Wednesday 21 December 2011

என்று கனியும் இந்தக் காதல்

மின்சாரம் தொட்டதும் பட்டென
எரிந்துவிடும் மின் விளக்குபோல்,

துடிப்புடன் மூளையினுள் நீந்திக்கிடக்கும்
தூண்டப்பட்ட இன்ப நினைவலைகள்,

உன்பற்றிய எண்ணங்கள் உரசினவுடன்
பற்றி எரிக்கிறது என் நரம்பு மண்டலத்தை.

சக்தியின் மருவாய் பூமியில் மண்குழைத்து
பிராணன்கூட்டி உயிர்ப்புடன் வெளித்தள்ளும்,

ஒரு காட்டுக் கொடியினை, பூத்து
மலரச் செய்ய வைக்க முடிந்திருக்கின்றது,

நம்மையும் கடவுளிடம் இட்டுச்செல்லும்
காமம், தவறில்லை என்பது புரியவில்லையா?

மல்லிகையின் மணத்தில், மங்கையின்
மணத்தையும் குழைத்து வந்த தென்றல்,

தேனாய் இனிக்கும் கூப்பதநீர் காய்ச்சிய
காதலியின் கைருசி கலந்த இனிமை,

விரவிக்கிடக்கும் காட்டெல்லையில்,
விலகிக்கிடக்கும் வயல்வேளிபோல்

என்னைவிட்டு உதறிநிற்கும் கண்மணியே,
கண்டுகொள்ளாயோ புதிர்ப் பெண்மணியே,

இந்த உடலில் உயிர் ஒட்டிக்கிடப்பதுவும்
கட்டிமிதப்பதுவும் உனக்காகவே என்பதினை.

விக்கலும், நகைப்பான உன் நக்கலும்
உன்னையே நினைவுபடுத்திய வண்ணம் நிற்க,

கொலைக்களம் விரித்துக்கிடக்கும் விழிகள்,
கலைத்தளம் ஆடிநிற்கும் உன் கொடியிடைகள்,

உயிரினுள் சின்னச்சின்ன கொலைகள்
செய்து, தோளில் வளைய வருவதேப்போழுது?

கூட்டுக்குள் துணை தேவையில்லை.
வாட்டும் துன்பமும் இங்குயில்லை.

பாட்டுக் குயில்கள் கூவிக்களித்திட,
கூடித்திரிந்திட கட்டுப்பாடு எங்கும் இல்லை.

தோட்டத்து மலர்கள் மலர்ந்து சிரித்திட
மணம்பரப்பி கலந்திட மறுப்பதுமில்லை.

தொட்டுவிட்ட தென்றலும் தொடுசுகம்
வேண்டிவந்து தடவித் தழுவுவதுமில்லை.

சொட்டிவிடும் மழைக்கும் முகவரி
கண்டு பொழிந்திடும் அவசியமில்லை.

வட்டமிடும் வண்டுகள் பூவினுள் வீழ்ந்து,
தேன்குடித்திட அனுமதி வேண்டுவதில்லை.

காட்டு மான்கள் காலாற குதித்து நடந்திட
வீட்டு வெளியில் விண்ணப்பமிடுவதில்லை.

சுட்டுவிரல் எனைநோக்கிக் காட்டிட்ட,
சுகராகம் எனக்குள் சுந்தரமாய் பாடிட்ட

கட்டிக்கரும்பே, கனியமுதே, கண்மணியே,
கலையாத கொடிமுல்லையே, காதலியே,

வெட்டிச்செதுக்கின சிலையே, மனக்கூட்டினுள்
நுழைய என்னை மட்டும் அனுமதி மறுப்பதேனோ?

வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பாத்தா சொல்லு.

மிஞ்சிநின்ற பஞ்சு நெஞ்சம்தனை
கெஞ்சி கெஞ்சித் தொலைத்தேவிட்டேன்.

அஞ்சி அஞ்சி மயங்கி மறைந்தேநின்று
தஞ்சம் கொள்ள மறந்தேவிட்டேன்.

கார்மேகம்தனையே கண்ட மயில்,
தொகைதனையே விரித்தாடக்கண்டு,

வான் அளந்த உறவாம் வான்கோழி
வாடிநிற்குதே தன் வடிவழகை கண்டு.

குரல் மாறிக் கூவும் குஞ்சிக் குயிலினை
கூட்டிலிருந்து விரட்டி நிற்குமே காக்கை,

கொண்ட அன்பினை கொன்று சிதைத்து,
கண்ட பொழுதெல்லாம் ஏங்கும் குயிலை.

கண்டு கண்டு வெம்பித்துடித்தே
விம்மிவிம்மி வாடிநிற்கும் என்மனம்,

தேடிய மணம், மல்லிகையிலும் இல்லை,
கூடிய காதல், கொண்டவளிலும் இல்லை,

பாடிய குரல் இதமாய், இன்பமாய் கேட்குதடி
ஆடிய தென்றல் ஏற்றிவிட்ட காதலியிடம்.

கார்குழலி உன் அன்பையும் கண்டேன்
கன்னம்குழியும் உன் சிரிப்பையும் வென்றேன்.

சின்னச் சின்ன உன் முகச் சுழிப்பையும்
சிதறிக்கிடக்கும் உன் சிந்தனையையும்,

சிங்காரமாய் சித்தரிக்கும் சிகப்பழகாம்    

உன் செவ்விதழையும் சேரவே துடிக்கும் என்மனம்.

Wednesday 14 December 2011

காத்திருக்கும் வார்த்தைகள்

பாடிநின்ற உன்னைத் தேடியலைந்து
வாடிநின்று உருண்டு வழிந்த வியர்வையை,

நிலம் சேருமுன் தடவித் துடைத்துச் சென்ற,                                                   தென்றலின் முகவரியினைத் தேடியலைகிறேன். 


சோகத்தில் சுகம் பாடித் திரிந்தவேளை,
சுத்த சுர இசையினால் மனம் வருடி,

மருந்திட்டுச் சென்ற மாங்குயிலின்,
மரம்நின்ற திசை நோக்கி வாடி நிற்கிறேன்.

அது ஒரு மயிலா? மாமரத்துக் கிளியா?
மணம் நிறைந்த மயக்கும் மல்லிகையா?

மனமில்லாமல் சேரத்துடிக்கும்
மஞ்சள் வெயில் மாலைநேரத்து மங்கையா?

வார்த்தைகளனைத்தையும் உருவிவிட்டு
வானம் பார்த்துக்கிடக்கும் வானவில்லா?

என்னிடம் வந்தால் கொண்டுவருவதென்ன?
உன்னிடம் வந்தால் கொடுப்பதென்ன?

என்று மருவிக்கிடக்கும் கஞ்சன்போல்,
வஞ்சம் செய்து நிற்கிறாயே பதில்சொல்.

நின்ற இடத்தில் நிலைகுத்தியே நின்று,
நிமிர்ந்து நோக்கும் தினவும் இன்றி,

நிலையிழந்து தவிக்கும் மனம்,
நிலைகொள்ளச் செய்யும் வழிஎப்படி?

பேசுவதெல்லாம் உண்மையைமட்டுமே,
என்றொரு வறட்டு உறுதிமொழி.

மௌனம் களைந்து மந்திர வார்த்தைகொண்டு,
பதில்மொழி உதிர்ப்பதேப்போழுது?

கலைந்து நொறுங்கிக் கிடக்கும் இதயம்
துடிப்பை நிறுத்துமுன் சேவிக்கவருவாயா?

காதலின் துடிப்பு

வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பாத்தா சொல்லு.

மிஞ்சிநின்ற பஞ்சு நெஞ்சம்தனை
கெஞ்சி கெஞ்சித் தொலைத்தேவிட்டேன்.

அஞ்சி அஞ்சி மயங்கி மறைந்தேநின்று
தஞ்சம் கொள்ள மறந்தேவிட்டேன்.

கார்மேகம்தனையே கண்ட மயில்,
தொகைதனையே விரித்தாடக்கண்டு,

வான் அளந்த உறவாம் வான்கோழி
வாடிநிற்குதே தன் வடிவழகை கண்டு.

குரல் மாறிக் கூவும் குஞ்சிக் குயிலினை
கூட்டிலிருந்து விரட்டி நிற்குமே காக்கை,

கொண்ட அன்பினை கொன்று சிதைத்து,
கண்ட பொழுதெல்லாம் ஏங்கும் குயிலை.

கண்டு கண்டு வெம்பித்துடித்தே
விம்மிவிம்மி வாடிநிற்கும் என்மனம்,

தேடிய மணம், மல்லிகையிலும் இல்லை,
கூடிய காதல், கொண்டவளிலும் இல்லை,

பாடிய குரல் இதமாய், இன்பமாய் கேட்குதடி
ஆடிய தென்றல் ஏற்றிவிட்ட காதலியிடம்.

கார்குழலி உன் அன்பையும் கண்டேன்
கன்னம்குழியும் உன் சிரிப்பையும் வென்றேன்.

சின்னச் சின்ன உன் முகச் சுழிப்பையும்
சிதறிக்கிடக்கும் உன் சிந்தனையையும்,

சிங்காரமாய் சித்தரிக்கும் சிகப்பழகாம் உன 

செவ்விதழையும் சேரவே துடிக்கும் என்மனம்.

அனுமதி மறுப்பதேனோ

கூட்டுக்குள் துணை தேவையில்லை.
வாட்டும் துன்பமும் இங்குயில்லை.

பாட்டுக் குயில்கள் கூவிக்களித்திட,
கூடித்திரிந்திட கட்டுப்பாடு எங்கும் இல்லை.

தோட்டத்து மலர்கள் மலர்ந்து சிரித்திட
மணம்பரப்பி கலந்திட மறுப்பதுமில்லை.

தொட்டுவிட்ட தென்றலும் தொடுசுகம்
வேண்டிவந்து தடவித் தழுவுவதுமில்லை.

சொட்டிவிடும் மழைக்கும் முகவரி
கண்டு பொழிந்திடும் அவசியமில்லை.

வட்டமிடும் வண்டுகள் பூவினுள் வீழ்ந்து,
தேன்குடித்திட அனுமதி வேண்டுவதில்லை.

காட்டு மான்கள் காலாற குதித்து நடந்திட
வீட்டு வெளியில் விண்ணப்பமிடுவதில்லை.

சுட்டுவிரல் எனைநோக்கிக் காட்டிட்ட,
சுகராகம் எனக்குள் சுந்தரமாய் பாடிட்ட

கட்டிக்கரும்பே, கனியமுதே, கண்மணியே,
கலையாத கொடிமுல்லையே, காதலியே,

வெட்டிச்செதுக்கின சிலையே, மனக்கூட்டினுள்
நுழைய என்னை மட்டும் அனுமதி மறுப்பதேனோ?

Tuesday 6 December 2011

கண்டேன் என் காதலை

இசைந்த முத்தச்சுமை, சிந்திவிடாமல்
சேகரித்த சுவை மூளையில் கலக்க,

உதடு உரசி உதிர்ந்த உயிரினை
உலையிலிட்டு உளுப்பினாய்.

