give bribe to the govt officials.
because of to create the black money, they've to suppress the accounts and caught in the hands of the same govt officials and to give another bribe. so this's going on and on.
these chain goes allover the fields, even in judicial.
so the complete system 's been collapsed.

this doesnt mean that the public 're also indulging corruption, if the things 're on the right path way no corruption 'll be in india.

so the black money holders 're ready to puchase a 1lakh worth land to, by giving 15 lakhs.
and the price hike of gold also 's only because of the indian blackmoneys.

the poors'll only be the resultant sufferers. they cannot even see the gold in future, which is the worst ever happening in india.

strong janlokpal with high punishments can only cure the country in a short term span.

Monday 19 September 2011

உன் ஸ்பரிசம்

சுவைநிறைந்த ஒட்டு மாமரம்,
ஒட்டி நின்ற மாங்கனி சுட்டுநின்றது.

சுட்டு நின்ற உன் சுவாசம்
தென்றலையும் விட்டு வைக்கவில்லை.

விட்டு விட்ட ஆவி எட்டிவிட்ட
கனிகண்டு பந்தி வைத்து பதறியது.

பந்திவைத்த உன் இளமை கண்டு
முந்தி நின்ற நாணம் மறைந்தது.

பூக்கள் என்ன செய்யும் பாவம்
புன்னகைத்து மறைந்தே நிற்கும்.

புனிதம் அடைந்துவிட்டது உள்ளம்
உந்தன் உன்னத உணர்வுகள் உணர்ந்து.

உனக்கான தனியிடம்

காதலை எனக்குக் கற்றுத்தந்தது,
என்மீது தைக்கப்பட்ட உன் விழியம்புகள்.

தைத்த உன் பார்வைத் தூண்டில்
சிக்கிய என் காதலினைக் கனியவைத்தது.

காதலையும் எனக்கு மறக்கடித்தது
உன் விளைந்து செழித்த மலர்கள்.

பூங்கொடி விளையாட, வளையாட
இந்தப் பூந்தோட்டத்தில் மடியுண்டு.

கலைந்தோடிக் களைப்பாற
மஞ்சத்தினில் முத்தமுமுண்டு.

நெஞ்சம் மயங்கி மலராட
உள்ளத்திலே உறைந்த உறவுமுண்டு.

Sunday 18 September 2011

நிலவுமுகம் கண்ணுற்றேன்

இன்பம் கலந்து கலையமுடியா
கனவுகள் சுமந்து காற்றினில்
மிதந்து வந்தேன், ஆனாலும்

நிதம் பெற்ற நிச்சயமில்லா
நினைவுகளில் நிம்மதியின்றி
நிலைகுலைந்தே பறந்தேன்.

வானில் வட்டமிட்டு
கீழ்நோக்குங்கால் காற்று
என்பக்கம் வீசும் என்றே நம்பினேன்.

நிலத்தினில் கால்மிதித்து
நினைவுக்குள் வந்தபின் நிலவினைக்
கலக்கத்துடனேயே கண்ணுற்றேன்.

மறைந்திருந்து மயக்கி பின்
மலர்ந்து மனம் வீசத் துடிக்கும்
மல்லிகையினைப் போல,

நிலவுமுகத்தில் நிலைபெற்ற
அமைதியினைக் கண்டு
கலவரத்திநின்று விட்டு விடுதலையானேன்.

சிறகுகளுக்கு சிரமமில்லா
சிந்தனைக்கு வழியுமில்லா
மொத்த அடிமையுமானேன்.

முடிவுறாத என் நாள்

உன் எழுத்து வடிவ ஆறுதல்கள்
கிடைக்கப்பெறாத நாள்,

ஒரு முடிவுறாத நாளின் தன்மையையே
தனக்குள் கொண்டதாய் முடிகின்றது.

மறுநாளின் விடியல்கூட அர்த்தமற்ற
வாழ்வையே உணர்த்திநிற்கின்றது.

ஒரு சிறு கவிதை வரியைக்கூட
கனியவைக்க முடியவில்லை உன்னால்.

கல்லான மனம் கொண்டு
சிலை செதுக்க முனைகின்றாய்.

கதவு திறந்தே இருக்கின்றது
நீ என் மூச்சுக் காற்றை சுவாசிக்க.

முள் படுக்கை

முள் மெத்தையை மஞ்சமாக்கி மலர்ந்து
துயிலும் அழகிய ரோஜாவே,

கலங்கினதுண்டா நீ எப்பொழுதாவது,
நினைத்ததாவதுண்டா,

என் மல்லிகை, துயிலும் மஞ்சம்
ஒரு முள் படுக்கைதான் என்பதினை.

