Friday 6 April 2012

தெய்வீகக் காதல்

சமூக ஒத்துழைப்பில், ஒழுங்கில்
நிறைவேற்றப்படுவது இருமனம்
கலக்க விரும்பும், திருமணம்.

சமூக அங்கீகாரம்.

விரக வேகத்தில் விரைந்து
உடலுரசலில் முடிந்தும்விடும்.
உச்சத்தில் உயிரும் உருவப்படும்.

விதியின் விளையாட்டு.

ரத்த வெள்ளையணுக்கள், உயர்ந்து
ரசம் நிறைந்த சதைப்பையினுள்
நிகழ்த்தும் சதங்கை சங்கீதம்.

இயற்கையின் தர்மம்.

ஏன், எப்படி, எதனால், என்னும்
மொழியுணர முடியாமல்
உயிரை உசுப்பிநிற்கும்.

உணவை வெறுக்கவைக்கும்,
நினைவை இழக்கவைக்கும்,
தூக்கம் மறக்கவைக்கும்

துக்கம் நிறைக்கவைக்கும்,
உடல், மனம், நினைப்பவற்றை
முகத்தினில் உரைக்கவைக்கும்.

காதலின் நிலை.

அது இறையினிலிருந்து வருவது.
உயிர் உரசலின் உச்சம்,உலகத்தால் மாற்றியமைக்க இயலாதது.

முடிவான முடிவு.

கன்னத்தில் முத்தமிட்டால்
திருப்தி அடையமுடியாதது. உரசின
உயிருடன் கலக்க முயலும் முயற்சி.

அலைபாயுதே நினைவுகளில்
கலையாகுதே கர்ம வினைகளும்,

தெவிட்டாத் தேனமுதை
திகட்டத்திகட்ட ஊட்டிவிட்டு,

தெரியாத விளையாட்டினை
புரிந்து, தெரிந்தே விரும்பிநிற்கும்.

ஆழ்ந்த காமக்கடலின் கரைதனில்
காதலலைகளை ஆடவிட்டு,

மூழ்கி மூழ்கி முத்தெடுக்க
முயன்று முயன்று தோற்கிறாய்.

அமைதியாய் இருக்கச் சொல்கிறாய்.
வானத்தை வசமாக்கவும் முயல்கிறாய்.

வந்து முளைத்த வெள்ளியை
வடிவிழந்து மறைவே செய்கின்றாய்.

என்னவேண்டும் உனக்கு
தெளிவாகவே உரைத்துவிடு.

கைகட்டி நிற்க அது மரியாதை. தந்தை.
கண்காட்டிக் கலந்துகிடப்பது அன்பு. தாய்.

கெஞ்சுவது, கொஞ்சுவது, மிஞ்சுவது
ஊடலினுள் திளைப்பது, ஊணாய் மறைவது,

அஞ்சுவது, அமைதியில் கரைவது
அன்பாய் மருவிக்கிடக்கும் காதலில்.

அன்பு செய்தலில் ஆனந்தம் விஞ்சும்
அநியாய அரவணைப்பு காதலில்.

காதல், தெய்வத்தைத் தெய்வத்தினுள்
உருகித் தரிசிக்கும் தெய்வக்கலை.

அது தங்கையில் பிடிவைத்து, கனிந்து
கவர்ந்த அக்காளை ஏறி அனுபவித்தல்.

No comments:

Post a Comment