சித்தம் கலங்கி, சிலையினுள் சிணுங்கித்
தவித்து, சித்திரத்தில் மைஎழுதி,

சின்னதாய் விம்மிக் குதித்து
மொத்த சுகத்தையும் பூசினாய்.

புதியதாய் ஒரு புன்னகை,
விழிதனில் புது மின்னல் கீற்று.

புல்வெளியின் சுதந்திரப் பனிக்காற்று
படுத்த புழுதியிலும் புது ஆனந்தம்

முத்தச் சாறு சுவைத்து எடுத்து
பித்தச் சாறு பிழிந்து  கொடுத்து

சகதியிலும் ஒரு புரட்டல்,
வானத்திலும் பறந்து ஒரு வட்டம்.

என்ன ஆயிற்று இவனுக்கு
கற்பனையில் காற்றாடும் மனம்.

காதலியைக் கண்டபொழுது
கூத்தாடும், கூண்டினுள் உயிர்.

வந்ததென்னவோ தாயின்
கர்ப்ப கிரகத்திலிருந்துதான்.

வாழ்வதென்னவோ உந்தன்
மையிட்ட காந்தக் கண்களுக்குள்தான்.

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்.

பிரித்துத் தெறித்த ஒரு வார்த்தையின் வீச்சில்
உன் காதலின் முழுவீச்சையும் உணர்வேன்.

நடையழகின் இடை நடனத்தினில்
மறைந்து கிடக்கும் மனமகிழ்ச்சியும்

பூத்துக்கிடக்கும் புன்னகையின் ஓரத்தில்
புயலாய் புழுங்கிக்கிடக்கும் காமமறிவேன்.

அனலாய் கொதித்துக்கிடக்கும் உடல்மொழி
உணர்த்திடும், எறிந்து நிற்கும் பெருமூச்சு.

கவிழ்ந்து கிடக்கும் உன் நிலவுமுகம்
மறைத்திடும், மலையென எழுந்து

நிமிர்கையில் கோபத்தனல் வீசிநிற்கும்,
விச்சின் பதில் உணர்த்தாத கண்களுக்கு.

கொஞ்சம் காதல்கோபம்

சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்,

பின்னலிட்ட உன் கூந்தலில்
அள்ளிவைத்த மல்லிகை,

ஊஞ்சலிட்டு ஆடையில்
ஆடைதொட்டு வாசம் பாடுது.

பாட்டு வந்து கூடையில் சுவாசம்,
வந்து கூடுவிட்டு கூடு பாயுது.

வந்து நின்ற தென்றலை
உண்டுநின்ற நாசி, மயங்கிநிக்கிது.

உலை கொதித்து நின்று
ஒன்று கூட ஏங்கி பாக்குது.

கோபப்பார்வை வீசினால்
வீச்சுவார்த்தை பேசினால்,

காத்துக் கிடக்கும் காதல்
எங்குசென்று வென்று மீள்வது.

கருணை கொஞ்சம் காட்டம்மா
காலைக் கொஞ்சம் நீட்டம்மா,

மடிசாய்ந்து மயங்கச் செய்யம்மா,
மந்திரத்தை எடுத்து வீசம்மா!


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்,
நெருப்பாய் சுடுகிறதே.

வான்தெருவினில் வட்டமிட்டால்
வஞ்சகர் கண்களும் கண்ணடிக்கும்.

உன் குளிர்முகம் மலரவிட்டால்
காதலும், கனியும் காமனுக்குள்ளே.

அல்லது மேகச் சேலையை
உடுத்திநில், மறைத்துக்கொள்

உன்னழகை முன்னழகை
பின்னழகை, தேய்ந்து நீட்டாதே.

கொடிமுல்லை வாடிநிற்கும்
செடிமல்லி மாய்ந்துநிற்கும்.

வடிவழகி, அன்ன நடையழகி உன்
வரைந்த வட்டஉடல் கடையிழந்தால்.

வீதிக்கு வந்த பொருள்
விருந்தாகியே போகும் விழிகளுக்கு.

இழப்பு ஏதுமில்லை முகம் காட்டிநிற்க,
முகவரியை மாற்றி நிற்காதே.

ஒருநாளும் முழுமதியே உன்னால்
சுட்டெரிக்கும் சூரியனாக முடியாது.

விந்தையான உயிர்கள்

சிறிய மூளை, பெரிய முதுகெலும்பு
கொடிய விஷம் கொண்ட ராஜநாகம்.

சிறிய மூளை, பெரிய உடல்
துடிப்பான ஓட்டம் கொண்ட தீக்கோழி.

பெரிய மூளை, சிறிய முதுகெலும்பு
கொடிய மனம் கொண்ட மனிதன்.

சிறுத்த மூளை, பருத்த உடல்
கூர்மையான பார்வை கொண்ட ஆனை.

மிகச் சிறிய ஐந்தறிவு ஜீவன்,
துள்ளியோடும் சுண்டெலி.

பள்ளியாட பணிந்துகிடக்கும்,
மிகப் பெரிய உடல், ஆண் யானை.

மூளையே இல்லாத மிகப்பெரிய
உயிர், விவசாயநண்பன் மண்புழு.

பறவையுமில்லை பாலூட்டும்
மிருகமுமில்லை இரவுநாயகன் வௌவால்.

மீனுக்கும் உறவில்லை நிலத்தின்
வாழ்வுக்கும் வழியில்லை, தவளை.

காட்டு ராஜாவானாலும் நாட்டின்
ராஜாவானாலும் பயமேயற்ற கரடி.

பனிக்குள் கிடைப்பின் பல்லாயிரமாண்டு
உயிர் உறைந்துகிடக்கும் மாட்டுவிந்து.

யுகம் மாறினும் நிலைமாறாது
நீர் பட்டிடின் உயிர் பட்டிடும் மீன்முட்டை.

அத்தனை அதிசயமும் அழகிய
நீலப்பந்துக்கு இருப்பினும் இங்கே,

அழகுக்கு இலக்கணம் காதலி,
ஆண்மைக்கு அழகு காதலன்.

வசந்தத்தில் அவள்

காலங்களில் அவள் வசந்தம்,
மலர்களிலே அவள் மல்லிகை

மங்கையரில் அவள் தென்றல்
முகமலர்வில் அவள் தாமரை.

மனங்களிலே அவள் மாளிகை
மந்திரப் புன்னகை அவள் அடையாளம்.

மயக்கும் வித்தையில் அவள் மலர்வனம்
மச்சமுனக்கு அவள் மடிகிடைத்தால்.

தடவிச்சென்ற தென்றலுக்கும்
குளிரக்காணக் கண்ணில்லை.

குனிந்து நனைந்து கூடிக்
குலாவிட துணிவுமில்லை.

தென்றலின் துணையும் உனக்கில்லை
தூவும் மேகமும் வரவில்லை.

நினைவுகளில் மலர்களை
நிறைந்து சுகமாகச் சுமந்துநிற்கிறாய்,

அது தன் நறுமணத்தை இதமாகத்
தொலைவு கடந்தும் வீசிக்கிடக்கின்றது.

காதல் காக்கும்

நானே வருவேன் இங்கும் அங்கும்
நாளை தருவேன் பொங்கும் அன்பும்.

திகட்டத் திகட்ட புகுட்டிவிட்டாய்
காதல் அமுதை காலம் முழுமைக்கும்.

நிறைமதியே வான்கடந்து வந்து
கரம் அனைத்துப் பிடிப்பதெப்போழுது.

முழுநிலவே முன்ஜென்ம மிச்சங்களை
முனைந்து முடித்துவைப்பது எப்பொழுது.

களவு கொண்ட ஒளிக்கதிர்களையே
மறு ஒளிபரப்பு செய்கின்றாயே,

உன்னால் மலரப்போகும் மல்லிகை நான்,
உன் மலர்முகம் புலர மறைத்து,

வலைத்தளப் பின்னல்களில் சிக்கித்தவிக்கும்
உன் காதலை காப்பாற்றமாட்டாயா?

உதடுகளின் உரசலில் பற்றிக்கொள்ளும்
காதலுச்சம் கொண்ட காமம்,

தட்டின மலர்கள் பற்றின காமத்தினால்
ஒட்டி உறவாடின காதல்,

நிரம்பின இன்ப மழையில் குளித்துக்கிடக்கும்
கள்வனைக் காக்க வரமாட்டாயா?

ஏனிந்தக் கலக்கம்

உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்.

கண்ணைக் கலந்த பின்னே
கவலை ஏனோ கண்ணே.

கனிந்த காதல் நெஞ்சில்
கவர்ந்த காதல் மடியில்.

கேட்டுக் கேட்டுத்தந்தாய்
கேள்வி இங்கு இல்லை.

வானம் பார்த்த பூமி
மழை காணாது விடுமோ.

வான்மேகம்தான் கற்பம்
கலைந்து நீர் தராது செல்லுமோ.

கலையாத நெற்றிப்பொட்டு
என் முத்தம் படாமல் அழியுமோ.

கைகொள்ளாத உன்னழகை
கடித்துவிடாமல் தொடுமோ.

கண்கொள்ள பின்னழகு
கைபடாமல் கனிந்திடுமோ.

என்னை விட்டுத்தான் நீயும்
ஓடிப்போக நினைக்க முடியுமோ.

Friday 18 November 2011

உய்யும் உயிரும் உயிரும்

என்னுயிர் நீதானே,
உன்னுயிர் நான்தானே!

மண்ணுயிர் போனாலும்
விண்ணுயிர் நாம்தானே.

கண்ணுயிர் கலந்தபின்னே
கலக்கமென்ன கண்மணியே.

உயிர் வளர்த்த தாய்மடியில்,
கணம் மறந்து உறங்கையிலே,

பயிர் வளர்த்த மழைமேலே
கயிர் வளர்த்த மேகம்தானே.

ஒளி வளர்த்த காலைநேரம்
மதி மறைத்த கதிரவன்தானே,

மரம் கோடி தழைக்கத்தானே
மண்ணுயிர்க்கு உதவத்தானே,

உலக வாழ்க்கைகளின் உரம்
சேர்த்து உதவத்தானே, கடவுள்தானே.

ஒரு அபலையின் நிலை

குரல் குயிலைவிட இனிமை,
இது நண்பர்களின் ஒட்டுமொத்த கூக்குரல்.

காதலின் மொழிஎன்னவோ இந்த ரோஜா,
ராஜாவிடம் சென்றுவிட்டால் சுசிலாதானாம்.

பட்டினம் சென்றதும் பாய்ப் படுக்கை,
பருவம் விரித்தது பலமான பாசத்துடனே.

பசிவந்தபின் பறந்துவிட்டது பலான பாசம்
பயம் ஒன்றையே விதைத்துவிட்டு.

ராஜாவைக் காண சென்ற இந்த ரோஜா,
கூஜாக்களிடம் சிக்கிச் சின்னாபின்னப்பட்டது.