படுக்கை முள் ஆனாலும்
பாழும் மனம் கல்லாகிக் கிடக்கின்றதே!

கல்லைக் கனியவைக்க ஒரு நிரந்தற
வழியாயினும் சொல்லமாட்டாயா.

கோபத்தில் கூட உன் சிவப்பு
கடுமை காட்ட வரவில்லையே.

Wednesday 14 September 2011

பரிணாம வளர்ச்சி

முந்தய முடிவு:
இந்த பூமியில் ஓரறிவு கொண்ட உயிர்ச்சக்தி ஆறறிவுள்ள மனதவுயிராய் வளர்ச்சிபெற்றது கொண்டு பரிணாம வளர்ச்சி என்கின்றோம். அது மனித உருவுக்குப் பின் நின்றுவிட்டதாய் நம்புகின்றோம்.
முக்கியமான கேள்விகள்:
1) பரிணாம வளர்ச்சி என்ற ஒன்று பூமியில்  ஏற்படக் காரணம் என்ன?
2) பரிணாம வளர்ச்சி இத்தனைக் காலம் நடந்து முடிந்து பின்னர் மனிதன் உருவானபின் மட்டும் நடைபெறாமல் நின்று விட்டதன் காரணம் என்ன?
இதற்கான சரியான நம்பும்படியான விளக்கங்கள் விஞ்ஞானத்தில் தரப்படவில்லை.
வளர்ந்துகொண்டிருந்த பரிணாம வளர்ச்சி மனிதவுயிர் உருவானவுடன் நின்றுபோக வேண்டிய அவசியம் என்ன?
அது மேலும் மேலும் புதிய புதிய உயிர்களை உருவாக்கிக்கொண்டேதானே இருந்திருக்க வேண்டும். அது நின்றுபோக காரணம் என்ன?
ஒரு மனித ஆண்,பெண் உறவுகொண்டபின் மனிதக் குழந்தையே பிறந்து வந்திருக்கின்றது.
அதேபோல் எல்லா உயிரினங்களும் அதனதன் இனங்களையே இனவிருத்தி செய்திருக்கின்றன.

இங்கே பூமியில் விஞ்ஞானத்தின்படி எப்படி வெவ்வேறு விதமான உயிர் இனங்கள் உருவாக சாத்தியம் இருக்கின்றது?
ஆக பரிணாம வளர்ச்சி என்பதை விஞ்ஞானத்தின் மூலம் உணர மற்றும் உறுதிசெய்ய முடியாது என்பதே உண்மை.

ஆனால் இவற்றுக்கு சரியான விளக்கம் ஜோதிடத்தில் இருக்கின்றது.

தற்போது செய்திகளில் படிக்கிறோம் "மனிதக் கால்களுடன் ஆட்டுக்குட்டியின் பிறப்பு. குட்டி பிறந்தவுடன் சிலநிமிடங்களில் இறப்பு"என்று.
இதற்குக் காரணம் மனிதன் ஒரு ஆட்டைப்  புணர்ந்ததால் வந்த வினை.
இதில் நாம் உணரவேண்டியது, இதுபோன்ற மாற்றின உடலுறவு,
கரு உற்பத்தியை நடத்துகின்றது.
கரு வளர்ந்து, கலப்பினக் குழந்தையை பிறப்புவிக்கின்றது.
வயிற்றினுள் வளரும்பொழுது உயிருடனேயே இருக்கின்றது, ஆனாலும் பிறந்த சிலமணிகளில் இறந்தேவிடுகின்றது.
அதாவது பூவுலகில் அதனால் உயிர் வாழமுடியவில்லை.

பரிணாம வளர்ச்சியின் அடித்தளம் இங்கேயே மறைந்திருக்கின்றது.

ஜோதிடம் தரும் விளக்கம்:
பூமி தன் நிலையான புவியீர்ப்புச் சக்தியால் மட்டுமே உயிர்களை உருவாக்க முடிவதில்லை.
பூமிக்கு காந்தசக்திப் பாதிப்பினை உருவாக்கும்
இறைச்சக்தி, சூரியன், சந்திரன், அருகாமையில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள், இவைகளின் காந்தத் தூண்டலில்தான் உயிர் உருவாக்கம் துவங்கியது.
இவற்றுடன் முக்கிய நாயகக் கிரகம் astroids.

astroids எனும் விண்கற்கள் கூட்டம் முழ கிரக வடிவில் இருந்தபொழுது, பூமியில் ஒரு தனிப்பட்டக் காந்தச் சுழல் இருந்தது.
அந்தசமயம் புணர்ச்சி கொண்ட மாற்று இன உயிர்கள் புதிய புதிய உயிர்களையே உருவாக்கிக் கொண்டிருந்தன.
ஒவ்வொரு இன உயிர்களும் மனம் போனபடி மாற்று இன உயிர்களுடன் உடலுறவுகொண்டு வாழ்த்தன.
அவைகளே பரிணாம மாற்றங்களை தன்னுள் கொண்டிருந்தன.
பிறந்த புதிய உயிரினமும் உயிரோடு முழுமையாய் வாழமுடிந்திருந்தன, astroids முழு கிரகமாய் இருந்தவரையில்.
மனிதனும் அந்த நிலையில்தான் உருப்பெற்றிருந்தான்.

