Monday 2 January 2012

நானும் நீயும் நாமாக

பணம் பார்த்து மணம் கொள்ளத்தேவையில்லை.
இனம் பார்த்து மனம் வாழ்வதில்லை.

மனம் பார்த்து காதல் வளர்வதில்லை.
மணம் பார்த்து மலர் மலர்வதில்லை.

சினம் பார்த்து பின் இனம் நிற்பதில்லை.
தினம் பார்த்து பணம் வருவதில்லை.

காதல் பார்த்து காமம் செல்வதில்லை.
மலர் பார்த்து மஞ்சம் கொள்வதில்லை.

குணம் பார்த்து சினம் வெல்வதில்லை.
சனம் பார்த்து தினம் புலர்வதில்லை.

காமம் பார்த்து நாணம் நடுங்குவதில்லை.
மஞ்சம் பார்த்து நெஞ்சம் நேசிப்பதில்லை.

நட்பு பார்த்து குணம் கெடுவதில்லை.
ஏழ்மை பார்த்து சனம் மகிழ்வதில்லை.

நாணம் பார்த்து மானம் போவதில்லை.
நெஞ்சம் பார்த்து வஞ்சம் தீர்வதில்லை.

கேடு பார்த்து நட்பு வளர்வதில்லை.
புகழ் பார்த்து ஏழ்மை சிரிப்பதில்லை.

மானம் பார்த்து வாழ்வு சிறப்பதில்லை.
வஞ்சம் பார்த்து தாய்மை துடிப்பதில்லை.

சுற்றம் பார்த்து கேடு கெடுவதில்லை.
மன்றம் பார்த்து புகழ் வீழ்வதில்லை.

வாழ்வு பார்த்து நானும் வரவில்லை.
தாய்மை பார்த்து நாமும் பழகவில்லை.

No comments:

Post a Comment