சுசிலாவின் பாட்டு வானொலியில்,
விலைபேசும் தோள்கள் வாள்விழியில்.

விதிதான் என்று நினைத்திருக்க,
காதலன் வந்தான் மாமா வேலை பார்க்க.

அவனுக்கும் வேலை வேண்டும்தானே!
விஞ்சும் விரகதாபம் தீரவேண்டும்தானே.

பஞ்சுமெத்தைதான், பட்டுச்சேலைதான்,
பகட்டான மாளிகைதான், பந்திவைக்கக்

பக்கத்தில் பணித்தோழியர்தாம்,
பயம் மறத்த, மயக்க வாழ்க்கைதான்.

அழகு மட்டுமே இங்கு மூலதனம்
பின் எல்லாம் பண அறுவடைதான்.

உயர் மனிதர்கள் நெருக்கம்தான்
ஆனாலும் நினைவு ஓரத்தில் துளி கண்ணீர்.

வாடாமல், வழியாமல், வற்றாமல்
வாழ்நாள் முழுமைக்கும் மாற்றவேமுடியாமல்.

நத்தை தன் கூட்டை முதுகில் சுமப்பதுபோல்,
மனதினில் ஒரு விரக்தி கொண்ட துன்பச்சுமை.

Thursday 17 November 2011

ஏமாற்றின சமூகம்

குரல் குயிலைவிட இனிமை,
இது நண்பர்களின் ஒட்டுமொத்த கூக்குரல்.

காதலின் மொழிஎன்னவோ இந்த ரோஜா,
ராஜாவிடம் சென்றுவிட்டால் சுசிலாதானாம்.

பட்டினம் சென்றதும் பாய்ப் படுக்கை,
பருவம் விரித்தது பலமான பாசத்துடனே.

பசிவந்தபின் பறந்துவிட்டது பலான பாசம்
பயம் ஒன்றையே விதைத்துவிட்டு.

ராஜாவைக் காண சென்ற இந்த ரோஜா,
கூஜாக்களிடம் சிக்கிச் சின்னாபின்னப்பட்டது.

சுசிலாவின் பாட்டு வானொலியில்,
விலைபேசும் தோள்கள் விழிவழியே.

விதிதான் என்று நினைத்திருக்க,
காதலன் வந்தான் மாமா வேலை பார்க்க.

அவனுக்கும் வேலை வேண்டும்தானே!
விஞ்சும் விரகதாபம் தீரவேண்டும்தானே.

பஞ்சுமெத்தைதான், பட்டுச்சேலைதான்,
பகட்டான மாளிகைதான், பந்திவைக்க

பக்கத்தில் பணித்தோழியர்தாம்,
பயம் மறத்த மயக்க வாழ்க்கைதான்.

அழகு மட்டுமே இங்கு மூலதனம்
பின் எல்லாம் பண அறுவடைதான்.

உயர் மனிதர்கள் நெருக்கம்தான்
ஆனாலும் நினைவு ஓரத்தில் துளி கண்ணீர்.

வாடாமல் வழியாமல் வற்றாமல்
வாழ்நாள் முழுமைக்கும் மாற்றவேமுடியாமல்.

நத்தை தன் கூட்டை முதுகில் சுமப்பதுபோல்,
மனதினில் ஒரு விரக்தி கொண்ட துன்பச்சுமை.

Wednesday 16 November 2011

உண்மையான அன்பு

உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா.

கொடுத்துவிடு, இல்லை கலவுசெய்யப்படும்,
கண்களால் கவிபேசும் பெண்களால்.

இருப்பினும், இறப்பினும் உடலால் மட்டுமே,
இவ்வுலகுக்கு மட்டுமே இறப்பேன்.

உண்மையில், உன்னுள் உயித்தேயிருப்பேன்
இப்பூஉலகு அழியும்வரை அல்ல.

படைத்த இருப்புநிலையாகிய,
உண்மையுமாகிய இறைவன் அழியும்வரை.

உண்மையன்பு, ஆழ்மனத்தினிலேயே
துளிர்கிறது, துவண்டு தவிப்பதில்லை

துயில்வதுவுமில்லை, எங்கே எப்பொழுது எப்படி
உருவானது என்பதறியமுடிவதுமில்லை.

மறுக்கப்பட்டால் மனம்

மறுக்கப்பட்ட மனம்
விலகி ஓட நினைக்கும் நிலை.

ஏற்றப்பட்ட உடல்
ஏங்கித் தவிக்கும் விரக தாபம்.

நாறடிக்கப்பட்ட பின்னரே
மனம் சாவடிக்கப்படும்.

சாவடிக்கப்பட்ட பின்னர்
உடல் நாறடிக்கும்.

இந்நிலை தேவையில்லை மனிதத்திற்கு,
ஜீவனற்ற காதலை விடுப்பீர் வாழ்தலுக்கு.

மதுவும் காதலியும்

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்?

மது உண்டவன் அளவு மிகுந்ததும்
மலைந்து கலைந்து நினைவிழப்பதும்,

காதல் மதுவில் அமிழ்ந்து கிடப்பவன்
உடல் நிரம்பி அமுதினில் மிதப்பதுவும்,

நினைவிழந்து, உன்னருகில் மிதந்து கிடந்த
அந்த இனிமையான நாட்கள்,

நினைவலைகளை நிலைநிறுத்தி, நிற்கின்றன,
வண்ணமும் மணமும் பரப்பிக்கொண்டே.

கன்னமும் கிண்ணமும், அடங்காத
கண்ணமிடும் எண்ணமும் விதைத்துக்கொண்டே.

மதுவும் மங்கையும் ஒன்றே
மயக்கவைக்கும் முயற்சியின் முன்னே.

என்னவள் நீயேதான்

இறைவன் ஒருநாள் உலகைக்காணத்
தனியே வந்திருந்தானாம்.

இதுவரை எதையும் மன்றாடியதில்லை அவனிடம்.
அதற்காக கொடுத்தவற்றையும் மறுத்ததில்லை.

எனக்கானது என்று நினைத்தவற்றை
அவன் பறித்தபோதும் வருந்தியதில்லை.

அளவுக்கதிகமாய் கொடுத்தபொழுது
ஆசையாய் அவனைத் திட்டியிருக்கிறேன்.

ஆனாலும் அவன் உன்னைக் காண்பித்தபோழுது
கண்ணீர் மழ்கி மகிழ்ந்தே கிடக்கிறேன்.

காரணம் உணர்ந்தேன் நான்,
எனக்குறியவள் நீயேதான் என உளம் நனைந்து.

நினைக்கத்தெரிந்த மனமே

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா?

மறக்கத் துணிந்த பின்னும் முகத்தை
மறைக்கத் தெரியாதா?

முயன்று முயன்று முனைந்தாலும்
வானம் மறைத்தல் முடியுமோ.

தேன் குடித்த வானமகள், மேகம்பிடித்து
நீரைக்கொட்டாமல் முடியுமோ.

விரும்பினாலும் இல்லையானாலும்,
கதிரவனைச் சுற்றியே நிலமகள் வாழ்வு.

களங்கமில்லா நிலாமகளும் விரும்பாவிடினும்
சுற்றிக்கிடக்குமே நீலமகளை.

நீ என்னை வெறுத்தொதுக்கினாலும்
உணர்ந்தேன், உன்னைச் சுற்றியே என் உலகம்.

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம்.

காதலை கைவிட்டு அமையும் வரம்,
வாழ்கையின் துயரம்.

கனிந்த காதலை மனைவியாகக் கொண்டால்
மட்டுமே அது சொர்க்கம்.

அன்புக் காதல் மரித்துப்போயின்
வந்த காதலெல்லாம் மனச் சாந்திதானோ!

காமம் கோவில்கொண்ட கைத்தடி,
சுற்றி வேலியிட்ட சுமைதானோ!

கொள்ளவும் முடியாமல், பெய்யவும் முடியாமல்
சிக்கி, விக்கித் திணறும் மழைமேகம்.
 

விரும்பி விட்டுக்கொண்ட  எலி,
அது குடையத்தான் செய்யும் காலமெல்லாம்.

காற்றும் கவிதையுமே அந்த வலிக்கு
கணம் குறைக்கும் மருந்து.

கைவிட்டுச் செல்லமுடிவதில்லை,
பாழாய்ப்போன சமூகம்.

நடிப்பும், பொய்யும், நையாண்டிச் சிரிப்பும்
நன்றாய் வரும் நாடகமாகிப்போன உலகில்.

Wednesday 9 November 2011

கவிதையாகிப்போன காதலி

உன் கவிதையழகின் கவர்ச்சியினால்,
என் கற்பனையில் உறைந்துகிடக்கும்,

உன் முகத்தினழகும், குரலழகும்,
மாறித்தான் போய்விட்டிருக்கின்றன.

தாமரையும் குயிலும்கூட அதனதன்
தன்மையினில் மழுங்கிவிட்டிருக்கின்றன.

மறுமுறையும் உன்னையும் குரலையும்
பதிவுசெய்யத் துடிக்கிறது மனசு.

உன்பால் கொண்டிருந்த அன்பால், உன்னுருவம்
ஒளிந்துகிடக்கின்றது மூளையின் ஓர் மூலையில்.

முடிவில் தூசுதட்டிச் சிந்திக்கையில்
முடிந்துவைத்த கவிதை முன்வந்து நின்றது.

ஆணின் நட்பு உச்சம்மாய் காற்றும்,
பெண்ணின் நட்புச்சமாய் மேகமும்

பாவிக்கிடக்கின்றன வான்வெளியில்,
சுதந்திரமாய் ஒட்டி உறவாடிக்கொண்டே.

கதிரவன் உதவிகொண்டு நீர் சேர்த்து
காற்று, மேகம் மேவிக் கார்மேகமாய் மாற்றம்.

கார்மேகமே, காதலின் உருவமாய்
கணமழையைக் கொட்டித் தீர்க்கும்,

கவிதையழகில் கண்ணசைக்கும் கண்மணியே.
கணமழையின் காதல்ரசம் காட்டி வரமாட்டாயோ?

கோபத்திலும் அழகு

உன் பருவத்தில் ஏனடி தவிப்பு?
உள் மனமென்னும் கோவிலின் விருப்பு.

மனதினில் என்னடி வெடிப்பு?
ஊடலின் முடிவினில் மறுப்பு.

ஆசையும் கோபமும் தவிப்பும்
ஏனடி கொண்டது வெறுப்பு?

சிரிப்பினில் ஆயிரம் இருப்பு,
மறைத்து விடின் முறைப்பாமோ?

கோபத்தில்கூட புன்னகை நெருப்பு,
பூத்துக் கிடக்குது உதட்டுக் கரையினில்.

தனிமையில் நிறையுது கணிப்பு,
தனமெல்லாம் சிவக்குது, பூரிப்பு.

புலவிக்கு என்னடி சிறப்பு,
புன்னகையில் புரட்டும் வனப்பு.