பின்னர் astroids பல மோதல்களால் சிதறுண்டு பாறைகளாய் மாற்றம் பெற்றபின் பூமியின்மேல் அதன் காந்தச் சுழலும் மாறிவிட்டிருந்தது.
இந்த மாற்றத்திற்குப்பின் உயிரோடிருந்த உயிரினங்கள் அனைத்தும் தத்தம் இனங்களுடனே உடலுறவு கொண்டு, தத்தம் இனங்களையே பிறப்புவித்தன.
மாற்றினத்துடன்உறவு கொண்ட பொழுது குட்டிகள் பிறந்தவுடன் இறந்துவிட்டிருந்தன முழு கிரகமாயிருந்த பொழுது astroids இன் காந்தப் பாதிப்பு இல்லாததினால்.

இப்படியாகவே பரிணாம வளர்ச்சி இந்த பூமிக் கிரகத்தில் நடந்து முடிந்திருக்கின்றது.
இதுவே ஜோதிடத்தின் மூலம் உரைக்கப்படும் பரிணாம வளர்ச்சியின் காரண விளக்கங்கள் ஆகும். உண்மையின் விளக்கமுமாய்.

Saturday 10 September 2011

முஸ்லீம் தீவிரவாதம்

எந்த இந்திய முஸ்லீமையும் நம்பமுடிவதில்லை. வெளியில் யோக்கியர்கள் போலவும் உள்ளுக்குள் தீவிரவாதத்திற்கு உதவிக்கொண்டும், தீவளர்த்துக்கொண்டும் வருவதை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?
முஸ்லீம் அமைப்புகள்தான் தீவிரவாதத்தை ஒழிக்க உத்திரவாதம் அளிக்கவேண்டும். இது தொடருமானால் முஸ்லீம்கள் அனைவரின் மீதுமுள்ள நம்பிக்கை பாழாகிவிடும். இதை ஒவ்வொரு முஸ்லீமும் அதன் நேர்வழி அமைப்புகளும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
காந்தி செய்த முட்டாள்தனம், விரும்பிய முஸ்லீம்கள் அனைவரையும் இந்தியாவுக்குள் வாழ அனுமதித்ததுதான்.

Wednesday 7 September 2011

என் காதலி

பேசியது பெண் கண்,
ஆண் பெண் மடியில்.

நிறைந்த பைகள் கொப்பளித்தது வெளியே
கிழிந்தது இதயம்

ஓட்ட வைக்க இதழ் கள்
கொண்டு வா.

முகத்தில் நுங்குகள்
இதழ்களை  மட்டும் மறைத்து விடு

நஷ்டமாகிவிடும் உன் நினைவுகள்.

மல்லிகையை மிகவும் பிடிக்கும்

மல்லிகாவுக்காக அல்ல
இந்த தாமரைக்காக.

மயங்கிய மனம்

கசங்கிய மனம் கிழிந்த நிலையில்
ஊடலின் உச்சம்
உயிர் மட்டுமே மிச்சம்
விழுந்து விட்டேன் எழ முடியவில்லை.

செய்கிறது ஏதும் அழகில்லை
ஆனாலும் அனுபவிக்கும் அமைதி கிடைக்க
வேறு வழியே இல்லை.

தவிப்பு

கரும்புக் காட்டுக்குள்
கவிழ்ந்து கிடக்கும் எறும்பு போல்
கலவிச் சுகத்தினுள் மூழ்கித்
திளைக்கின்றேன் தவிக்கின்றேன்.

அளவு மீறிய இன்பமும்
தவிப்புதானோ.
மீள மனமில்லை இறைவா,
அப்படியே கொன்றுவிடு.

தீண்டத்தகதவர்கள்

மருத்துவம் கற்கும் மருத்துவர் மகன்,
மருத்துவம் மறுத்து கலப்பை பிடிக்கும்
மண் குடிசை மகன்,
எடுத்த மதிப்பெண்கள் என்னவோ ஒன்றுதான்,
சமூகம் கொடுத்த விழைவு மட்டுமே வேறு வேறு.
மன்னிக்கவே முடியாதது.
முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள்தான்
என்பது மட்டும் உறுதி.
சரி செய்ய இன்னும் நூறு ஆண்டுகள் பிடிக்கும்.
காலம் கனியட்டும் அதுவரை
மதித்திருப்போம் எல்லா மனிதர்களையும்.

