Tuesday 2 July 2013

நரேந்த்ரமோடி...


பொதுவாகவே சிலர் நரேந்த்ரமோடியினைப் பற்றி அவதூறுகள் பரப்புதலையே நெட்டில் செய்துகொண்டு, தங்களின் நடுனிலைத் தன்மையினை நிரூபிக்க முயல்கின்றனர். அதாவது அவரைப்பற்றி மனம்போனபடி எழுதிவிட்டால் அவர்கள் ஞாயவாதிகள் என்று எடுத்துக்கொள்ளலாம், என்று அர்த்தமாம். கொள்ளை, கொள்ளை, இதுவரையிலும் உலகமே கண்டிராத அளவுக்கு இந்தியப்பணத்தை மொத்தம் மொத்தமாய்க் கொள்ளையடித்து, அவற்றை வெளிநாடுகளில் பதுக்கிகொண்டு இந்தியப் பொருளாதாரத்தையே நாசமாக்கிக்கொண்டு இருக்கும் சோனியாவின் நல்லாசியுடனான மன்மோகனின் காங்க்ரஸ் அரசு, இவர்களுக்கு ஒன்றுமில்லையாம். ஆனால் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டு ஆட்சி நடத்தி குஜராத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும், உலகின் அனைத்து நாடுகளும் விழித்துக் கண்ணோக்க வைத்திடும் அளவு வளர்ச்சியினை காட்டிய மாநிலமாகவும் மாற்றிக்காட்டிய மோடி, இவர்களுக்கு அயோக்கியனும், மதவாதியுமாம்.  கொள்ளையடித்த பணத்தையெல்லாம் மிக லாவகமாக பங்கிட்டு அனைத்து தோழமைக் கட்சிகளும் பலனடைந்து, அவர்களுக்குள் ஜால்றா தட்டுவதில் அர்த்தம் இருக்கின்றது. இவர்களுக்கு என்ன வந்தது?

மோடி மதவாதி, நாட்டைக் கூறுபோட்டுவிடுவார், எங்கிறார்கள். இவர்கள் இப்படிக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 2002ல் நடந்த கலவரம் பற்றியே வாழ்நாள் முழுமைக்கும் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. எல்லா மாநிலங்களிலும் ஏதாவதொரு வகையில் தீர்க்க சிரம்மான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அவைகளையே திரும்பத்திரும்ப சொல்லி நோகடிக்கக்கூடாது. அதன்பின் ஏதாவதொரு வகையில் கலவரமோ அல்லது ஒரு ஒற்றுமையற்ற நிலையோ குஜராத்தில் வந்ததுண்டா? எந்தப் பிரச்சனையாயினும் அவற்றை சிறந்தமுறையில் மோடி, யாருக்கும் எந்த துன்பமும் வராவகையில் கையாண்டிருக்கின்றார். அதுதான் உண்மை. சாதனைபுரிந்த ஒருவர், சாதிப்பார், நம்நாட்டையும் ஒரு தலைசிறந்த நாடாக ஆக்கிக்காட்டுவார் என்று நம்புவதில் என்ன தவறு இருக்கமுடியும். ஒன்றுமட்டும் நிச்சயம், இன்னொருமுறை காங்க்ரஸ் ஆட்சிக்குவந்தால், நம் இந்தியா, இத்தாலியின் அடிமைநாடாகவும், ரூபாயின் மதிப்பு, டாலருக்கு 200 ரூபாய்வரைகூடவும் சென்றுவிடக்கூடும். ஸ்விஸ்வங்கிகளைப்போல உலகம் முழுமைக்கும் எல்லாநாடுகளும் வங்கிகள் துவக்கி நடந்துகொள்ளத் துவங்கிவிடும். அழிவுப்பாதையில் செல்வதை முதலில் நிறுத்தியாக வேண்டும். மேலும் பிஜெபி மட்டுமே நதிகள் இணைப்பை செயல்படுத்தும் திட்டத்தை முன்னிருத்தி வைத்திருக்கின்றார்கள்.  

பிஜெபி, அன்னாஹஸாரே, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இதுபோன்ற ஒருங்கிணைந்த மனம் கொண்ட கட்சிகள், இந்தியாவினை முன்னேற்றத் துடிக்கும் எண்ணம்கொண்டவர்கள் கூட்டாக இணைந்து நாட்டைக் காப்பாற்றிட முனையவேண்டும்.