மறைவினில் நிற்கும் விழிப்பு,
விளைந்த மதிஎல்லாம் இன்பக் களைப்பு.

விட்டுவிலகடி உளம்கொண்ட ஊடல்,
உள்வாங்குது உள்ளமெல்லாம் சிலிர்ப்பு.

ஏன் உறுதியற்றவனா

பூக்கள் கனவுகாண்பதில்லை,
ஆனால் கனவுகளை நிஜப்படுத்துகின்றன.

பொழுதும் நின்று உறவாடுவதில்லை,
உருண்டுகொண்டாலும் உண்மையுரைக்கின்றன.

நிலையில்லாக் காற்றும் உறங்குவதில்லை,
உயிர் வாழ உதவுவதை செய்கின்றன.

களங்கமில்லா நிலவும் சுடுவதில்லை,
கண்களின் சோகத்தை பிரித்தெறிகின்றன.

கண்டுறங்கும் கழனி செழிப்பதில்லை,
சோம்பேறிகளை உருவாக்குகின்றன.

நட்சத்திரம் மினுமினுக்கத் தவறுவதில்லை,
நாள்தோறும் உலகை வழிநடத்துகின்றன.

ஒவ்வொருநிமிடமும் உனையே சுற்றிவரும்
என்னை மட்டும் அன்பே, புறக்கணிப்பதேன்?

உன் இன்ப மனதில் குடிகொள்ள நான்
உறுதியற்ற, தகுதியுள்ளவன் என்பதினாலா?

அது நீதான்

குரல் மாற்றிப் பாடுவதால்
நீ குயிலாகப் போவதில்லை.

பெயர் மாற்றிப் பட்டியலிட்டதால்
உன் முகம் மாறப்போவதில்லை.

முகவரி மறைத்து முன்னிற்பதால்
உன்மீதான காதல் குறையப்போவதில்லை.

கண்டுகொண்டேன் உன்னை
உன் உயிர் உரசினபின் நீதானென.

நிலாப்பெண்ணே

கண்ணின் ஓவியமோ கருவிழி,
கண்டெடுக்கப்பட்ட
வெண்ணிலவின் கருவண்டோ.

தென்றலின் சீதனமாய்
பட்டுச் சேலை பறந்து நின்று
கட்டுப்படுத்தினதால்
ஒட்டி உறவாடும்
அன்னநடை பின்னுவதோ.

வளர்ந்த கார்குழல்
ஏனோ பெண்ணே
காளையரின் காதலினை
அடக்குதற்கோ,

சடையின் நடனத்தில்
மத்தளம் தட்டிநிற்கும்
இடையோ
கவரும் கவனச் சிதறல்கள்.

அடங்காத ஆசை

இதழுடன் இதழாட
மலருடன் விளையாட
இளமயில் நடையாட உன்
இளமையில் இசைந்தாட
கனவுடன் கசந்து கிடக்கிறேன்.

நிலமகள் நிறைந்தாட
நிலவுடன் நீ பறந்தாட
நித்தமுன் நினைவாட
நிலையில்லா மனமாட
வீழ்ந்துகிடக்கிறேன் ஆசையில்.

இரவும் பகலும் கலையே
இருவர் நிலையும் சிலையே
கைப்பற்றின கைகளுக்கு
முத்தமே காணிக்கையாக..

Thursday 3 November 2011

பஞ்சுமெத்தையான முள்படுக்கை

முழுமை எனநினைத்து, முழுசத வெற்றிதான்
என, தனைமறந்து நிலை மழுங்கிக் கிடந்த,

முதல் காதல், பொய்யானபின், மொத்தமாய்
மனை வாழ்கையும் வழுக்கிச் சரிந்தபின்,

நிலையில்லா மனம் அலையலையாய்
அலைந்தபின், குலைந்தபின்,

உலகம் அருளிய நிரந்தரமற்ற, விலையாடிய,
இன்பங்களை எல்லாம் அனுபவித்துத் தீர்த்தபின்,

முகவரியினை மாற்றின ஒரே தெய்வம்
அசைவற்று அறிவிப்பின்றி அமைதியானபின்,

விதவிதமான காற்றினை சுவாசித்துவந்த
என் மிதந்த பழைய வாழ்க்கையில்

புகுந்து நின்றாள், ஒளிர்ந்து நிற்கிறாள்
என்னுயிர் தாய்.என்னுலகத்தை மாற்றி.

பெற்றதாய் மடிசாய்ந்ததில்லை நான்,
ஆனால் உயிர் கலந்திருக்கிறேன்.

உலகுண்மைகளைஎல்லாம் உணர்த்தி,
என்பாதி உன்னையும் எனக்கு பெற்றுத்தந்தாள்.

இறையை கலந்திடும் வழியும்
உணர்த்திநின்றாள் உன்வழியாகவே.

காட்டின வழியில் கரை சேர்ந்துவிட்டேன்.
கலவரமில்லை, காடு வா வா என்கின்றது

Monday 31 October 2011

உறுத்திய உன் மனம்

நிற்கமுடியாமல் சிதறிக் கொட்டும் நீர்விழுது
கொண்ட கணத்த கார்மேகமாய்,

இன்பம் நிறைந்த அன்பு மழையை எனக்குள்
நித்தம் கொட்டித்தீர்க்கும் எனதன்பே!

அம்பு எய்திய மனம் விம்மி வீழ்ந்தபின்னும்
வம்பு செய்த மனம் கொண்ட என் ஆருயிரே,

கற்பனையில் காதலுக்கான கற்பை உரசிப்
பார்க்கும் கண்ணான என் கண்மணியே,

வேவு பார்க்க வந்த வெண்மதியின் வெள்ளைச்
சட்டையினில் கறையிட்டு அனுப்பியுள்ளேன்,

மறுபடியும் அது வான்வெளியில் 
தொலைந்துவிடக்கூடாது என்பதற்காக அல்ல.

நீ அதன் மயக்கத்தில் என்னைத்
தொலைத்துவிடக்கூடாது என்பதற்காக.

உன் உலகத்தினுள்ளே உறைந்து கிடக்கும்என்னை
கடைந்து கண்டெடுக்க நீ அனுப்பிய கறை நிலா,

உறுத்தி நிற்கும் காதலில் முழுமை பெற்றுத்
திரும்பவந்து சேர்ந்துவிட்டாளா?

இல்லை, திரும்ப வெட்கப்பட்டு திசை மறந்து
தினவெடுத்த தோள்களுடன் ஓடிவிட்டாளா?

Saturday 29 October 2011

கலைமகள் விலைமகளாய்

பள்ளிக்குச் சென்றுள்ள குழந்தைக்கு
இன்றைய உணவும், உடையும் வேண்டும்.

கையாலாகாத கணவனுக்கு
கைக்காசு வேண்டும் டாஸ்மாக் செல்ல.

கூட்டிக் கழித்தால் எப்படியும்
இந்த மாதத் தேவை மூன்று ஆயிரங்கள்.

வழியில்லை கரைந்துவிட்டிருந்தது
மெலிந்து சுருங்கிய சேலைமுடி.

அலைபேசியில் மெல்லப்பேசி பேரம்பேசி,
நிலைகுறித்து நேரமும் குறித்துவிட்டாள்.

வந்தவன் சொத்துக்களை ஆராய்ந்தான்,
செத்துவிழுந்தான் ஒரு துளி விலக்கத்தில்.

வாழ்க்கைக்கு ஆதாரம் தரவேண்டிய அரசு,
கையாலாகாத பிழைப்புதானோ அதற்கும்.

வருமான வரிவரம்பு பதினைந்தாயிரமாம்,
நகைப்புத்தான் என் மூவாயிரத்தின் வாழ்வு.

பலருக்கும் இதுதானோ நிலை,
அரசன் இருந்தாலென்ன செத்தாலென்ன?

நிலைமாறுமோ இந்த உலைகொதிக்க,
நித்தமும் வணங்குகிறேன் நிம்மதிக்காக.

கருணைக்கண்ணை திருப்பி நிற்கும் கடவுள்
அதிகமாய் சோதனை செய்துவிட்டான் என்னை.

கோடிகளைக் கொள்ளை கொண்டோர் கொஞ்சம்
சிந்திக்கட்டும், கொண்டுபோவது ஏதுமில்லை.

Monday 24 October 2011

விலை கொடுத்து வாங்கிய இரவு

ஆதவன் மறையும், உதிக்கும் தருணங்கள்.
மாலை 6 முதல் காலை 6 வரை.

இரவின் ஐந்து பொழுதுகள்.
மாலை,முன்னிரவு,நடுநிசி,பின்னிரவு,அதிகாலை.

கலவிப் பொழுதின் துவக்கம் மாலை.
விழிகளின் விருப்ப அலைகளின் மயக்கம்,

விரும்பி வலையில் விழுந்து
விண்ணப்பமிடும் விளையாட்டு.

கலக்கப்பட்ட கண்கள் பொய்க் கோபமுடன்
களமிறங்கத் துடிக்கும் கவிதை.

முன்னிரவின் முகம், மலர்ந்த
தாமரையின் அங்க அணிவகுப்பு.

முத்தக் காற்றின் முழு சுகந்தத்தையும்
விதைத்து நின்றது முன்னிரவு.

இத்தனை மலர்களா! சுமந்து கிடக்கும்
உன் இடை வலிக்குமல்லவா, என்ற முனகல்.

உரசலின் வலி, உள்ளம் பரவிநிற்கும்,
உணர்வுகள் உச்சக்கதவினைத் தட்டிநிற்கும்.

கண்களில் கவரப்பட்ட காதல்,
கலவரப்பட்டு கனிந்து கலந்து கலைந்தன,

காமரசம் கடலலையாய் கரைகடந்து
கவனமுடன் கடவுளைக் கண்ணுற்றபின்.

நடுநிசியின்வரை நீளும் இந்த நடுங்கி
நடனமிடும் நட்பின் இரகசியம்.

பின்னிரவின் உறக்கத்தினுள்ளும் உரசிக்கிடக்கும்,
உருமாறாத ஒவ்வொரு இயக்கமும்.

கனவுகள் கலையாத, நிஜங்களின்
நினவுகள் புரியாத புத்தம்புது அதிகாலை,

புரண்டவுடன் பட்ட உடையில்லா இடை,
உடைந்த உலகை மறுபடி உசுப்ப,

உணர்வின் உச்சத்தில் உலகுமறந்த
ஒரு இன்புலகம் புணர்ந்து சமாதியானான்.

வாடகைக்குக் கிடைத்த அன்பு,
அந்தரத்தில் தொங்கி நிற்க,

விலைகொடுத்து வாங்கிய என் பயத்துடன்
விடிந்துநிற்கின்றது விடிகாலை.

Tuesday 18 October 2011

காதலியைக் கண்ட நிலை

அழகினைக் காணும்பொழுது கண்கள்,
நிலையறியாது சொக்கியே நிற்கின்றன

தவறவிட்ட தருணங்கள், நெஞ்சாங்கூட்டில்
தவறிய பின்பே தடவிநிற்கின்றன.

