Monday 31 October 2011

உறுத்திய உன் மனம்

நிற்கமுடியாமல் சிதறிக் கொட்டும் நீர்விழுது
கொண்ட கணத்த கார்மேகமாய்,

இன்பம் நிறைந்த அன்பு மழையை எனக்குள்
நித்தம் கொட்டித்தீர்க்கும் எனதன்பே!

அம்பு எய்திய மனம் விம்மி வீழ்ந்தபின்னும்
வம்பு செய்த மனம் கொண்ட என் ஆருயிரே,

கற்பனையில் காதலுக்கான கற்பை உரசிப்
பார்க்கும் கண்ணான என் கண்மணியே,

வேவு பார்க்க வந்த வெண்மதியின் வெள்ளைச்
சட்டையினில் கறையிட்டு அனுப்பியுள்ளேன்,

மறுபடியும் அது வான்வெளியில் 
தொலைந்துவிடக்கூடாது என்பதற்காக அல்ல.

நீ அதன் மயக்கத்தில் என்னைத்
தொலைத்துவிடக்கூடாது என்பதற்காக.

உன் உலகத்தினுள்ளே உறைந்து கிடக்கும்என்னை
கடைந்து கண்டெடுக்க நீ அனுப்பிய கறை நிலா,

உறுத்தி நிற்கும் காதலில் முழுமை பெற்றுத்
திரும்பவந்து சேர்ந்துவிட்டாளா?

இல்லை, திரும்ப வெட்கப்பட்டு திசை மறந்து
தினவெடுத்த தோள்களுடன் ஓடிவிட்டாளா?

Saturday 29 October 2011

கலைமகள் விலைமகளாய்

பள்ளிக்குச் சென்றுள்ள குழந்தைக்கு
இன்றைய உணவும், உடையும் வேண்டும்.

கையாலாகாத கணவனுக்கு
கைக்காசு வேண்டும் டாஸ்மாக் செல்ல.

கூட்டிக் கழித்தால் எப்படியும்
இந்த மாதத் தேவை மூன்று ஆயிரங்கள்.

வழியில்லை கரைந்துவிட்டிருந்தது
மெலிந்து சுருங்கிய சேலைமுடி.

அலைபேசியில் மெல்லப்பேசி பேரம்பேசி,
நிலைகுறித்து நேரமும் குறித்துவிட்டாள்.

வந்தவன் சொத்துக்களை ஆராய்ந்தான்,
செத்துவிழுந்தான் ஒரு துளி விலக்கத்தில்.

வாழ்க்கைக்கு ஆதாரம் தரவேண்டிய அரசு,
கையாலாகாத பிழைப்புதானோ அதற்கும்.

வருமான வரிவரம்பு பதினைந்தாயிரமாம்,
நகைப்புத்தான் என் மூவாயிரத்தின் வாழ்வு.

பலருக்கும் இதுதானோ நிலை,
அரசன் இருந்தாலென்ன செத்தாலென்ன?

நிலைமாறுமோ இந்த உலைகொதிக்க,
நித்தமும் வணங்குகிறேன் நிம்மதிக்காக.

கருணைக்கண்ணை திருப்பி நிற்கும் கடவுள்
அதிகமாய் சோதனை செய்துவிட்டான் என்னை.

கோடிகளைக் கொள்ளை கொண்டோர் கொஞ்சம்
சிந்திக்கட்டும், கொண்டுபோவது ஏதுமில்லை.

Monday 24 October 2011

விலை கொடுத்து வாங்கிய இரவு

ஆதவன் மறையும், உதிக்கும் தருணங்கள்.
மாலை 6 முதல் காலை 6 வரை.

இரவின் ஐந்து பொழுதுகள்.
மாலை,முன்னிரவு,நடுநிசி,பின்னிரவு,அதிகாலை.

கலவிப் பொழுதின் துவக்கம் மாலை.
விழிகளின் விருப்ப அலைகளின் மயக்கம்,

விரும்பி வலையில் விழுந்து
விண்ணப்பமிடும் விளையாட்டு.