Wednesday 13 March 2013

ஒரு தீவிரவாதம், ஒரு கடவுள்

ஒரு தங்கை, அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தம்பிக்கு படிக்க மெடிக்கல் சீட் கிடைத்திருக்கிறது, அவனை நன்றாகப் படிக்க வைத்திட வேண்டும். நம்மால்தான் படிக்கமுடியாமல் போய்விட்டது, அவர்களாவது சிறப்பாக வாழ்ந்திட வழிசெய்திட வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு பூர்வீகமாய் பாத்தியப்பட்ட அந்த 20 செண்ட் நிலம். அது ஒன்றே அத்தனைக்கும் ஆதாரம். நான்குவழிச் சாலையின் உபயம். வாஜ்பாய் வாழ்க. அதன் தற்போதய விலை, 20 லட்சம். ஆனால் அவனின் கையில் காலனா கிடையாது. இதுதான் அவனின் நிலை. சிறுவயதிலேயே பெற்றொர் இறந்துவிட்டதால், அவன் வாழ்வு மிகவும் கடினமாகிப் போய்விட்டது.
யாரோ ஒருவர் அமெரிக்காவில் பெரிய இஞ்சினியராம், அந்த இடத்தைக் கேட்டுவந்தார். ஒருமாதிரியாகப் பேசி மொத்தம் 19.5 லட்சத்திற்கு முடிவாகியது. 15 நாட்கள் மட்டுமே கெடு. அவரும் அதன்பின் அமெரிக்காவுக்கு திரும்பிட வேண்டியதிருந்தது. ஒரே கண்டிஷன், அது ஜாய்ண்ட் பட்டாவில் இருப்பதால் தனிப்பட்டா பிரித்து வாங்கித்தர வேண்டுமாம். தனிப்பட்டா ஒன்றும் கஷ்டமில்லை என்று நினைத்ததுதான் தவறாகிப்போனது. தாசில்தார் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தார். அவனும் தினமும் அலைந்துகொண்டுதான் இருந்தேன். எல்லாமும் சரியாகவே இருந்தது ஆனாலும் தாசில்தார் ஏன் இப்படி அலையவிடுகிறார் என்பது புரிந்துகொள்ள முடியவில்லை. கொஞ்சம் முண்டிக் கேட்டபொழுது கிராம அதிகாரி சொன்னார், கையெழுத்துப்போட தாசில்தார் பணம் கேட்கிறார். பொதுவாக இதுபோன்ற இடத்துக்கு 2 லட்சம் வாங்குவார், நாந்தான் குறைத்துப்பேசி 1 3/4 க்கு சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்றும், பணம் கைமாறியதும் வேலை முடிந்திடும் என்றார். அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவனால் அவ்வளவு பணம் கொடுக்கவும் முடியாது. மனமுமில்லை. வாக்குவாதம் ஆகிப்போனதால், ஏறுக்குமாறான காரணங்களைக் கூறி வேலைமுடியாமல் ஆக்கிவிட்டார், தாசிதார். இடமும் சொன்ன நாளில் முடிக்கமுடியாததால் எல்லாமும் தடையாகிப்போனது. அவன் வாழ்க்கையின் மிகப்பெரிய அவமானம். தங்கையை மணமுடிக்க இன்னும் சிலகாலம் காத்திருக்கவேண்டியதாகிற்று. தம்பியின் படிப்பும் கேள்விக்குறி. கோபம் அவன் கண்களை மூடிவிட்டது. இதற்கெல்லாம் காரணமான அந்த தாசில்தார்மீது வெறுப்பேறியது. அவனுக்கு அதைப் புரியவைக்க வேண்டும். வாழ்க்கையில் அவன் இனி தவறே செய்திடக்கூடாது. அவனின் எண்ணம் அதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது. கொள்ளையடிப்பதை பணமுள்ளவனிடம் அடிக்கவேண்டியதுதானே, நான் என்ன பாவம் செய்தேன், என்றெல்லாம் புலம்பித்தீர்த்தான் மனுதுக்குள்ளே.
தாசில்தாரின் வீட்டருகே சென்று அவரின் நடவடிக்கைகளை அனைத்தையும் நோட்டமிடத் துவங்கினான். பத்துனாட்கள் மாறுவேடத்தில் நெருக்கமாகக் கவனித்தான். காலையில் 4 மணிக்கே எழுந்துவிடுகிறார். சரியாக 6 மணிக்கு தினமும் வீட்டருகே உள்ள கோவிலுக்குச் செல்கிறார். அடுத்தவன் வாழ்வை கொஞ்சமும் இரக்கமின்றி அழித்துவிட்டு, கடவுளுடன் என்ன வழிபாடு வேண்டியதிருக்கிறது? செய்யற தப்பையெல்லாம், பாவங்களையெல்லாம் செய்துவிட்டு அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால்மட்டும் பாவம் கழுவப்பட்டுவிடுமா? இதில் அங்கிருந்த பிச்சைக்காரர்களுக்குவேறு தானம்! அதன்பின் அருகிலுள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி. மைதானம் செல்லும் வழியில் ஒரு சிறு பாதை. அங்கு ஆளரவமே இல்லை. சரியாக பத்துக்கு அலுவலகம். இப்படிப்பட்டவங்கள் எல்லாம் வேலைக்குமட்டும் சரியாகவே சென்றுவிடுகிறார்கள். மாலை 7 க்கு மறுபடியும் வீடு. இதுதான் அவரின் ஒருனாளின் வாழ்க்கை. இவற்றில் கோவிலிலிருந்து மைதானம் செல்லும்வேளை அந்த சிறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை, அவரைத் தாக்க சரியான இடமாக அவனுக்குத் தோன்றியது. அந்த நேரத்தையே முடிவுசெய்தான். ஒரு 14எம்எம், ஆறடிக் கம்பி ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டான்.
அந்த இடத்திற்கு அந்த நாள் வந்தார். சரியாக பின் மண்டையில் ஒரே அடிதான் சுருண்டு வீழ்ந்துவிட்டான். கிரிக்கெட்டின் புல்ஷாட்பொல். கோவிலுக்குச் சென்று அதே கடவுளை தரிசித்தான். அவர் அவனைப்பார்த்து இன்னும் சிரித்துக்கொண்டுதான் இருந்தார். ஒரு தீவிரவாதம், உருவாக்கம்.
 