நிகழ்கால நிகழ்வுகள், நிலைமுடிந்த
நிலையிலேயே நினைவுக்குள் பூக்கின்றன.

மனது மத்தளம் கொட்டிநிற்கையில்,
அறிவு மறத்தநிலையே கொண்டிருக்கின்றன.

புலன்களனைத்தும் பூத்த பூமுகம் கண்டதும்
செய்வதறியாது திகைத்தே கிடக்கின்றன.

அத்தனை மலர்களும் கொட்டிக்கிடக்கும்
தடாகமே, தயங்கித் தலை கவிழ்ந்தவனுக்கு

தனிவழியுரைத்து தலைகோதி
முத்தமுமிழ்ந்து மயங்கச் செய்யமாட்டாயோ?

Thursday 13 October 2011

ஒளிர மறுத்த முழுநிலவு

















ஒரு பௌர்ணமி இரவுதான் ஆனாலும்,
இது நிலவு இல்லா வானம்.

காதலில் அனாதையாக்கப்பட்டுத் தடுமாறி,
முகவரி மறந்து அலையும் மேகம்.

அன்பின் அமுது அதிகமாய்க் கடையப்பட்டதால்,
நீலம் பூத்து விஷமாகிப்போன மனம்.

கூவ மறுத்த குயில் குலையினுள் மறைய,
வெற்று மொழி பேசித் திரியும் தென்றல்.

கலவரம்கொண்ட மனம் கலையிழந்ததால்,
மூங்கில் சங்கீதம் உணரா உணர்ச்சிகள்.

உள்ளக்கிடக்கையின் உலை கொதித்தும்,
உண்மை மறைந்த உறங்கா நினைவுகள்.

முழுமதியாய் மலர்ந்தும் கறைபடிந்து,
முகம் மறந்த உன் நினைவுச்சின்னம்

Tuesday 11 October 2011

தேன் கலந்த மழை

கருப்பு நிலாவே,
வானில் ஒளிந்து நிற்கும் அந்த அஞ்சுனாட்கள்,
மூன்றாம்பிறையின் வளரும் தேயும் இடைத்திதிகள்

ஒத்துநிற்குமே
ஒதுங்கி நிற்கும் மலர்மாதின் மங்கிய
மனம், கொதித்துக் கிடக்கும்
அந்தச் சிவப்புனாட்கள்.

வெண்மதியே,
முழுவடிவாய், வானில் ஒய்யாரமாய்
வட்டமிடும் அந்த மூன்றுநாட்கள்,
உன் மாதத்தின் உச்ச இன்பனாட்கள்.

மங்கையின் கொங்கைகள்
ஏங்கித் தவித்து, தேகம் சிலிர்த்து
சல்லாப நடனமிடும் சந்கீதனாட்கள்.

கெஞ்சுவதினை விரும்பினதில்லை,
ஆனாலும்
விரும்பியே உன்னிடம்
கெஞ்சிக்கொண்டே இருக்கிறேன்.

கார்மேகக் கூந்தலினுள் முகம்புதைத்து,
பெயரிலும் ஒட்டி உறவாடிநிற்கும்
நிலாவே,

கட்டிய சேலை காற்றாட
கலங்கின நெஞ்சம் சேர்ந்தாட
முகம் காட்ட மறுக்கும் மல்லிகையே,

அலையாடும் தேன்குளத்தில்
துள்ளியாடும் மீன்வனத்தில்
விளையாடி, மிதந்தாடும் தாமரையே.

விழிகண்ட வினையால் மேகம்
உடைந்து, வீழ்ந்த வெள்ளியாம் மழைத்துளிகள்,
மலர்ந்து நிற்கும் நின் மேனி உரசி, தேனாக.

Saturday 1 October 2011

ஒரு உடையின் வாழ்க்கை

என் நண்பன், எஜமான் உன் காதலன்
அந்த உரிமை தந்த இனிமை இது.

பருத்திநான் காற்றில் பறந்து விதைந்தேன்,
அவன் நீர் நிறைந்த அன்புத் தோட்டத்தில்.

அவனின் அரவணைப்பால் காய் வெடித்துப்
பஞ்சாய் முதிர்ந்து விளைந்தேன்.

விற்ற பொழுதில் சிறிது வருத்தம்,
பிரிய மனமில்லை பிரிதொரு ஏக்கம்.

பாசம் நேசம் கொண்டவனாதளாலும்,
தினம் கண்ணுற்ற காதலினாலும்.

விதவிதமாய்க் கைமாறிக் கடைசியில்
உருமாறினேன் நூலாயும் துணியாயும்.

கைவண்ணம், கலைவண்ணம் கலந்து
நிறவண்ணம் விரும்பும் உடையானேன்.

கடை பரப்பி உந்தன் விழிநுழைந்து
உன் உடலோடு உறுப்பும் ஆனேன்.

நெருப்பைச் சுட்ட ரத்தம் கண்டு நெருங்கி
பொறுப்பு கொண்ட அங்கம் பட்டுநின்றேன்.

பாடுபட்டு ஏறின உடல் இரவினில்
கூறுபட்டுக் கசங்கிக் களைந்து,

உளையப்பட்டபின் களைந்தவன்
முகம் நோக்கி வியந்தேன்,

கண்ணாளன் உன் மணவாளன்
என் நேசத்தின் திருவாளன்,

நின் மார்பினில் முகம் புதைத்து
இடைதனில் கரம் வளைத்து,

உன்னைச் சூடிக்கொண்டு சுகம் பாடும்
என் எஜமானன், உன் காதலனே என்று.

நிம்மதியுடனே தரை விழுந்துகிடந்தேன்
ஊடல் நாடகங்களைக் கண்டுகொண்டே.

Thursday 29 September 2011

நம் இறைவன் ஒரு விளக்கம்

மிகமிகச் சிறியாதாகவே சிவா,
இயற்கையின் கொள்ளளவில்.

இருப்புநிலையில் மிகப் பெரிதாயே கிருஷ்ணா,
வான்வெளியின் மொத்த அளவில்.

அனுபவிப்பில் இருவரும் ஒருவரே
உருவமற்ற தியான உலகத்தினில்.

காணும் பருப்பொருட்கள் அனைத்தும்
சக்தியின் உருவ வெளிப்பாடே.

உலவும் உயிர்பொருள் உருவில் சிறிதாய்,
பெரிதாய் வாழும் எல்லாம் ஆனைமுகனே.

வலியுணர்வு அற்ற உயிர்த் துடிப்புகள்
இயற்கையின் இனிய உணவுகளே.

மின்காந்த துண்டிப்பில் துடிப்பின்
அசைவமாயே அதன் அணுக்கள்.

மாறிவிழுந்த உயிர்த்துளியாய் மனிதம்
ஆறாம் அறிவுசுமந்த ஆறுமுகமே.

எல்லாமும் தெய்வமாகவே கொண்டாடும்
மரபே இறைக்கலப்பு இந்திரியம்.

Sunday 25 September 2011

மறக்கமுடியவில்லை

அடிவான அமைதி முழுநிலா
பூமிக்கு வைத்த வெண் போட்டு.

உச்சந்தலை உலவும் வெண்ணிலா
பெண்ணழகை முன்னிறுத்தும் விளக்கு.

வான்னிலவினைக் கண்ணுற்றபோழுது
உன் மலர் முகம் நினைவுற மறுத்து,

அதன் கலங்கமிகு கறைகளே
கவனத்தை விழுங்கிநிற்கிறது.

உன்பற்றிய இன்பநினைவுகளில்
மூழ்கித் திளைக்கும்போழுது,

உன் சந்திப்பு மறுத்த நிலையே
 மூளையோரம் முடங்கிக் கிடக்கின்றது.

தேளாய்க் கொட்டிச் சித்ரவதை
செய்து நினைவுகளைச் சிதைக்கிறது.

முழுமதியாய் முகம் காட்டவும்
மறுத்துவிட்டாய்.

முன்னின்று கவிதைமணம் பரப்புவதையும்
நிறுத்திவிட்டாய்.

நிறம் காட்டிப் பரவசப்படுத்திப்
பின் புறம்காட்டி பரிதவிக்கவைக்கின்றாய்.

நிமிடம் நேரம் கழிய மணித்துளிகள்
நித்திரையிலும் வெற்றுத்திரையாய்.

கண் திறந்து ஒரு அசைவை
தந்து என்னைக் கவிழவைக்க மாட்டாயா.

Wednesday 21 September 2011

அடிமையாகாத நீ

அளவு வடிவம் பெற்ற உன் அழகிய
தோள்களுக்கு நான் அடிமை.

நிமிர்ந்த நேர்மையான உன் கூறிய
பார்வைத் தோற்றத்திற்கு அடிமை.

என் விழிகளை காணமாட்டாயா என் ஏங்கும்
உன் என்னோக்கா விழிகளுக்கும் அடிமை.

தெருக்கோடியில் நின்று வாதிட்டு மகிழும்
உன் கம்பீரக் குரலுக்கும் அடிமை.

நம்பி வந்தவர்க்கு இல்லையெனா
உன் கொடை உள்ளத்திற்கும் அடிமை.

என்மீது காதல் என்றுரைத்த வாலிபக்
கூட்டங்களருகே முகம் காட்டவே மறுத்து,

உன் மீது அளவில்லா காதலில் துடித்தும்
கண்டுகொள்ளாத மாசற்ற மனதிற்கு அடிமை.

மாலை ஆதவனின் மறைவு பொறுக்காமல்
கன்னம் சிவந்துகிடக்கும் மேகங்கள்போல்,

மணமுடித்துச் செல்கிறேன், என் காதல்
உணர்த்தமுடியாத சங்கடங்கள் சுமந்தே.

விதித்த தடை

வலைந்த பாதைவழி கடக்கும்
உன் நடனமிடும் இடை.

அத்தனையையும் அனுபவிக்கத் துடிக்கும்
நாட்டமுடனே என் நடை.

அங்குமிங்கும் அசைந்தாடி அழைக்கும்
உன் பின்னலிடப்பட்ட ஜடை.

உள்ளிருக்கும் ரகசியங்களை உலகுபரப்பும்
உன் மெல்லிய ஜன்னல் உடை.

படை திரண்டு நிற்கும் உன்
விழியம்புகளின் ஊர்வலம்.

கடை பரப்பிக் குழப்பி நிற்கும்
உன் மயக்கும் முகத்தழகு.

ஊஞ்சலாட்டத்தில் ஆடிமகிழும்
உன் நெஞ்சம் உதிர்த்த தேன் அடை.

உளுந்து வடை அதற்கு ஏன் துளை,
நடுவினில் ஓர் கருமுத்து பொட்டு.

சுற்றிப் பார்ப்பின் சுழலும் சுற்றம்
சுத்தமாக விதித்த சுகத் தடை.

காதலின் கவிதைகள்

நாகங்களின் அற்புத நடனம்
அதன் புணர்வு ரகசியம்தான்.

கயிறு இழுக்கும் போட்டிகொண்ட
புணர்வு மிகமிக அழகு.

