Friday 10 February 2012

ஊடல் காதலில்


மூளையினுள் நிரம்பிக்கிடக்கும்
நினைவுகளின் கனவலைகள்,
அலையாய் மலைந்து உருவுற்றபின்,
கருவுற்ற காவியக்காதல் இது.

தேன் சுமந்த மலர்களை தென்றலில்
ஆடவிட்டு, பந்தலாய் படரவிட்டு,
மெல்லிய தண்டினை கொண்ட
வல்லிய வளைந்த கொடியே,

வண்டிசைக்கும் மெல்லிசையை
கலந்து காற்றில் கரைத்துவிட்டு,
கண்ணசைப்பில் கண்டபொழுது
கவிழ்ந்து கிடக்கும் கொடியிடையே,

கொட்டிக்கொட்டி புழுவுக்கு
உறவு கொடுக்குமாம் குலவி.
குத்திக்குத்தி கொன்று குற்றுயிராய்
விட்டுச் சென்ற காதலியே!

தவறுதான் என்ன? ஊடல்
என்ன காதலில் முரணா?
எனக்குள் முட்டிக்கிடக்கும்
காதலுருவை உணர்த்துதலெப்போ? 

No comments:

Post a Comment