Monday 11 March 2013

ஜெல்லிபோன்ற உயிரினம்

அந்த கேலக்சியின் பெயர் எஃஸ்யி. அதில் அந்த சூரியனின் பெயர் எஃஸ்யி91. நம் சூரியனைப் போல லட்சம் மடங்கு பெரியது. மொத்தம் 7500 கிரகங்களைக் குடும்பமாகக் கொண்டது. அதில் ஐ23 என்ற கிரகத்தில் வாழும் சிலிகானால் ஆன ஜெல்லிபோன்ற உயிரினம், ஜெ எனப்படுவது. அவைகள் ஆன்மசக்தியில் உருவாகி வாழ்பவை. எந்தவிதமான உருவத்திற்கும் மாறத்தகுந்தவை. எல்லாவிதமான உணர்வுகளையும் அறிய வல்லவை. அவைகளின் ஞானக் குழு ஒரு கருவியினைக் கண்டுபிடித்தது.
அதாவது ஒரு ஜெயை அந்தக் கருவியினுள் இட்டு -272.9999 டிகிரி செல்ஷியசுக்கு உறைய வைத்தால் அந்த ஜெ ஒரு எலெக்ட்ரானாக உரு மாற்றப்பட்டுவிடும். பின் அந்த எலெக்ட்ரானை அந்தக் கருவியின் மூலம் எய்தால், அது எலெக்ட்ரானின் கூடுவிட்டுகூடு பாயும் வேகம்போல் செல்ல வல்லது. அதுபோல் அதன் ரிவர்சை போட்டால் மறுபடியும் அதே கிரகத்திற்கு திரும்பிவிடும். 
இப்பொழுது ஒரு பெண்ஜெல் ஜெயை பரிசோதனையாக அந்தக் கருவியில் இட்டு எய்வதாகத் திட்டம். அந்தக் கருவியினுள் ஒரு ஜெயை அமர்த்தியாயிற்று. அதை -272.9999 டிகிரி செல்ஷியசுக்கு மாற்றி பின் எய்தாகிவிட்டது. அது ஒரு எலெக்ட்ரானாக உருமாறி 30 செக்கண்டில் அதற்கு மிக நேர்கோட்டில் அமைந்த பூமியின், தமிழ்நாட்டின், சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் வந்தும் சேர்ந்துவிட்டது. பூமியினை வந்தடைந்ததும் இங்குள்ள காந்தத்தன்மையின் மாற்றத்தால் சிலிகன் ஜெல்லால் ஆன ஒரு பெண்ணாக, நடிகை ஸ்னேகாபோல உருமாற்றம் அடைந்தது.
அவன் சத்திரப்பட்டியிலேயே வாழ்ந்து வருபவன். அவனுக்கு நடிகை ஸ்னேகா என்றால் மிகவும் பிடிக்கும். ஏன் தினமும் அவளைப்பற்றிதான் அவனின் கனவுகள் எல்லாமே. அவளுக்குப் பிடிக்கும் என்பதாலேயே அவனுக்கான உடைகள், இன்னபிற சாமான்கள் அனைத்தும் சென்னை செல்லும்வேளை சரவணா ஸ்டொர்ஸிலே வாங்கிவருவான். அன்று இரவும் அவள்பற்றின கனவுகள் அவனுக்கு ஒளிதர பட்டென நடுயிரவில் விழித்துக்கொண்டான். குடிசையின் வெளியில் அமைந்த திண்ணையில் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அப்பொழுதுதான் அவன் கண்டதை அவனால் நம்ப முடியவில்லை. அங்கே அவனின் கனவுக் காதலி ஸ்னேகா அவனை நோக்கி