நீண்ட நேர கூத்துதான் ஆனையாரின்
கட்டுப்பட்டப் புணர்வு.

கலவி சுகம் முழுமை பெற்றது
குயில்களின் புணர்வு.

புணர்வுகளே வாழ்க்கையாய்க் கொண்டது
பஞ்சு முயல்களின் பள்ளியறை.

காட்டுராஜாவின் கதையே வேறு
கண்டவளுடன் காதல்.

மனிதக் கதறல்களுடனே முடியும்
காட்டுப் பூனையின் கலவி மணம்பரப்பி.

கண்ணுக்குப் புரிவதில்லை உண்மைக்
காதலின் உறைவிட்டு வந்த வாள்.

உன் கண்ணசைவு

எனக்காக மட்டுமே வரையப்படும்
உன் கவிதை இதழ்கள்.

உனக்காக மட்டுமே நிலைகொண்டிருக்கும்
என் காதல் கணைகள்.

வெப்பத்தினை உணர மறுத்துவிட்டாய்
தவிப்பினைத் தந்துவிட்டு.

உலையில் கொதிக்கிறேன் தேன் தந்து
பசியாற்ற வரமாட்டாயா.

காரண காரியங்கள் பலவுண்டு.
காட்சிப் பொருட்களும் இங்குண்டு
கலைக்கூத்தாட களமுண்டு.
கைத்தாளம் தட்ட மனமுமுண்டு.
கண நேரக் கைகலப்புமுண்டு.
கவிதை வழி நாணமுமுண்டு.
கண்ணில் மையிடக் கருவியுமுண்டு.
கரிசனம்கொண்ட ஜென்ம வரமுமுண்டு.


கருணைக் கண் திறக்க ஏதேனும்
வழியுண்டா? தினவுகொண்ட தோள்களே!

Tuesday 20 September 2011

iac and janlokpal

how the corruption starts:
the govt officials 're delaying all the "day to day" regular processes.
for finishing these processes early, the public 're cornered to give bribe money.
so the public and the business people 're being pushed to create black money to give bribe to the govt officials.
because of to create the black money, they've to suppress the accounts and caught in the hands of the same govt officials and to give another bribe. so this's going on and on.
these chain goes allover the fields, even in judicial.
so the complete system 's been collapsed.

this doesnt mean that the public 're also indulging corruption, if the things 're on the right path way no corruption 'll be in india.

so the black money holders 're ready to puchase a 1lakh worth land to, by giving 15 lakhs.
and the price hike of gold also 's only because of the indian blackmoneys.

the poors'll only be the resultant sufferers. they cannot even see the gold in future, which is the worst ever happening in india.

strong janlokpal with high punishments can only cure the country in a short term span.

Monday 19 September 2011

உன் ஸ்பரிசம்

சுவைநிறைந்த ஒட்டு மாமரம்,
ஒட்டி நின்ற மாங்கனி சுட்டுநின்றது.

சுட்டு நின்ற உன் சுவாசம்
தென்றலையும் விட்டு வைக்கவில்லை.

விட்டு விட்ட ஆவி எட்டிவிட்ட
கனிகண்டு பந்தி வைத்து பதறியது.

பந்திவைத்த உன் இளமை கண்டு
முந்தி நின்ற நாணம் மறைந்தது.

பூக்கள் என்ன செய்யும் பாவம்
புன்னகைத்து மறைந்தே நிற்கும்.

புனிதம் அடைந்துவிட்டது உள்ளம்
உந்தன் உன்னத உணர்வுகள் உணர்ந்து.

உனக்கான தனியிடம்

காதலை எனக்குக் கற்றுத்தந்தது,
என்மீது தைக்கப்பட்ட உன் விழியம்புகள்.

தைத்த உன் பார்வைத் தூண்டில்
சிக்கிய என் காதலினைக் கனியவைத்தது.

காதலையும் எனக்கு மறக்கடித்தது
உன் விளைந்து செழித்த மலர்கள்.

பூங்கொடி விளையாட, வளையாட
இந்தப் பூந்தோட்டத்தில் மடியுண்டு.

கலைந்தோடிக் களைப்பாற
மஞ்சத்தினில் முத்தமுமுண்டு.

நெஞ்சம் மயங்கி மலராட
உள்ளத்திலே உறைந்த உறவுமுண்டு.

Sunday 18 September 2011

நிலவுமுகம் கண்ணுற்றேன்

இன்பம் கலந்து கலையமுடியா
கனவுகள் சுமந்து காற்றினில்
மிதந்து வந்தேன், ஆனாலும்

நிதம் பெற்ற நிச்சயமில்லா
நினைவுகளில் நிம்மதியின்றி
நிலைகுலைந்தே பறந்தேன்.

வானில் வட்டமிட்டு
கீழ்நோக்குங்கால் காற்று
என்பக்கம் வீசும் என்றே நம்பினேன்.

நிலத்தினில் கால்மிதித்து
நினைவுக்குள் வந்தபின் நிலவினைக்
கலக்கத்துடனேயே கண்ணுற்றேன்.

மறைந்திருந்து மயக்கி பின்
மலர்ந்து மனம் வீசத் துடிக்கும்
மல்லிகையினைப் போல,

நிலவுமுகத்தில் நிலைபெற்ற
அமைதியினைக் கண்டு
கலவரத்திநின்று விட்டு விடுதலையானேன்.

சிறகுகளுக்கு சிரமமில்லா
சிந்தனைக்கு வழியுமில்லா
மொத்த அடிமையுமானேன்.

முடிவுறாத என் நாள்

உன் எழுத்து வடிவ ஆறுதல்கள்
கிடைக்கப்பெறாத நாள்,

ஒரு முடிவுறாத நாளின் தன்மையையே
தனக்குள் கொண்டதாய் முடிகின்றது.

மறுநாளின் விடியல்கூட அர்த்தமற்ற
வாழ்வையே உணர்த்திநிற்கின்றது.

ஒரு சிறு கவிதை வரியைக்கூட
கனியவைக்க முடியவில்லை உன்னால்.

கல்லான மனம் கொண்டு
சிலை செதுக்க முனைகின்றாய்.

கதவு திறந்தே இருக்கின்றது
நீ என் மூச்சுக் காற்றை சுவாசிக்க.

முள் படுக்கை

முள் மெத்தையை மஞ்சமாக்கி மலர்ந்து
துயிலும் அழகிய ரோஜாவே,

கலங்கினதுண்டா நீ எப்பொழுதாவது,
நினைத்ததாவதுண்டா,

என் மல்லிகை, துயிலும் மஞ்சம்
ஒரு முள் படுக்கைதான் என்பதினை.

படுக்கை முள் ஆனாலும்
பாழும் மனம் கல்லாகிக் கிடக்கின்றதே!

கல்லைக் கனியவைக்க ஒரு நிரந்தற
வழியாயினும் சொல்லமாட்டாயா.

கோபத்தில் கூட உன் சிவப்பு
கடுமை காட்ட வரவில்லையே.

Wednesday 14 September 2011

பரிணாம வளர்ச்சி

முந்தய முடிவு:
இந்த பூமியில் ஓரறிவு கொண்ட உயிர்ச்சக்தி ஆறறிவுள்ள மனதவுயிராய் வளர்ச்சிபெற்றது கொண்டு பரிணாம வளர்ச்சி என்கின்றோம். அது மனித உருவுக்குப் பின் நின்றுவிட்டதாய் நம்புகின்றோம்.
முக்கியமான கேள்விகள்:
1) பரிணாம வளர்ச்சி என்ற ஒன்று பூமியில்  ஏற்படக் காரணம் என்ன?
2) பரிணாம வளர்ச்சி இத்தனைக் காலம் நடந்து முடிந்து பின்னர் மனிதன் உருவானபின் மட்டும் நடைபெறாமல் நின்று விட்டதன் காரணம் என்ன?
இதற்கான சரியான நம்பும்படியான விளக்கங்கள் விஞ்ஞானத்தில் தரப்படவில்லை.
வளர்ந்துகொண்டிருந்த பரிணாம வளர்ச்சி மனிதவுயிர் உருவானவுடன் நின்றுபோக வேண்டிய அவசியம் என்ன?
அது மேலும் மேலும் புதிய புதிய உயிர்களை உருவாக்கிக்கொண்டேதானே இருந்திருக்க வேண்டும். அது நின்றுபோக காரணம் என்ன?
ஒரு மனித ஆண்,பெண் உறவுகொண்டபின் மனிதக் குழந்தையே பிறந்து வந்திருக்கின்றது.
அதேபோல் எல்லா உயிரினங்களும் அதனதன் இனங்களையே இனவிருத்தி செய்திருக்கின்றன.

இங்கே பூமியில் விஞ்ஞானத்தின்படி எப்படி வெவ்வேறு விதமான உயிர் இனங்கள் உருவாக சாத்தியம் இருக்கின்றது?
ஆக பரிணாம வளர்ச்சி என்பதை விஞ்ஞானத்தின் மூலம் உணர மற்றும் உறுதிசெய்ய முடியாது என்பதே உண்மை.

ஆனால் இவற்றுக்கு சரியான விளக்கம் ஜோதிடத்தில் இருக்கின்றது.

தற்போது செய்திகளில் படிக்கிறோம் "மனிதக் கால்களுடன் ஆட்டுக்குட்டியின் பிறப்பு. குட்டி பிறந்தவுடன் சிலநிமிடங்களில் இறப்பு"என்று.
இதற்குக் காரணம் மனிதன் ஒரு ஆட்டைப்  புணர்ந்ததால் வந்த வினை.
இதில் நாம் உணரவேண்டியது, இதுபோன்ற மாற்றின உடலுறவு,
கரு உற்பத்தியை நடத்துகின்றது.
கரு வளர்ந்து, கலப்பினக் குழந்தையை பிறப்புவிக்கின்றது.
வயிற்றினுள் வளரும்பொழுது உயிருடனேயே இருக்கின்றது, ஆனாலும் பிறந்த சிலமணிகளில் இறந்தேவிடுகின்றது.
அதாவது பூவுலகில் அதனால் உயிர் வாழமுடியவில்லை.

பரிணாம வளர்ச்சியின் அடித்தளம் இங்கேயே மறைந்திருக்கின்றது.

