Friday 6 April 2012

உள்ளிருப்பதே வெளியே

ஆணவமாய் ஆட்சிசெய்யும் அழகிய
ஆழித்திரை அவசரத்தையும் வென்று,

தன்னுயிர்ச் சக்தியின் துணைகொண்டு
தழுவித் தனிமைப்படுத்திப் பிரித்தெடுத்த

தேனுமாய் தேடித்தேடி உடல் நனைக்கும்
மழையுமாய் மாற்றிக்கொடுத்த ஆதவன்.

தந்துனை பற்றி எடுத்துரைத்த பயணம்.
நிலாப்பெண்ணின் சுகமாயின சயனம்.

நினைவு மறதிதான் கவிதைக்கருவுக்கு,
கருவுக்குள் நுழைந்த உயிர் உருவமாய்.

மாதம்பல காத்திருத்தல் வேண்டுமோ,
ஆதவன்பால் கொண்ட அன்பு மறைந்திட!

வட்டநிலாவை இட்டுவைத்த முகம் ,
பட்டுஇதழ்கள், பொருத்திவிட்ட பிறைகள்,

அரைவட்ட அழகில் உறையிட்ட
கறைகள், திரையிட்ட அற்புத அறைகள்.

அவிழ்ந்து ஆடின அறையுருவினை
மலர்கொண்ட, மருவினில் மயங்கினபின்,

பாதியினைக் கண்டு மீதியினை
மனதினில் கனவாக்கி உருவாக்கம்.

மிச்சமாக்கின இரவை உச்சமாக்கின
நிலையினில் உலர்ந்த உயிர்பரப்பி,

காதலின்கரு விதைத்து, உறவு
முளைத்த கருமையான இரவு.

நீர்நிலைகள் வற்றித் தவிக்கவிடும்
தாகமிகுதியினால் உருவான விக்கலல்ல.

நீர்மிகுந்து நிலைகுலைந்து
செய்வதறியாது உலாவரும் சிக்கல்.

ஆறு பெருகிடின் அணைதல் முடியுமோ?
ஊறு விளைந்திடின் மனத்திடம் பலக்குமோ?

விந்தையான வேங்கைதான்,
வீரமான அரசகுல மங்கைதான்,

இந்தப் புலி பத்துங்குதற், பாய்தற்கல்ல,
பல்பதித்து சதை கிழிப்பதற்கும் அல்ல,

பதமாகக் கதையுரைத்து ,
பஞ்சணைய மஞ்சம் சேர்ந்து,
கொஞ்சி விளையாடி,
மிஞ்சி நிற்பதற்கு.

அஞ்சமறந்து மடி கிடைத்தற்கு.

மயக்கும் மலர்த்தேன் சுவையை
உணர்ந்து தடவப்பட்டபின் நா,

மலைத்தேனி சேகரிக்கும்
தேன்கூட்டினை மட்டுமே
நினைத்துக் கிடக்கும் மனம்.

மாம்பழங்களை அள்ளித்தரத்துடிக்கும்
வளர்ந்து செழித்து உயர்ந்துநிற்கும் மா,

முக்கனியின் ஒருவனாய் உலகுணர்ந்த
பலாக்கனியினைத் தரத்துடிப்பதில்லை.

உள் ஒட்டி இருப்பிருக்கும் வினை,
விழிவழியுரைக்கும் மனம்.

No comments:

Post a Comment