பஞ்சுமெத்தைமேல் நடப்பதுபொல் அசைந்து நடந்து வந்துகொண்டிருந்தாள். அவளை வரவேற்றான். நனாவா என்பதற்காக கையைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கொண்டான். நனவுதான். வீட்டினுள் எவரும் இல்லையாதலால் வீட்டினுள் அழைத்தான். வந்தாள். அப்படியே அவளையணைத்து படுக்கையில் கிடத்தினான். முத்தமிட்டான். மொத்த உடலும் நொங்குபொல பஞ்சாக இருந்தது. இப்பொழுது கலவி ஆசையில் அவளை மெதுவாக கட்டிக்கொண்டு கலவினான். உச்சயின்பம் கொள்ளும்வேளை அவனால் அந்த இன்பம் உடல்முழுவதும் பரப்பப்படுவதை உணரமுடிந்தது. ஆனால் ஆச்சரியம் அந்தக் கலவி முடிந்தபின்னும் அந்த இன்பத்தின் அளவு பலமணி நேரம் குறைந்திடவேயில்லை. சிறிது நேரத்தில் ஸ்னேகா எழுந்து வெளியில் சென்றாள். அவன் சில மணிக்குப் பின்னர் வெளியில் சென்று பார்க்கையில் அவளைக் காணமுடியவில்லை. மறைந்துவிட்டிருந்தாள். ஆனாலும் அவனுக்குக் கிடைக்கப் பெற்ற உச்ச இன்பம் கொஞ்சமும் குறைந்திடவேயில்லை. 
ஞானக்குழு ரிவர்ஸ்ஸை அழுத்தியதும் அவள் சட்டென விண்வெளியில் பறந்தாள். பூமியின் கட்டுப்பாடு தாண்டியவுடன் -272.9999 டிகிரி செல்ஷியஸ் வந்தவுடன் அவள் ஒரு எலெக்ட்ரானாக தன்மாற்றம் பெற்று 30 நொடியில் ஐ23 கிரகம் வந்தடைந்தாள். அங்கு தன்னனுபவத்தினை எல்லோர்க்கும் விவரித்தாள்.
அவனுக்கு அவளுடன் கொண்ட உடலுறவால் அதன்பின் உச்ச இன்பம் குறையவேயில்லை. மகிழ்ந்துபோனான். இறைவனைப்பொல் உணர்ந்தான். 

Friday 8 March 2013

அவளும் ஒரு மகளீர்தான்

நினைத்து நினைத்துத்தான் பார்க்கிறேன்,
அன்னியப்படுத்திப் பார்த்திடமுடியவில்லை
அந்த அருமை மகளீரை.

அவள் உறங்கிப் பார்த்ததில்லை
சிரிப்புடன் மரணித்துக் கிடத்தும்வரை.

விழிப்பது அதிகாலையாய்த்தான் இருக்கும்,
படுப்பது பின்னிரவாய்த்தான் இருந்திருக்கும்.

கண்விழித்ததும் நாங்கள் காண்பது,
கால்களை நீட்டி அமர்ந்து கதை விவாதம்
செய்திடுவது அன்றய தினசரிச் செய்திகளை.

அடுத்த நொடி இனிமையான அந்த டீ.
அரட்டையொடு சேர்ந்த அரவணைப்பு.
அன்பாக அதிலொரு ஆரவார சண்டை.

இங்கே இப்பொழுது பேசிக்கொண்டுதானே
இருந்தாள், பின்னெப்பொழுது சமைத்தாள்?
விளங்கவேமுடியாத அசுரவேகம்.

பள்ளி செல்கையில் வைத்த இடம்
மாறி மறந்த பொருள் அனைத்தையும்
எடுத்து அவரவர்க்கு தேடித்தேடியுதவி.