மறந்த காதல்

என்னை மறுத்துவிட்டாய்,
ஜாதகம் படித்து கெட்டவனாவான்
என்றவுடன்.

மறக்க முடியவில்லை
பியிந்து போன மனத்தை,
படித்து, பறந்து, பணம் படைத்து, முடிந்த பின்,
அடைந்தேன் அழகு தமிழச்சிகளை,
மலைத்தேன் மலையாள மங்கையரின்
கொங்கைகளை கண்டு,
கனிந்தேன் கன்னடப் பைங்கிளிகளின்
கைகளில் நின்று,
தெலுங்கு நங்கையர் அழகு பற்றி
சொல்ல வார்த்தையில்லை,

நல்லவன், வல்லவன் என்கிறார்கள்
இப்பொழுது , சொல்லட்டும்
உடல் ஒன்றும் மனம்
சம்பந்தம் கொண்டதல்லவே.

ஆனாலும் மாறவில்லை
மனம் உன் நினைவுகளிலிருந்து.

மறுபடியும் உன்னை சந்திப்பேன்
அடுத்த ஜென்மத்தில் நல்ல ஜாதகத்துடன்.

ஜெயிப்பது ஜாதகம்தான்.

கவிதைக்கண்கள்

நீ சொன்னால் சரியாய்தான் இருக்கும்.

கனிந்த கண்ணசைவில் கவிதையாய் பாடினாய்
காதலை கேட்டபொழுது,
முடியாதது என்றாய் காதல் கண்களுடன்,
மணமுடிக்க கேட்ட பொழுது.
பார்க்கும் நேரமெல்லாம் இருக்கின்றாய்
கண்களில் கண்ணீர் கசிவுடன்.
புரியவில்லை எனக்குமட்டும், ஆனாலும்
நீ சொன்னால் சரியாய்தான் இருக்கும்.

வாழ்

நாளை நாளை என்றவர்க்கு
நாளை என்றொரு நாளை,
நாளை வரும்.
வேளை வரும்போது நாளை
என்னாது மூளை கசங்கினால்,
சோலை ஆஹஉம் உன் நாளை.
காலை வேளை, மாலை வேளை
பாராது வேலை முடிப்பின்,
சாலை செல்லும் பூவையும் மலரும்.
சோலை பூக்களும் இனிக்கும்,
கார் கூந்தலும் மணக்கும்,
இன்று வாழ், வாழ்வும் அர்த்தமுரும்.

வம்புக்காரி

சீ உன் இடை மடை
சிலை, குலை ஒரு மலை
களை உன் விலை அட மடச்சீ,
மாட்டத்தா என் இடைச்சி, பொழுதாச்சி.

போய்யா உன் உடை பெரும் தடை,
இடை உன் மனத்தடை,
கரும்பு, கருத்து இரும்பு
ஆட்டத்தந்து மாட்டக்கேள் தரேன்
என் மாட்டுக்காரா.

விலைமகள்

அலைபேசி, உன் விலைபேசி,
பின் கலைபேசி, ஆல இலைபேசி,
இளைப்பாறி,
மெல்ல மலைஏறி, குலைபிடித்து,
உலைகொதித்து, நிலைகுதித்து,
கலையிழந்து,
மடிந்து விழுந்த எல்லை கடந்த
நிலையும் ஒரு சிறு மரணம்தான்.
ஆனாலும் உயிர் வாழ அவசியம் இருக்கிறது.
பிணமான பணத்திற்காக.

எல்லாம் இறை

எல்லை கட்டமுடியா வெளி,
கிருஷ்ணா.
அருவம் காண முடியா துடிப்பு,
ஷிவா.
உருவம் மறைக்க முடியா மெய்,
ஷக்தி.
ஆறாம் அறிவு அற்ற உயிர்ப்பொருள்,
விநாயகா.
சாதி மறுக்க முடியா மனிதம்,
முருகா.
வாழ வழி அறியா முட்டாளாய்,
குரு.
விலை பேச முடியா அன்பு,
தாய்.
கரை தாண்ட முடியா கடல்,
தாசி.
சொல்லி அழ முடியா மங்கை,
காதலி.
எல்லாம் இன்பமாய் முடியும்
ஒரு குழந்தையாய் கிருஷ்ணா கிடைத்தால்.