கலக்கப்பட்ட கண்கள் பொய்க் கோபமுடன்
களமிறங்கத் துடிக்கும் கவிதை.

முன்னிரவின் முகம், மலர்ந்த
தாமரையின் அங்க அணிவகுப்பு.

முத்தக் காற்றின் முழு சுகந்தத்தையும்
விதைத்து நின்றது முன்னிரவு.

இத்தனை மலர்களா! சுமந்து கிடக்கும்
உன் இடை வலிக்குமல்லவா, என்ற முனகல்.

உரசலின் வலி, உள்ளம் பரவிநிற்கும்,
உணர்வுகள் உச்சக்கதவினைத் தட்டிநிற்கும்.

கண்களில் கவரப்பட்ட காதல்,
கலவரப்பட்டு கனிந்து கலந்து கலைந்தன,

காமரசம் கடலலையாய் கரைகடந்து
கவனமுடன் கடவுளைக் கண்ணுற்றபின்.

நடுநிசியின்வரை நீளும் இந்த நடுங்கி
நடனமிடும் நட்பின் இரகசியம்.

பின்னிரவின் உறக்கத்தினுள்ளும் உரசிக்கிடக்கும்,
உருமாறாத ஒவ்வொரு இயக்கமும்.

கனவுகள் கலையாத, நிஜங்களின்
நினவுகள் புரியாத புத்தம்புது அதிகாலை,

புரண்டவுடன் பட்ட உடையில்லா இடை,
உடைந்த உலகை மறுபடி உசுப்ப,

உணர்வின் உச்சத்தில் உலகுமறந்த
ஒரு இன்புலகம் புணர்ந்து சமாதியானான்.

வாடகைக்குக் கிடைத்த அன்பு,
அந்தரத்தில் தொங்கி நிற்க,

விலைகொடுத்து வாங்கிய என் பயத்துடன்
விடிந்துநிற்கின்றது விடிகாலை.

Tuesday 18 October 2011

காதலியைக் கண்ட நிலை

அழகினைக் காணும்பொழுது கண்கள்,
நிலையறியாது சொக்கியே நிற்கின்றன

தவறவிட்ட தருணங்கள், நெஞ்சாங்கூட்டில்
தவறிய பின்பே தடவிநிற்கின்றன.

நிகழ்கால நிகழ்வுகள், நிலைமுடிந்த
நிலையிலேயே நினைவுக்குள் பூக்கின்றன.

மனது மத்தளம் கொட்டிநிற்கையில்,
அறிவு மறத்தநிலையே கொண்டிருக்கின்றன.

புலன்களனைத்தும் பூத்த பூமுகம் கண்டதும்
செய்வதறியாது திகைத்தே கிடக்கின்றன.

அத்தனை மலர்களும் கொட்டிக்கிடக்கும்
தடாகமே, தயங்கித் தலை கவிழ்ந்தவனுக்கு

தனிவழியுரைத்து தலைகோதி
முத்தமுமிழ்ந்து மயங்கச் செய்யமாட்டாயோ?

Thursday 13 October 2011

ஒளிர மறுத்த முழுநிலவு

















ஒரு பௌர்ணமி இரவுதான் ஆனாலும்,
இது நிலவு இல்லா வானம்.

காதலில் அனாதையாக்கப்பட்டுத் தடுமாறி,
முகவரி மறந்து அலையும் மேகம்.

அன்பின் அமுது அதிகமாய்க் கடையப்பட்டதால்,
நீலம் பூத்து விஷமாகிப்போன மனம்.

கூவ மறுத்த குயில் குலையினுள் மறைய,
வெற்று மொழி பேசித் திரியும் தென்றல்.

கலவரம்கொண்ட மனம் கலையிழந்ததால்,
மூங்கில் சங்கீதம் உணரா உணர்ச்சிகள்.

உள்ளக்கிடக்கையின் உலை கொதித்தும்,
உண்மை மறைந்த உறங்கா நினைவுகள்.