மாலையில் விளையாடையில்,
நேரம் சிலதுளி தாண்டையில்
தொடையில் நுள்ளிடும் பொறுப்பு.

தூசி கண்டதில்லை, நேரம்
தவறியதில்லை, சமையல் ருசி
மாறியதில்லை, வைத்த பொருள்
இடம் மாறிப்போனதில்லை.

உறங்கியதை, சமையல் செய்வதை,
வேலை செய்வதை, மற்ற இன்னபிற
கடமைகளை செய்வதினை கண்டதில்லை.

கண்டதெல்லாம் நேரத்திற்கு எல்லாமும்
கணகச்சிதமாய் முடிந்திருந்ததைத்தான்.
எந்தப்பொழுது நடக்குமென யூகிக்கமுடிவதில்லை.

வெளிவேலைகள் எல்லாமும் அவள்தான்.
காய்கறி வாங்கிவருவதும் அவள்தான்.
மாவாட்டுவதும் மாடுகறப்பதும் அவள்தான்.

தெருவினில் வரிசையில்னின்று நீர், குடம்
குடமாய் கொண்டுவருவதும் அவள்தான்.
அங்காடி பொருள் சுமப்பதும் அவள்தான்.

முழுவாரமும் என்றென்று என்ன
சமையல் என்பதினை முடிவுசெய்து,
வருமான மிச்சம் செய்வதும் அவள்தான்.

வரவு செலவு, வாங்கவேண்டியது,
கொடுக்கவேண்டியது, பார்க்கவேண்டியது
மருத்துவ ஒதுக்கீடு மொத்தமும் அவள்தான்.

வாழ்ந்தவரை மக்களுக்காகவும்,
மனைக்காகவும்,மணவாளனுக்காகவுமே
மனம் நோகாமல் இன்பமாய் வாழ்ந்தவள்.

துன்பங்களையும் இன்முகமாய் கொண்டு,
துயரங்களையும், வறுமையினையும்,
வென்று வாழ்வுக்கு ஒளிவிளக்கு ஏற்றியவள். 

முழு உரிமையையும் கைக்குள் கொண்டவள்.
தருணத்தில் சரியான முடிவுகளையே எடுத்தவள்.
குறையாய் எதையும் எவரும் பேசிட இடம்தராதவள்.

கும்பிடும் தெய்வமான தாயவள்தனை எங்ஙனம்
மகளீர் என ஒதுக்கி முத்திரையிட்டு தழுவத்தழுவ,
வாழ்த்திடுவது சொல்வீர் எம் நண்பர்காள்.

தெய்வம், தாயில்லாமல் எவருமில்லை.


Saturday 10 November 2012

எங்களின் தீபாவளி.

எங்களின் தீபாவளி.