பரிணாமம்

உயிர்வாழ இந்த மண்ணில்
வெளிச்சக்திகளின் பங்கீடு,
ஞாயிறு, திங்கள், வெள்ளி, செவ்வாய்,
புதன், வியாழன், சனி,
நட்சத்திரங்கள்,
சக்தியாகிய ராஹு, ஷிவாவாகிய கேது
மற்றும் கிருஷ்ணா இவைகளின்
மின்காந்தம்.
பரிணாமம் மிகச்சரியாக astroids
கிரகமாக இருந்தவரை இருந்தது.
மனிதன் பிறந்ததும் astroids
உடைந்தபின் பரிணாமம் நின்றுபோனது.
உயிர்களின் முறை தவறிய
உடலுறவுகள் முடிவுக்கு வந்தது.
பின்னர் எப்பொழுதும் மாற்று
உயிரினங்களின் உடலுறவுக்குழந்தைகள்
பிழைக்கவில்லை.
மனிதன் தெய்வமாக மாற
தியானம் பிறந்தது.
தியானமே கிருஷ்ணாவும் சிவமும்.

வெளி

வான்வெளியில்
வெற்றிடமாய் கிருஷ்ணா.
விண்வெளியில்
அணுவின் எலேக்ட்ரானாய் ஷிவா.
அணுவின் ப்ரோடானாய் ஷக்தி.
ஆனவை எல்லாம் இவைகள்தான்.
எங்கும் எதிலும் இவைகள்தான்.
மொத்த உலகமும் அவர்கள்
கையிலேதான்.
நம் அறிவில் ஏதுமில்லை.
அவர்களில் கலப்பதை தவிர
வேறு வழியில்லை.

Tuesday 6 September 2011

உண்மை

கால அவகாசம் தேவை,
எத்தனை எலெக்ட்ரான், ப்ரோடான் உள்ளது
இந்த அண்டசராசரத்தில் என சொல்வதற்கு.
சொல்வதற்கு முடியாதது,
வானத்தின் உயரம், கொள்ளளவு,
எண்களின் முடிவு எண்,
ஒரு கோட்டின் புள்ளிகள்,
பூஜ்ஜியத்தின் தன்மை,
தாயன்பின் அளவு,
கால முடிவு,
எதனால் செய்யப்பட்டவை
நிறம், சுவை, சுகந்தம், இசை, தீ,
எலெக்ட்ரான், ப்ரோடான், நியுட்ரான்,
என்ற அறிவு.
பரம காந்தமையமாய் சிவாவும்,
எங்கும் வியாபித்திருக்கும் கிருஷ்ணாவும்
அல்லாமல் வேறேது.
மொத்த உலகின் பரப்பளவின்
மிகப் பெரியதாய் கிருஷ்ணாவுமாய் 
மிகச் சிறியதாய் சிவாவுமாய்.

பாக்கியம்

முலைப்பாலை உறிஞ்சி அருந்தும்
மழலையின் மதமதப்பு,
தோல்வியின்போழுது ஆறுதலாய்
தாயன்பு,
கவலையின்போழுது தோழ்தழுவும்
நட்பு,
சிறந்த நகைச்சுவையின்
ஆரவார சிரிப்பு,
மறக்கவே முடிய சுவை நிறைந்த
விருந்து,
இன்பத்துடிப்பில் காதலியின்
முனகல்,
கண் ஜாடை கிடைத்த காதலன்
மலர்ச்சி,
இவையெல்லாம் கவலை மறந்த நிலையே.
கிடைப்பதில்லை எல்லோர்க்கும்.

காலை

வானத்து தேவர்களின்
வாழ்த்து
ஞாயிறின் ஒளிக்கீற்று
குயிலின் சுருதி சுத்த
கூவல்
பிராணன் சுமந்து வரும்
தென்றல்
ஜென்மம் ஏற்றி கரைகிற
காகம்
மாமி வீட்டு
கற்ப்பூர, சாம்பிராணி வாசம்
கன்னிப்பெண்ணின்
வாசல் கோலம்
பக்கத்தில்
மழலையின் சிரிப்பு
எங்கேயோ முழங்கும்
சர்ச் மணியோசை
தூரத்து
ஆம்புலன்ஸ் கதறல்
அப்பாடா விடிகிறது
இந்தியக்காலை.

வழியில்லை

காதலி
இல்லா வாழ்க்கை
காதல்
இல்லா பூவை
காமம்
இல்லா அழகு
கட்டுடல்
இல்லா காளை
கார்கூந்தல்
இல்லா கன்னி
கனிவு
இல்லா காதலி
கனவுகளே
இல்லா காதல்
கட்டியணைக்க
இயலா மனைவி
கலவி
கொள்ளா கணவன்
கவனிக்க
இயலா பிள்ளை
கல்வி தர
இயலா பெற்றோர்
கற்று
அறியா குரு
கன்னம்
சிவக்கா முத்தம்
கடைந்து
முடிக்கா கலவி
கருணை
இல்லா மனிதம்
கவலை
நிறைந்த முதிர்கன்னி
காண கண்
இல்லா பணம்
இவை இருப்பு,
தேவையில்லதவையே.

