Friday 20 January 2012

காதல் உண்மைவடிவானது


கோடானுகோடி சூரியன்கள் நினைப்பினும்
இருட்டினை ஒழித்துவிட முடிவதில்லை.

இருட்டு, இந்த நிலையான மொத்தத்திற்கும்
மறைக்கமுடியாத நிதர்சன நிரந்தரம்.

ஓராயிரம் காதல்கனைகள் எறியப்பட்டாலும்
மனம் ஒப்பி ஒளிந்துகிடப்பது ஒர்காதல் மட்டுமே.

உண்மைக் காதல் ஒருதலையாயினும்
இத் தருதலையின் மனம் மருதழிவதில்லை.

மலர்ந்து நிற்கும் மலர் வாடமுடியுமே தவிர
மலர்ந்தபின் மறுத்துநிற்க அனுமதியில்லை.

காதல் வந்த அரிச்சுவடு புரிவதில்லை,
அணைந்தபின் அமைதி திரும்புவதில்லை.

பால்யத்தில் ஆடியதென்ன, பாடியதென்ன,
தலைவணங்காமல் தறிகெட்டு ஓடியதென்ன,

துள்ளிவரும் புள்ளிமேவா மான்களுடன்
கிள்ளியாடும் துணிந்த இளமை துள்ளலென்ன,

தனிமையும் இனிமையாய், தவழ்ந்து
தவறிவிழும் தண்ணீர் தோகையும் குளுமையாய்,

காதலின் தூசு கண்களில் ஒட்டும்முன்
கபடமில்லா, கவலையில்லா வாழ்க்கை.

பனி உமிழ்ந்த முத்தரசம் முத்தாகிபோய்,
கழுத்து மாலையில் முகவரியின்றித் தவிக்க,

உள் விழுந்த உன் ஒரு விழிப்பார்வை
ஓராயிரம் இன்பக் காதலைச் சுமந்துநிற்க,

மங்கைமடி வீழ்ந்தவன் எழமுடியவில்லை,
மறுபடியும் மறுபடியும் இரைந்து கிடக்கிறேன் 

No comments:

Post a Comment