ஜோதிடம் தரும் விளக்கம்:
பூமி தன் நிலையான புவியீர்ப்புச் சக்தியால் மட்டுமே உயிர்களை உருவாக்க முடிவதில்லை.
பூமிக்கு காந்தசக்திப் பாதிப்பினை உருவாக்கும்
இறைச்சக்தி, சூரியன், சந்திரன், அருகாமையில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள், இவைகளின் காந்தத் தூண்டலில்தான் உயிர் உருவாக்கம் துவங்கியது.
இவற்றுடன் முக்கிய நாயகக் கிரகம் astroids.

astroids எனும் விண்கற்கள் கூட்டம் முழ கிரக வடிவில் இருந்தபொழுது, பூமியில் ஒரு தனிப்பட்டக் காந்தச் சுழல் இருந்தது.
அந்தசமயம் புணர்ச்சி கொண்ட மாற்று இன உயிர்கள் புதிய புதிய உயிர்களையே உருவாக்கிக் கொண்டிருந்தன.
ஒவ்வொரு இன உயிர்களும் மனம் போனபடி மாற்று இன உயிர்களுடன் உடலுறவுகொண்டு வாழ்த்தன.
அவைகளே பரிணாம மாற்றங்களை தன்னுள் கொண்டிருந்தன.
பிறந்த புதிய உயிரினமும் உயிரோடு முழுமையாய் வாழமுடிந்திருந்தன, astroids முழு கிரகமாய் இருந்தவரையில்.
மனிதனும் அந்த நிலையில்தான் உருப்பெற்றிருந்தான்.

பின்னர் astroids பல மோதல்களால் சிதறுண்டு பாறைகளாய் மாற்றம் பெற்றபின் பூமியின்மேல் அதன் காந்தச் சுழலும் மாறிவிட்டிருந்தது.
இந்த மாற்றத்திற்குப்பின் உயிரோடிருந்த உயிரினங்கள் அனைத்தும் தத்தம் இனங்களுடனே உடலுறவு கொண்டு, தத்தம் இனங்களையே பிறப்புவித்தன.
மாற்றினத்துடன்உறவு கொண்ட பொழுது குட்டிகள் பிறந்தவுடன் இறந்துவிட்டிருந்தன முழு கிரகமாயிருந்த பொழுது astroids இன் காந்தப் பாதிப்பு இல்லாததினால்.

இப்படியாகவே பரிணாம வளர்ச்சி இந்த பூமிக் கிரகத்தில் நடந்து முடிந்திருக்கின்றது.
இதுவே ஜோதிடத்தின் மூலம் உரைக்கப்படும் பரிணாம வளர்ச்சியின் காரண விளக்கங்கள் ஆகும். உண்மையின் விளக்கமுமாய்.

Saturday 10 September 2011

முஸ்லீம் தீவிரவாதம்

எந்த இந்திய முஸ்லீமையும் நம்பமுடிவதில்லை. வெளியில் யோக்கியர்கள் போலவும் உள்ளுக்குள் தீவிரவாதத்திற்கு உதவிக்கொண்டும், தீவளர்த்துக்கொண்டும் வருவதை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?
முஸ்லீம் அமைப்புகள்தான் தீவிரவாதத்தை ஒழிக்க உத்திரவாதம் அளிக்கவேண்டும். இது தொடருமானால் முஸ்லீம்கள் அனைவரின் மீதுமுள்ள நம்பிக்கை பாழாகிவிடும். இதை ஒவ்வொரு முஸ்லீமும் அதன் நேர்வழி அமைப்புகளும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
காந்தி செய்த முட்டாள்தனம், விரும்பிய முஸ்லீம்கள் அனைவரையும் இந்தியாவுக்குள் வாழ அனுமதித்ததுதான்.

Wednesday 7 September 2011

என் காதலி

பேசியது பெண் கண்,
ஆண் பெண் மடியில்.

நிறைந்த பைகள் கொப்பளித்தது வெளியே
கிழிந்தது இதயம்

ஓட்ட வைக்க இதழ் கள்
கொண்டு வா.

முகத்தில் நுங்குகள்
இதழ்களை  மட்டும் மறைத்து விடு

நஷ்டமாகிவிடும் உன் நினைவுகள்.

மல்லிகையை மிகவும் பிடிக்கும்

மல்லிகாவுக்காக அல்ல
இந்த தாமரைக்காக.

மயங்கிய மனம்

கசங்கிய மனம் கிழிந்த நிலையில்
ஊடலின் உச்சம்
உயிர் மட்டுமே மிச்சம்
விழுந்து விட்டேன் எழ முடியவில்லை.

செய்கிறது ஏதும் அழகில்லை
ஆனாலும் அனுபவிக்கும் அமைதி கிடைக்க
வேறு வழியே இல்லை.

தவிப்பு

கரும்புக் காட்டுக்குள்
கவிழ்ந்து கிடக்கும் எறும்பு போல்
கலவிச் சுகத்தினுள் மூழ்கித்
திளைக்கின்றேன் தவிக்கின்றேன்.

அளவு மீறிய இன்பமும்
தவிப்புதானோ.
மீள மனமில்லை இறைவா,
அப்படியே கொன்றுவிடு.

தீண்டத்தகதவர்கள்

மருத்துவம் கற்கும் மருத்துவர் மகன்,
மருத்துவம் மறுத்து கலப்பை பிடிக்கும்
மண் குடிசை மகன்,
எடுத்த மதிப்பெண்கள் என்னவோ ஒன்றுதான்,
சமூகம் கொடுத்த விழைவு மட்டுமே வேறு வேறு.
மன்னிக்கவே முடியாதது.
முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள்தான்
என்பது மட்டும் உறுதி.
சரி செய்ய இன்னும் நூறு ஆண்டுகள் பிடிக்கும்.
காலம் கனியட்டும் அதுவரை
மதித்திருப்போம் எல்லா மனிதர்களையும்.

மறந்த காதல்

என்னை மறுத்துவிட்டாய்,
ஜாதகம் படித்து கெட்டவனாவான்
என்றவுடன்.

மறக்க முடியவில்லை
பியிந்து போன மனத்தை,
படித்து, பறந்து, பணம் படைத்து, முடிந்த பின்,
அடைந்தேன் அழகு தமிழச்சிகளை,
மலைத்தேன் மலையாள மங்கையரின்
கொங்கைகளை கண்டு,
கனிந்தேன் கன்னடப் பைங்கிளிகளின்
கைகளில் நின்று,
தெலுங்கு நங்கையர் அழகு பற்றி
சொல்ல வார்த்தையில்லை,

நல்லவன், வல்லவன் என்கிறார்கள்
இப்பொழுது , சொல்லட்டும்
உடல் ஒன்றும் மனம்
சம்பந்தம் கொண்டதல்லவே.

ஆனாலும் மாறவில்லை
மனம் உன் நினைவுகளிலிருந்து.

மறுபடியும் உன்னை சந்திப்பேன்
அடுத்த ஜென்மத்தில் நல்ல ஜாதகத்துடன்.

ஜெயிப்பது ஜாதகம்தான்.

கவிதைக்கண்கள்

நீ சொன்னால் சரியாய்தான் இருக்கும்.

கனிந்த கண்ணசைவில் கவிதையாய் பாடினாய்
காதலை கேட்டபொழுது,
முடியாதது என்றாய் காதல் கண்களுடன்,
மணமுடிக்க கேட்ட பொழுது.
பார்க்கும் நேரமெல்லாம் இருக்கின்றாய்
கண்களில் கண்ணீர் கசிவுடன்.
புரியவில்லை எனக்குமட்டும், ஆனாலும்
நீ சொன்னால் சரியாய்தான் இருக்கும்.

வாழ்

நாளை நாளை என்றவர்க்கு
நாளை என்றொரு நாளை,
நாளை வரும்.
வேளை வரும்போது நாளை
என்னாது மூளை கசங்கினால்,
சோலை ஆஹஉம் உன் நாளை.
காலை வேளை, மாலை வேளை
பாராது வேலை முடிப்பின்,
சாலை செல்லும் பூவையும் மலரும்.
சோலை பூக்களும் இனிக்கும்,
கார் கூந்தலும் மணக்கும்,
இன்று வாழ், வாழ்வும் அர்த்தமுரும்.

வம்புக்காரி

சீ உன் இடை மடை
சிலை, குலை ஒரு மலை
களை உன் விலை அட மடச்சீ,
மாட்டத்தா என் இடைச்சி, பொழுதாச்சி.

போய்யா உன் உடை பெரும் தடை,
இடை உன் மனத்தடை,
கரும்பு, கருத்து இரும்பு
ஆட்டத்தந்து மாட்டக்கேள் தரேன்
என் மாட்டுக்காரா.

விலைமகள்

அலைபேசி, உன் விலைபேசி,
பின் கலைபேசி, ஆல இலைபேசி,
இளைப்பாறி,
மெல்ல மலைஏறி, குலைபிடித்து,
உலைகொதித்து, நிலைகுதித்து,
கலையிழந்து,
மடிந்து விழுந்த எல்லை கடந்த
நிலையும் ஒரு சிறு மரணம்தான்.
ஆனாலும் உயிர் வாழ அவசியம் இருக்கிறது.
பிணமான பணத்திற்காக.

எல்லாம் இறை

எல்லை கட்டமுடியா வெளி,
கிருஷ்ணா.
அருவம் காண முடியா துடிப்பு,
ஷிவா.
உருவம் மறைக்க முடியா மெய்,
ஷக்தி.
ஆறாம் அறிவு அற்ற உயிர்ப்பொருள்,
விநாயகா.
சாதி மறுக்க முடியா மனிதம்,
முருகா.
வாழ வழி அறியா முட்டாளாய்,
குரு.
விலை பேச முடியா அன்பு,
தாய்.
கரை தாண்ட முடியா கடல்,
தாசி.
சொல்லி அழ முடியா மங்கை,
காதலி.
எல்லாம் இன்பமாய் முடியும்
ஒரு குழந்தையாய் கிருஷ்ணா கிடைத்தால்.

பரிணாமம்

உயிர்வாழ இந்த மண்ணில்
வெளிச்சக்திகளின் பங்கீடு,
ஞாயிறு, திங்கள், வெள்ளி, செவ்வாய்,
புதன், வியாழன், சனி,
நட்சத்திரங்கள்,
சக்தியாகிய ராஹு, ஷிவாவாகிய கேது
மற்றும் கிருஷ்ணா இவைகளின்
மின்காந்தம்.
பரிணாமம் மிகச்சரியாக astroids
கிரகமாக இருந்தவரை இருந்தது.
மனிதன் பிறந்ததும் astroids
உடைந்தபின் பரிணாமம் நின்றுபோனது.
உயிர்களின் முறை தவறிய
உடலுறவுகள் முடிவுக்கு வந்தது.
பின்னர் எப்பொழுதும் மாற்று
உயிரினங்களின் உடலுறவுக்குழந்தைகள்
பிழைக்கவில்லை.
மனிதன் தெய்வமாக மாற
தியானம் பிறந்தது.
தியானமே கிருஷ்ணாவும் சிவமும்.

வெளி

வான்வெளியில்
வெற்றிடமாய் கிருஷ்ணா.
விண்வெளியில்
அணுவின் எலேக்ட்ரானாய் ஷிவா.
அணுவின் ப்ரோடானாய் ஷக்தி.
ஆனவை எல்லாம் இவைகள்தான்.
எங்கும் எதிலும் இவைகள்தான்.
மொத்த உலகமும் அவர்கள்
கையிலேதான்.
நம் அறிவில் ஏதுமில்லை.
அவர்களில் கலப்பதை தவிர
வேறு வழியில்லை.