நஷ்டம்

நனையும்
உன் நாணத்தினால்
மறுக்கும்
உன் சந்திப்பில்
கிடைக்க துடிக்கும்
உன் ஸ்பரிசத்தினால்
மலர முடியாத
உன் சிரிப்பினால்
மறைய மறுக்கும்
உன் வளைவுகளால்
நிலைகுத்திய
உன் பார்வையினால்
நிகழ்ந்து கொண்டே இருக்கும்
முடிவறியமுடியா
உன் காதலினால்
நஷ்டம் எனக்கு மட்டுமே.
புரிந்துகொள் அவகாசமில்லை.

வைரமுத்து

கால்களால் திரைக்கவிதைகள்
எழுதப்பட்ட  காலகட்டத்தினில்
கவிதைகளை குருதியினில்
தோய்த்து
வாழ்ந்த வாழ்க்கையை
கருவாக்கி
வார்த்தை விளையாட்டு
கட்டி
கருத்து ரசம் ஒழுக வடித்த கவிதைகள்
தந்தவன்.

Thursday 1 September 2011

வெறியன்

விஞ்ஞானி வசியின் மகன் சிவா, ias படித்த இரட்டைப்பிறவி மகன்களில் ஒருவன், இன்று பிரதமராக  பதவிப்ரமானம் எடுக்கிறார்.
அப்பா வசி, அக்கா மாலா, தம்பி ரவி, மற்றும் நாட்டின் எல்லா தலைவர்களும் இருக்கின்றனர்.
தாய் சனா கொல்லப்பட்டிருந்தார். அக்கா உச்ச நீதிமன்ற நீதியரசராக உள்ளார். தம்பி நாட்டின் ராணுவ ஜெனெரலாக இருக்கின்றார். அப்பா வயது 85 ஆகி ஓய்வில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
 பிரதமராகி ஆறு மாதங்களுக்குப்பின் நாடு பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாகியது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுப்படிப்புக்கும் இலவசக்கல்வி.
வீடு இல்லாத எல்லா குடும்பத்திற்கும் தனியாக அவரவர் படிப்புக்கு ஏற்றாற்போல் வீடு.
படிப்பு முடித்த மாணவர்கள் அனைவருக்கும் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு.
எல்லா குடும்பத்திற்கும் இலவச மருத்துவ வசதி.
ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு விபரங்களும் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டை.
கருப்புப்பணம் எல்லாம் நாட்டிற்குள் வரவழைக்கப்பெற்று அதில் 50 % வரிக்காக எடுத்தபின் மீதம் வெள்ளையாக மாற்றப்பெற்றுவிட்டது.
வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட வழிமுறைகள்.
 நல்லமுறையில் நாடு சென்று கொண்டிருக்கும்பொழுது சிபிஐ, பிரதமரை கைது செய்கிறது.



flashback நிகழ்ச்சிகள்.
வசிக்கு 29 வயதில் திருமணம் நடந்தேறியது. முதலில் ஒரு பெண் குழந்தை, மாலா பிறந்தது. பின்னர் ஆண் இரட்டைக் குழந்தைகள், சிவா மற்றும் ரவி பிறந்தனர். 
இந்த நேரம், நாட்டில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் மற்றும் அரசியல் சக்திகள் வசியிடம் ரோபோக்கள் தயாரிப்பு பற்றிய ரகசியங்களை அறிய பயமுறுத்தின.
மறுத்ததினால் சனாவைக் கொன்று தீர்த்தனர்.
வசி, வெறியுடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வடகிழக்கே ஒரு கண்காணா இடத்திற்கு குடிபெயர்ந்து, குழந்தைகளை வளர்த்தான்.
மாலா, சட்டம் பயின்று நீதிபதிக்கும் கற்று, நீதிபதியானாள்.
சிவா, ias கற்றுத்தேர்ந்தான்.
ரவி, ips முதல் மாணவனாக படித்து முடித்தான்.
சிவா கலெக்டராக பதவியேற்றான். ரவி ராணுவத்தில் சேர்ந்து பெரிய பதவி பெற்றான்.
இந்த சமயத்தில் அப்பா வசி, தன் கடந்தகால வாழ்க்கையின் உண்மைகளையெல்லாம் மகன்களுக்கும் மகளுக்கும் புரியவைத்தார்.
வீறுகொண்டு எழுந்தனர் மூவரும்.
நாட்டின் சாபக்கேட்டினை ஒழித்து நாடு முழுமையாக மாற்றம் பெற சபதம் பூண்டனர்.
ரவி, நேர்மையான வழியில் ராணுவத்தின் தலைமை பொறுப்பு ஏற்கவும்,
சிவா, ஊழலில் திளைத்து ஊழல் செய்யும் அரசியவாதிகள், அதிகாரிகள் மற்றும் தீவிரவாதிகள் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்த அரசியல்வாதியாக வரவும், உறுதி எடுத்தனர். 