அந்தக் காலங்கள் ஒரு இனிமைதான். ரொம்ப சுதந்திரமானது. இயற்கையானது. மனதில் கவலையில்லாததும்.
1970 களில் பள்ளிப்படிப்புக் காலங்கள். தீபாவளியின் முந்தய தினம் எங்கள் கிராமத்திற்கு பயணமாவோம். மொத்தகுடும்பமும் அன்றிரவே ஆஜராகிவிடும். ஒவ்வொரு வயது தொகுதிகளும் தத்தம் வயதினருடனும் சேர்ந்துகொண்டு தங்களின் இன்பத்தை தொந்தரவின்றி அனுபவிப்போம். என்வயதொத்த இளசுகள் படையில் நாங்கள் நால்வர். ஊர் சென்றடைந்ததும் நால்வரும் இணைந்தே செல்வோம் எங்கு சென்றாலும். இது எழுதப்படாத தீர்ப்பு.
முதலில் மாமாவைக் காணத்தான் செல்வோம். மாமா என்றால் சின்னத்தை மாமா. எங்களைக்கண்டவுடன் அவர், வாங்கடா வெடிவாங்கப் போவோம் என்று எங்களை அழைத்துக்கொண்டு கடைக்குக் கூட்டிச்செல்வார். கடையில் வெளியே ஒரு சேரைப்போட்டுக்கொண்டு மற்றவர்களுன் அரட்டையடிப்பார். எங்கள் பட்டாளம், எந்த நேரத்திற்கு எந்த வெடி போடுவதென்று தீர்மானித்து முடிவுசெய்து வெடிகளை சேர்க்கத் துவங்குவோம்.
முழு இரவுக்கும் ஒலைவேடியும் துப்பாக்கி வெடியும்தான். அதன்பின் அதிகாலை 5000 சரம், மற்றும் வகைவகையான சரங்கள். மதியவேளையில் அணுகுண்டு, லட்சுமிவெடி வகையறாக்கள். மாலையில் வெளிச்சம் தரும் ராக்கெட், புஸ்வானம், மத்தாப்புகள் எல்லாம். ஒரு முழுநாள் மட்டுமே இந்தக் கொண்டாட்டம். தேவையான வெடிகளனைத்தையும் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததும், அனைவருக்கும் அவர்களின் தகுதி வயதுக்கேற்ப பிரித்துத் தரப்படும். மொத்தம் வெடிவெடிக்கும் வயதில் 16 வீரர்களும் வீராங்கனைகளும் உண்டு. ஒரு சத்தமும் இன்றி பிரித்து அவரவர்களுக்கு ஒரு மஞ்சள் பெருங்காயப் பையில் போட்டுத் தரப்படும். அவர்கள் அதைப் பாதுகாத்து விரும்பியநேரம் போட்டுக்கொள்ளலாம்.
வெடிகள் கைக்குவரும்வேளை இரவு 10 மணி. பெண்கள் பலகாரங்கள் செய்யத் துவங்குவார்கள். நாங்கள் ஒலைவேடியில் துவங்குவோம். அதிரசம், முறுக்கு, சீவல், சீடை, முந்தரிக்கொத்து, அல்வா, அது கக்கும் நெய்யில் மைசூர்பாகு, வடைவகைகள், ரவாலட்டு, ரவை பணியாரம், இட்டிலி,பொங்கல் சாம்பார் அத்தனையையும் இரவு முழுவது விழித்து செய்து முடிப்பார்கள். அவர்கள் முடிக்க, நாங்கள் ஓலைவெடிகளை வெடித்துமுடிக்க அதிகாலை நாலை மணி காட்டிநிற்கும்.
எல்லோரும் குளிக்கத் துவங்குவர். எங்கள் இளவட்ட சங்கம் கிணற்றிலிருந்து எல்லோருக்கும் நீர் இரைத்துக் கொடுக்கும் வேலையைச் செவ்வனே செய்துமுடித்து குளித்து முடிக்கும்பொழுது காலை ஆறைத் தொட்டிருக்கும் மணி. பெருசுகள் முதல் அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டு, அய்யாப்பா எல்லோருக்கும் புதுதுணியினை வழங்க தீபாவளி துவங்கும்.
முதலில் 5000 வாலாவில் துவங்கி அது ஒருபுறம் களைகட்டி ஓடிக்கொண்டிருக்கும். மொத்தக் குடும்பமும் வெடிவெடிப்பதினைக் கண்டு ஆரவாரம் செய்து மகிழும். பின் விருந்து. எதை எடுப்பது எதை விடுப்பது என்பது ஒரு குழப்ப நிலையினை உருவாக்கிவிடும், அளவுக்கு உணவு வகைகள். எல்லாம் ருசியானவை. தேர்ந்த பெண்களின் கைப்பக்குவம். வாழ்வின் பாக்கியமான திகட்டிடும் நிமிடங்கள். உணவு முடிந்ததும் அரட்டைகளும் நையாண்டிப் பேச்சுகளும், கேலியும் கிண்டலுமாக நேரம் ஓடிடிடத் துவங்கும். ஒரு பிரிவு அன்று ரிலீசாகும் புதுப்படம் பார்க்கக் கிளம்பிவிடும். அப்படியே இரவின் விழிப்பு, உணவின் இனிமை, நண்பர்களின் அன்பு எல்லாமாய் சேர்ந்து நம்மை ஒரு கிறக்கத்தில் கொண்டு நிறுத்திநிற்கும். அதற்காக தூங்கிவிடவும் முடிவதில்லை. மாலையில் எல்லா வெடிகளும் தீர்ந்து, வெடிக்காத வெடிகளைஎல்லாம் தெருவில் பொறுக்கியெடுத்து சொக்கப்பானை கொளுத்தும்வரை எல்லாமும் சரியாகவே சென்றுகொண்டிருக்கும்.
ஒவ்வொரு வருடமும் சொக்கப்பானை கொளுத்தும் சமயம் யாருக்காயினும் ஒரு தீக்காயம் ஏற்படாமல் போகாது. முக்கியமாக என் பெரிய மாப்பிள்ளைக்கு ஏதாகிலும் ஒரு சிறிய காயமேனும் ஏற்படாமல் தீபாவளி முடிந்துவிடுவதில்லை. அவனுக்கும் தீபாவளிக்கும் அப்படியொரு இன்பப் பிணைப்பு.
பின்னர் சோகத்துடன் ஒருவரையொருவர் பேசிக்கொள்ளாமல், கணத்த மனதுடன் பிரிந்து ஊருக்குப் புறப்படுவோம். இதுதான் நாங்கள் வாழ்ந்த இன்பத் தீபாவளி.