Tuesday 6 September 2011

உண்மை

கால அவகாசம் தேவை,
எத்தனை எலெக்ட்ரான், ப்ரோடான் உள்ளது
இந்த அண்டசராசரத்தில் என சொல்வதற்கு.
சொல்வதற்கு முடியாதது,
வானத்தின் உயரம், கொள்ளளவு,
எண்களின் முடிவு எண்,
ஒரு கோட்டின் புள்ளிகள்,
பூஜ்ஜியத்தின் தன்மை,
தாயன்பின் அளவு,
கால முடிவு,
எதனால் செய்யப்பட்டவை
நிறம், சுவை, சுகந்தம், இசை, தீ,
எலெக்ட்ரான், ப்ரோடான், நியுட்ரான்,
என்ற அறிவு.
பரம காந்தமையமாய் சிவாவும்,
எங்கும் வியாபித்திருக்கும் கிருஷ்ணாவும்
அல்லாமல் வேறேது.
மொத்த உலகின் பரப்பளவின்
மிகப் பெரியதாய் கிருஷ்ணாவுமாய் 
மிகச் சிறியதாய் சிவாவுமாய்.

பாக்கியம்

முலைப்பாலை உறிஞ்சி அருந்தும்
மழலையின் மதமதப்பு,
தோல்வியின்போழுது ஆறுதலாய்
தாயன்பு,
கவலையின்போழுது தோழ்தழுவும்
நட்பு,
சிறந்த நகைச்சுவையின்
ஆரவார சிரிப்பு,
மறக்கவே முடிய சுவை நிறைந்த
விருந்து,
இன்பத்துடிப்பில் காதலியின்
முனகல்,
கண் ஜாடை கிடைத்த காதலன்
மலர்ச்சி,
இவையெல்லாம் கவலை மறந்த நிலையே.
கிடைப்பதில்லை எல்லோர்க்கும்.

காலை

வானத்து தேவர்களின்
வாழ்த்து
ஞாயிறின் ஒளிக்கீற்று
குயிலின் சுருதி சுத்த
கூவல்
பிராணன் சுமந்து வரும்
தென்றல்
ஜென்மம் ஏற்றி கரைகிற
காகம்
மாமி வீட்டு
கற்ப்பூர, சாம்பிராணி வாசம்
கன்னிப்பெண்ணின்
வாசல் கோலம்
பக்கத்தில்
மழலையின் சிரிப்பு
எங்கேயோ முழங்கும்
சர்ச் மணியோசை
தூரத்து
ஆம்புலன்ஸ் கதறல்
அப்பாடா விடிகிறது
இந்தியக்காலை.

வழியில்லை

காதலி
இல்லா வாழ்க்கை
காதல்
இல்லா பூவை
காமம்
இல்லா அழகு
கட்டுடல்
இல்லா காளை
கார்கூந்தல்
இல்லா கன்னி
கனிவு
இல்லா காதலி
கனவுகளே
இல்லா காதல்
கட்டியணைக்க
இயலா மனைவி
கலவி
கொள்ளா கணவன்
கவனிக்க
இயலா பிள்ளை
கல்வி தர
இயலா பெற்றோர்
கற்று
அறியா குரு
கன்னம்
சிவக்கா முத்தம்
கடைந்து
முடிக்கா கலவி
கருணை
இல்லா மனிதம்
கவலை
நிறைந்த முதிர்கன்னி
காண கண்
இல்லா பணம்
இவை இருப்பு,
தேவையில்லதவையே.

நஷ்டம்

நனையும்
உன் நாணத்தினால்
மறுக்கும்
உன் சந்திப்பில்
கிடைக்க துடிக்கும்
உன் ஸ்பரிசத்தினால்
மலர முடியாத
உன் சிரிப்பினால்
மறைய மறுக்கும்
உன் வளைவுகளால்
நிலைகுத்திய
உன் பார்வையினால்
நிகழ்ந்து கொண்டே இருக்கும்
முடிவறியமுடியா
உன் காதலினால்
நஷ்டம் எனக்கு மட்டுமே.
புரிந்துகொள் அவகாசமில்லை.

வைரமுத்து

கால்களால் திரைக்கவிதைகள்
எழுதப்பட்ட  காலகட்டத்தினில்
கவிதைகளை குருதியினில்
தோய்த்து
வாழ்ந்த வாழ்க்கையை
கருவாக்கி
வார்த்தை விளையாட்டு
கட்டி
கருத்து ரசம் ஒழுக வடித்த கவிதைகள்
தந்தவன்.

Thursday 1 September 2011

வெறியன்

விஞ்ஞானி வசியின் மகன் சிவா, ias படித்த இரட்டைப்பிறவி மகன்களில் ஒருவன், இன்று பிரதமராக  பதவிப்ரமானம் எடுக்கிறார்.
அப்பா வசி, அக்கா மாலா, தம்பி ரவி, மற்றும் நாட்டின் எல்லா தலைவர்களும் இருக்கின்றனர்.
தாய் சனா கொல்லப்பட்டிருந்தார். அக்கா உச்ச நீதிமன்ற நீதியரசராக உள்ளார். தம்பி நாட்டின் ராணுவ ஜெனெரலாக இருக்கின்றார். அப்பா வயது 85 ஆகி ஓய்வில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
 பிரதமராகி ஆறு மாதங்களுக்குப்பின் நாடு பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாகியது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுப்படிப்புக்கும் இலவசக்கல்வி.
வீடு இல்லாத எல்லா குடும்பத்திற்கும் தனியாக அவரவர் படிப்புக்கு ஏற்றாற்போல் வீடு.
படிப்பு முடித்த மாணவர்கள் அனைவருக்கும் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு.
எல்லா குடும்பத்திற்கும் இலவச மருத்துவ வசதி.
ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு விபரங்களும் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டை.
கருப்புப்பணம் எல்லாம் நாட்டிற்குள் வரவழைக்கப்பெற்று அதில் 50 % வரிக்காக எடுத்தபின் மீதம் வெள்ளையாக மாற்றப்பெற்றுவிட்டது.
வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட வழிமுறைகள்.
 நல்லமுறையில் நாடு சென்று கொண்டிருக்கும்பொழுது சிபிஐ, பிரதமரை கைது செய்கிறது.



flashback நிகழ்ச்சிகள்.
வசிக்கு 29 வயதில் திருமணம் நடந்தேறியது. முதலில் ஒரு பெண் குழந்தை, மாலா பிறந்தது. பின்னர் ஆண் இரட்டைக் குழந்தைகள், சிவா மற்றும் ரவி பிறந்தனர். 
இந்த நேரம், நாட்டில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் மற்றும் அரசியல் சக்திகள் வசியிடம் ரோபோக்கள் தயாரிப்பு பற்றிய ரகசியங்களை அறிய பயமுறுத்தின.
மறுத்ததினால் சனாவைக் கொன்று தீர்த்தனர்.
வசி, வெறியுடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வடகிழக்கே ஒரு கண்காணா இடத்திற்கு குடிபெயர்ந்து, குழந்தைகளை வளர்த்தான்.
மாலா, சட்டம் பயின்று நீதிபதிக்கும் கற்று, நீதிபதியானாள்.
சிவா, ias கற்றுத்தேர்ந்தான்.
ரவி, ips முதல் மாணவனாக படித்து முடித்தான்.
சிவா கலெக்டராக பதவியேற்றான். ரவி ராணுவத்தில் சேர்ந்து பெரிய பதவி பெற்றான்.
இந்த சமயத்தில் அப்பா வசி, தன் கடந்தகால வாழ்க்கையின் உண்மைகளையெல்லாம் மகன்களுக்கும் மகளுக்கும் புரியவைத்தார்.
வீறுகொண்டு எழுந்தனர் மூவரும்.
நாட்டின் சாபக்கேட்டினை ஒழித்து நாடு முழுமையாக மாற்றம் பெற சபதம் பூண்டனர்.
ரவி, நேர்மையான வழியில் ராணுவத்தின் தலைமை பொறுப்பு ஏற்கவும்,
சிவா, ஊழலில் திளைத்து ஊழல் செய்யும் அரசியவாதிகள், அதிகாரிகள் மற்றும் தீவிரவாதிகள் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்த அரசியல்வாதியாக வரவும், உறுதி எடுத்தனர். 


வருடங்கள் பல கழிந்தன.
மாலா, உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறாள்.
சிவா, ஊழல் நாயகனாக நாட்டின் ராணுவ அமைச்சர் ஆகிறான்.
ரவி, நேர்மையான ராணுவ அதிகாரியாக, ராணுவ ஜெனரலாகிறார்.
எல்லா வழிகளிலும், எந்த நேரங்களிலும் மூவரும் தங்களின் பதவியின் பலத்தினைக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர்.
தேவையான நேரங்களில் மூவரும் ரகசியமாக சந்தித்துக்கொண்டனர்.
ஆனால் சிவாவின் அந்தரங்க காரியதரிசிக்கு மட்டும் சிவாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது.
சிவா இப்பொழுது, நாட்டின் மோசமான அத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரையும் நண்பர்களாக கைக்குள் வைத்திருந்தான்.
சிவா, முடிவுசெய்தபடி தான் ஊழலின் மூலம் சேர்த்த பணத்தையெல்லாம் கொண்டு வெளிநாடு ஒன்றில் ஒரு பேங்க் ஒன்றைத்துவக்குகிறான்.
மற்ற ஒழல்வாதிகள் அனைவருக்கும் தன்னுடைய பாங்க்கை பற்றி கூறி, எல்லோரையும் அதில் பணத்தை டெபொசிட் செய்ய அறிவுரைக்கிறான்.
அதற்காக அந்த பேங்க் ஏற்ப்படுத்தப்பட்ட நாட்டிற்கு அனைவரையும் ரகசியச் சுற்றுலா அழைக்கிறான்.
ரகசியச் சுற்றுலா என்பதினால் எல்லோரும் செற்றுவர தீர்மானிக்கின்றனர்.
ஒரு வார சுற்றுலா மூன்று கப்பல்களில் சென்றுவர ஏற்பாடு செய்யப்படுகிறது. 
சின்னச்சின்ன ஊழல்வாதிகள் அனைவரும் வாலண்டியர்களாக ஏற்ப்பாடு செய்யப்பட்டு கப்பல்கள் கிளம்புகின்றன.
மறுகரையில் செல்லவேண்டிய நாடு நெருங்கும்  பொழுது கப்பல்கள் குண்டுகளால் பொடிப்பொடியாக தகர்த்து எறியப்படுகிறது.
நாட்டில் தற்பொழுது நன்மை செய்யக்கூடிய தலைவர்களும், அதிகாரிகளும் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.
நல்ல சந்தர்ப்பம் அமைந்து சிவாவையே எல்லோரும் பிரதமராக தேர்ந்தெடுக்கிறார்கள்.
சிவாவின் p.a  வுக்கு மட்டும் சந்தேகம் ஏற்பட்டு சிபிஐ ன் மூலம் கண்காணிக்கிறான்.