வருடங்கள் பல கழிந்தன.
மாலா, உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறாள்.
சிவா, ஊழல் நாயகனாக நாட்டின் ராணுவ அமைச்சர் ஆகிறான்.
ரவி, நேர்மையான ராணுவ அதிகாரியாக, ராணுவ ஜெனரலாகிறார்.
எல்லா வழிகளிலும், எந்த நேரங்களிலும் மூவரும் தங்களின் பதவியின் பலத்தினைக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர்.
தேவையான நேரங்களில் மூவரும் ரகசியமாக சந்தித்துக்கொண்டனர்.
ஆனால் சிவாவின் அந்தரங்க காரியதரிசிக்கு மட்டும் சிவாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது.
சிவா இப்பொழுது, நாட்டின் மோசமான அத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரையும் நண்பர்களாக கைக்குள் வைத்திருந்தான்.
சிவா, முடிவுசெய்தபடி தான் ஊழலின் மூலம் சேர்த்த பணத்தையெல்லாம் கொண்டு வெளிநாடு ஒன்றில் ஒரு பேங்க் ஒன்றைத்துவக்குகிறான்.
மற்ற ஒழல்வாதிகள் அனைவருக்கும் தன்னுடைய பாங்க்கை பற்றி கூறி, எல்லோரையும் அதில் பணத்தை டெபொசிட் செய்ய அறிவுரைக்கிறான்.
அதற்காக அந்த பேங்க் ஏற்ப்படுத்தப்பட்ட நாட்டிற்கு அனைவரையும் ரகசியச் சுற்றுலா அழைக்கிறான்.
ரகசியச் சுற்றுலா என்பதினால் எல்லோரும் செற்றுவர தீர்மானிக்கின்றனர்.
ஒரு வார சுற்றுலா மூன்று கப்பல்களில் சென்றுவர ஏற்பாடு செய்யப்படுகிறது. 
சின்னச்சின்ன ஊழல்வாதிகள் அனைவரும் வாலண்டியர்களாக ஏற்ப்பாடு செய்யப்பட்டு கப்பல்கள் கிளம்புகின்றன.
மறுகரையில் செல்லவேண்டிய நாடு நெருங்கும்  பொழுது கப்பல்கள் குண்டுகளால் பொடிப்பொடியாக தகர்த்து எறியப்படுகிறது.
நாட்டில் தற்பொழுது நன்மை செய்யக்கூடிய தலைவர்களும், அதிகாரிகளும் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.
நல்ல சந்தர்ப்பம் அமைந்து சிவாவையே எல்லோரும் பிரதமராக தேர்ந்தெடுக்கிறார்கள்.
சிவாவின் p.a  வுக்கு மட்டும் சந்தேகம் ஏற்பட்டு சிபிஐ ன் மூலம் கண்காணிக்கிறான்.

உணர்ச்சிகள்

உரசின ஸ்பரிசம்
உள்ளுள் உசுப்பின
சிரசு, காய்ந்து
சீற்றமுடன் உணர்வு.
சிந்தனைக்கும் இடமின்றி
சிரிக்கவும் மனமின்றி
சிலையாய் நிற்கின்றேன்.
சில கருணைக்கொலைகளை
மட்டுமாவது
செய் இல்லை அனுமதி.
வீழ்ந்துகொண்டிருக்கின்றேன்
வான் எழுந்த பந்தாய்.

கள்ளு

ஆழாக்கே எனினும்
அத்தனையும் அமுதம்.
 படைப்பினில் உச்சமாம்
இறைவனின் அமைப்பில்,
உண்ணும் ஒவ்வொருவரின் கூற்று.
உள்ளே நுழைந்ததும்
உலகமே இன்பம்தான்.
கவலையெல்லாம்
காலைப்பனியாய்.
சிந்தித்தால் அவ்வளவுக்கும்
விடைதான்.
கேள்வியேதும் மிச்சமில்லை, .
துணிச்சலின் உச்சமாய் உன் வாசம்.
கவலை கொள்ள வழியுமில்லை.
இயலாதவை எல்லாம் முடியும்.
உன் சிரிப்புக்கும் அழகிய அர்த்தம்.
அழுகைக்கும் சுரம் பிரிக்கும் சோகம்.
ஆனாலும் உன்மீது வெறுப்புத்தான்
ஒவ்வொரு பூவைக்கும்.
உனக்கு தோல்விதான் என்னிடம்
என் காதலுக்காய்.