Wednesday 7 November 2012

ஒரேயொரு முத்தம்

அன்று கல்லூரி வாழ்க்கை முடிவுக்குவரும் கடைசிநாள். அவர்கள் இருவரும் காதலர்கள்தான் என்றாலும் ஒருவரையொருவர் இதுவரை தொட்டுக்கொண்டதேயில்லை. அவளுக்கு அவர்களின் வீட்டில் மிகப்பெரிய பணக்கார மாப்பிள்ளையையும் பார்த்தாகிவிட்டது. அவளால் மறுத்துவிட முடியவில்லை. சூழ்நிலை. இரண்டுமணிநேரங்கள் மனம்விட்டு பேசிக்கொண்டார்கள். அவன் காதலுக்குப் பரிசாக ஒரேயொரு முத்தத்தினைப் பரிசாகக் கேட்டான். அவளால் அதற்கு ஒத்துப்போகக்கூட மனம் வரவில்லை. கடைசியில் இனிசந்திப்பதில்லை என முடிவெடுத்துப் பிரிந்து சென்றனர். துவங்கும்போழுது அவளின் திருமண வாழ்வு இனிமையாய்த்தான் இருந்தது. மனத்தில்மட்டும் ஏதோ ஒரு குறையுடன் இருப்பதாகவே அவளுக்கு இருந்தது. மணவாழ்க்கையை பழையவற்றை முடிவுக்குக் கொண்டுவந்து புதிதாகத்தான் வாழ்வதுபோல் துவங்கினாள். சூல் அமையப்பெற்றாள். சிறகெடுத்த வானில் பறப்பதுபோல் உணர்ந்தாள். அவள் வாழ்வுக்கும் ஒரு அர்த்தம் இருந்ததை விரும்பினாள். என்ன பெயர் வைக்கவேண்டும் என்று மனத்தைக் கசக்கி சில பெயர்களை குறித்துவைத்துக் கொண்டாள். அதில் ஆண் மற்றும் பெண் பெயர்களும் இருந்தன. சந்தோஷ மனநிலையில் வானத்தைப் பார்த்தும் தென்றலுடன் பேசியும் மழையுடன் ஆடியும் கவிதைகள் பல வரைந்தாள். உலகத்தை மறந்தாள். இன்பத்தில் குளித்தாள். உலகமே தனக்காக மலர்ந்து கிடந்ததை அனுபவித்தாள். கணவனின் அன்பை அணுவணுவாக ரசித்தாள்.
குழந்தையின் வளர்ச்சியினை கண்டுகண்டு பூரிப்பாய் உணர்ந்தாள். பிறந்த ஆண்குழந்தைக்கு உடனேயே அருண் எனப் பெயரிட்டு மகிழ்ந்தாள். அப்பொழுதுதான் அந்தப்பேரிடி அவளின் தலையை இடித்து உடைத்தது. ரத்தம் சோதனையில் அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. குழந்தைக்கும் இருந்தது. அந்தப்பிஞ்சி முகம் பார்த்து அதன் சிரிப்பில் அழுதாள். விஷயம் தெரிந்தவுடன் கணவன் தூக்குமாட்டி அன்றிரவே இறந்துவிட்டான். ஒருநாளுக்குள்தான் எத்தனைஎத்தனை துன்பங்கள். துயரங்கள். வேதனைகள். விபரீத விளைவுகள். ஆறுதல் சொல்லக்கூட எந்த உறவுகளுக்கும் துணிவில்லை. அருகில்கூட யாருக்கும் வரவிருப்பமில்லை.
வீட்டிற்க்குச் சென்றபின் விட்டத்தைப்பார்த்துக் கொண்டே நேரம் சென்றது. அழுவது முழுவதும் நின்றடங்கியது. பட்டென்று அவன், காதலன் பிரிவின்போழுது கேட்ட முத்தம் கண்ணினுள் திரையில் ஓடியது. அவனை சந்திக்க வேண்டும்போல் மனம் கெஞ்சியது. எல்லா திசைகளிலும் விசாரித்து ஒருவழியாக அவன் இருக்குமிடம் கண்டுகொண்டாள். அவன் வீட்டின் நம்பருக்கு போன் செய்தாள். மறுமுனையில் அவன்தான் போனை எடுத்தான். இவளால் ஒன்றும் பேசமுடியவில்லை.
அவளின் நிலை நண்பர்களின் மூலமாக அவளின் பழைய காதலனுக்குத் தெரியவந்தது. இப்பொழுது அவளின் வீட்டுக்கு அவன் போன் செய்தான். அவள்தான் எடுத்தாள். சில நிமிடங்கள் ஒருவரும் ஒன்றும் பேசிட முடியவில்லை. அவள்தான் முதலில் இப்பொழுது பேசினாள். அவனின் உடல்நலம் விசாரித்தாள். அவன் இன்னும் பேசவில்லை. அழுதுவிட்டான். அவள் எங்கு இருக்கிறாள் என்பதைக் கேட்டுக்கொண்டு அவளைக்காண கிளம்பினான். எப்படியும் நான்கு மணிநேரம் ஆகும்.
அவள் வீட்டையடையும்பொழுது மாலை இருட்டத்துவங்கிவிட்டது. உள்ளே சென்று அவள் பெயரையழைத்து கூப்பிட்டான். படுக்கையறையிலிருந்து சிறிய முனகல் சத்தம் கேட்டதும் அந்தத்திசை நோக்கி ஓடினான். படுக்கையில் அவள் கிடந்தாள். அவள் விஷம் அருந்தியிருந்தாள். குழந்தை சிரித்துக்கொண்டு கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு கிடந்தது. அவளை அவனின் மடியினில் ஏந்திக்கொண்டு திட்டினான். அவள் சொன்னாள், எனக்கு ஒரு முத்தமிடு அதுவே என்னின் கடைசி ஆசை. உன்காதலுக்கு அதையே பரிசாகத்தருகிறேன் என்றாள். அவன் அதைக் கவனிக்காமல் அவளைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். அவள் எடுத்த வாயில் அவனின் சட்டையை முழுவதுமாய் பரவி நாறடித்தது. அவன் எதையுமே பொருட்படுத்தாமல் ஓடினான்.
அவள் காப்பாற்றப்பட்டாள். பின்னர் அவளை அவனின் ஊருக்கு அழைத்துச் சென்று கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டான்.
அது ஒரு இரவு. படுக்கையறையில் அவனின் மடியினில் அவள். அவன் முத்தமிட வெட்கப்பட்டதால் , அவள் அவனை ஆசைதீர முத்தமிட்டாள். கண்ணுற்ற குழந்தை கைகொட்டிச் சிரித்தது.