முழுமதியாய் மலர்ந்தும் கறைபடிந்து,
முகம் மறந்த உன் நினைவுச்சின்னம்

Tuesday 11 October 2011

தேன் கலந்த மழை

கருப்பு நிலாவே,
வானில் ஒளிந்து நிற்கும் அந்த அஞ்சுனாட்கள்,
மூன்றாம்பிறையின் வளரும் தேயும் இடைத்திதிகள்

ஒத்துநிற்குமே
ஒதுங்கி நிற்கும் மலர்மாதின் மங்கிய
மனம், கொதித்துக் கிடக்கும்
அந்தச் சிவப்புனாட்கள்.

வெண்மதியே,
முழுவடிவாய், வானில் ஒய்யாரமாய்
வட்டமிடும் அந்த மூன்றுநாட்கள்,
உன் மாதத்தின் உச்ச இன்பனாட்கள்.

மங்கையின் கொங்கைகள்
ஏங்கித் தவித்து, தேகம் சிலிர்த்து
சல்லாப நடனமிடும் சந்கீதனாட்கள்.

கெஞ்சுவதினை விரும்பினதில்லை,
ஆனாலும்
விரும்பியே உன்னிடம்
கெஞ்சிக்கொண்டே இருக்கிறேன்.

கார்மேகக் கூந்தலினுள் முகம்புதைத்து,
பெயரிலும் ஒட்டி உறவாடிநிற்கும்
நிலாவே,

கட்டிய சேலை காற்றாட
கலங்கின நெஞ்சம் சேர்ந்தாட
முகம் காட்ட மறுக்கும் மல்லிகையே,

அலையாடும் தேன்குளத்தில்
துள்ளியாடும் மீன்வனத்தில்
விளையாடி, மிதந்தாடும் தாமரையே.

விழிகண்ட வினையால் மேகம்
உடைந்து, வீழ்ந்த வெள்ளியாம் மழைத்துளிகள்,
மலர்ந்து நிற்கும் நின் மேனி உரசி, தேனாக.

Saturday 1 October 2011

ஒரு உடையின் வாழ்க்கை

என் நண்பன், எஜமான் உன் காதலன்
அந்த உரிமை தந்த இனிமை இது.

பருத்திநான் காற்றில் பறந்து விதைந்தேன்,
அவன் நீர் நிறைந்த அன்புத் தோட்டத்தில்.

அவனின் அரவணைப்பால் காய் வெடித்துப்
பஞ்சாய் முதிர்ந்து விளைந்தேன்.

விற்ற பொழுதில் சிறிது வருத்தம்,
பிரிய மனமில்லை பிரிதொரு ஏக்கம்.

பாசம் நேசம் கொண்டவனாதளாலும்,
தினம் கண்ணுற்ற காதலினாலும்.

விதவிதமாய்க் கைமாறிக் கடைசியில்
உருமாறினேன் நூலாயும் துணியாயும்.

கைவண்ணம், கலைவண்ணம் கலந்து
நிறவண்ணம் விரும்பும் உடையானேன்.

கடை பரப்பி உந்தன் விழிநுழைந்து
உன் உடலோடு உறுப்பும் ஆனேன்.

நெருப்பைச் சுட்ட ரத்தம் கண்டு நெருங்கி
பொறுப்பு கொண்ட அங்கம் பட்டுநின்றேன்.

பாடுபட்டு ஏறின உடல் இரவினில்
கூறுபட்டுக் கசங்கிக் களைந்து,

உளையப்பட்டபின் களைந்தவன்
முகம் நோக்கி வியந்தேன்,

கண்ணாளன் உன் மணவாளன்
என் நேசத்தின் திருவாளன்,

நின் மார்பினில் முகம் புதைத்து
இடைதனில் கரம் வளைத்து,

உன்னைச் சூடிக்கொண்டு சுகம் பாடும்
என் எஜமானன், உன் காதலனே என்று.

நிம்மதியுடனே தரை விழுந்துகிடந்தேன்
ஊடல் நாடகங்களைக் கண்டுகொண்டே.