உன் காதல்

சட்டென்று பூத்த புன்னகை மலரே,
உன்னை உசுப்ப,
இந்த சூரியன் செய்த தவம்தான் என்ன?
தவறு என்ன கிழக்கில் உதித்ததா?
விரும்பினாலும்,
சூரியனை சுற்ற மட்டுமே இயலும்.
நெருங்கியதிலும் நெருப்பையே நிறைக்கும்.
கண்கண்டதைஎல்லாம் காதலிக்கும்.
விடுவதில்லை,
தெரியுமா உனக்கு.

உன்னுள்

தடாகத்தினுள்
தவறி விழுந்த கட்டெறும்பு
கிடைத்த கழி கவ்வி
உயிர் பிழைக்க துடிப்பதுபோல்,
உன் உயிருக்குள் நான்.

குழப்பம்தான்

பிசகவே முடியாத படைப்பின் ஒழுங்கு
பிசகிவிடும் சில சமயம்.
தந்தை மகள் உடலுறவு- செய்தி.
குருவின், மாணவி வெறியுறவு.
சிசுவின் ஆட்டுத்தலை பிறப்பு.
கரு பெண்ணானால் கள்ளிப்பால் எண்ணம்.
artis நோயுடன் பிள்ளை வரவு.
இந்திய பிச்சையின் வாழ்வு.
கதிரவனையே காணாத வேசிமகள்.
என்ன இறைவா உனக்கு என்னதான் பிரச்சனை.
மூளையில் சுளுக்கிவிட்டதா.

புண்ணியம்

எப்பொழுதும் கண்ணீர்
இலவசமாய்,
கூறும் அறிவுரையும்
சரளமாய்,
கிடைத்துவிடும் கஷ்ட்ட
நிலையினில்.
கிடைப்பதில்லை நிலை
காக்கும் கைகள்.
கை கொடுத்த கைகள் கூட பலன் காண
குழி பறித்துவிடும்.
நல்ல நட்பு, தாயன்பாய் மலர்ந்த நிலை
கண்டு கை காட்டு.
நன்றிமறவாமல் கையும் கொடு.

புரியாப்புதிர்தான்

கனிந்த காதல்
கனியவிட்டவள்  ,
கடைக்கண் காட்டி
கதை பல  சொன்னவள்,
கடைவீதியின் கண்களையெல்லாம்
கலைத்தவள்,
கவிதையாய் தன்னுள்
வாழவைத்தவள்,
கருத்தராத்திரி கைகால்களை தீண்டி,
கட்டியணைத்து முத்தமிட்டவள்,
கல்யாண வேளையில்
குடும்பம் மறுத்தபொழுது
மனமுடைந்தவள்,
காதலை உறவினர்க்காய்
காணிக்கையாக்கி,
கடைசியில் குழந்தைக்கு
பெயரைச்சூட்ட,
என்னை கைவிட்டவள்.
இப்பொழுதும் கனிவாக
சிரிப்பவள்.
காதலுக்கு கோவிலையே
கட்டிக்கொண்டிருப்பது.
எப்படி உங்களால் மட்டும் முடிகிறது.
புரியாப்புதிரே.

இறந்த காதல்

இறந்திருந்த நான்
ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்த்துடிப்புடன்.
உன் இதயத்தை
தொலைத்துவிட்டிருக்கிறாய்.
என் உயிர் உன்
இதயத்துடிப்புடன்.
கட்டாயம் விட்டுச்சென்றிருக்கிறாய்.
காலம் கடந்துவிட்டதால் திருப்பி
அனுப்புகிறேன்.
மறுபடியும் தவறவிட்டுவிடாதே.

நட்பு, காதல்

நிலம் சேர மழைத்துளி
மறுப்பதேயில்லை.
தென்றலை கானகம்
முடிந்துவைப்பதில்லை.
மல்லிகை மணம் பரப்ப
துடிப்பதுவுமில்லை.
மன்றம் வந்த தாமரை
தவிப்பதில்லை.
தண்ணீருக்கு தடம் பதித்துப்
பழக்கமில்லை.
தலைவிவே உனக்கு ஏன் அந்த
எண்ணம் வந்ததேயில்லை?
அவிழ்ந்த உயிர் மறுபடியும்
ஓட்டுவதில்லையாம்.
ஒட்டி நின்று கலங்கும் நண்பனே ,
உன்னை வணங்கி நின்ற
மனதை உனக்குப்புரியுமா.