Friday 20 January 2012

காதல்பரிசு எங்கே?


தங்குதடையின்றி தொடுக்கப்பட்ட
என் உன்மீதான கேள்விக்கணைகள்,

வந்துநின்றபின் உன் அழகிலும்
அரவணைத்த அன்பிலும் மயங்கி, மதிமறந்து

பதில் பெறமுடியாமலே உணராமுடியாமலே
உன் காலடியில் வீழ்ந்துவிட்டதுபோலும்.

காத்திருந்து காத்திருந்து கவனம் சிதைந்து
விழி வழுவிழந்து நிலைமறந்து கிடக்கிறேன்.

கள்ளம் நிறைந்து, பள்ளம் விழுந்து,
லஞ்சம்ஏறி, துருவேறின தங்கமாய்

மூடுபனி வெண்கூந்தல் பெற்று
வாடிநிற்கும் பாரதமாதாவைப் போல,

செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்.
புதுவருடமாம் 2012 கண்திறக்குமா, பார்ப்போம்.

 கடந்துசென்ற காலப் பாதையினைத் 

திரும்பிப்பார்க்கலாம், திருத்திக்கொள்ளலாம்.

ஆயினும் மறுபடியும் மகிழ்வுடன்
அதில் நீந்திக்கிடக்க முடிந்ததில்லை.

உறவுக் கிணற்றில் வீழ்தல் எண்ணி,
காதல்க் கடலினுள் கவிழ்ந்து கிடக்கின்றேன்.

உடல் உயிர் கொள்ளல் எனல்,
ஒரு ஒருங்கிணைந்த காந்தக்குவியல்.

உன்மீது கொண்ட காதல் தனல்,
குறிப்பது உயிர்ப்புடன் இருத்தலை.

பருவமடைந்த பட்டுப்புழு எச்சியினைக்
கொண்டு தனக்குள்ளேயே அழகிய,

கூடமைத்துக்கொண்டு சுகமாய்,
இறைவேண்டி யாகம் செய்திடல்போல்,

நம்மைச் சுற்றி அமைந்துகொண்ட
காதல் கூடு சுகமாயே நம்மைக் காக்கின்றது.

இருப்புநிலையே அழகிய கருமை,
அதுவே வெளித்தள்ளிய வெண்மை,

சூரியத்தேர் பூட்டப்பட்ட ஏழுகுதிரைகள்,
வெண்மை பிரித்த நிறமாலை நிறங்கள்.

ஒன்பது நிறங்களையும், நவருசிகளையும்,
நவரசங்களையும் தனக்குள் பூசிநிற்கும்

நவமணியே, கோபவசனக் கற்றைகள்,
விழிவழி காமப்பார்வை வித்தைகள்,

தாங்கமுடியவில்லை, தணியாத
காதல்தாகத்தால் ஏங்கமுடியவில்லை.

பரிசுப்பொருள் அறியஎண்ணி. 

No comments:

Post a Comment