Tuesday 23 October 2012

தியானத்தின் அடிப்படை - 2

தியானம் இருப்பது, நிலையான கலவி சுகம் அனுபவித்தல், இறைவனில் மிதத்தல் எல்லாம் ஒன்றுதான் பேரின்பம் அடைதல். ஆன்மாவின் ராகங்கள்.
செக்ஸ், விந்துநாத வெளியேற்றம், தும்மல் எல்லாம் சிற்றின்பம், உடலின் இச்சைகள்.
ஒன்று விந்துவை மூலாதாரத்தில் (G - ஸ்பாட்டில்) நிரப்பி உட்புறம் சுழற்றுதல்.
மற்றொன்று வெளியேற்றல்.
செக்ஸ் உணர்வு பெற்றதும் உடலின் வெள்ளைரத்தம் மூலாதாரத்தில் நிரம்பி முட்டிநிற்கும். பின் வெளியேறும். வெளியேறும்பொழுது மூலாதாரத்தின் காந்த முனைகள் ஒன்று உடலின் அர்த்தனாரீஸ்வர் +veமுனையில் இணைந்து, மற்றது -ve இலும் இணையும்பொழுது அது மின்காந்த அலைகளைப் பரப்புகிறது. அதுவே கலவிசுகமாக உணரப்படுகிறது. வெளியேறியபின் வெறுமைதான்.
விந்துநாதம் வெளியேறும் பொழுது சில நிமிடங்கள் இதுதான் நடைபெறுகிறது.
தியானத்தில், முட்டிநிற்கும் மூலாதார விந்துநாதம் வெளியேறாமல் உட்புறம் சுழன்றுகொண்டேயிருக்கும். இப்பொழுதும் அர்த்தனாரீஸ்வர் முனைகள் இணைகின்றன, விந்துநாதம் வெளியேறாமலேயே. அது நினைக்கும்பொழுதெல்லாம் கலவிசுகம் கொடுத்தவண்ணமே இருக்கும். இங்கு எந்த இழப்புமில்லை. தியானநிலை, பேரின்பப்பெருவிழா.