Sunday 27 May 2012

முத்தம் ஒன்று தா

அசந்து மறந்தால் இறுக்கி,
மூச்சை அழுத்தி நெருக்கி,

உயிரை உருவி உருக்கி,
உடல் விழுங்கியுடல் பெருக்கி,

நிலைமறந்து கிறங்கி,
உறங்கி, கிடக்கும் மலைப்பாம்பு.

அது உயிர் துறத்தி
உடல் பெறுவது.

காதலி,

அன்பு முகம் இறுக்கி,
அனைத்த முத்தம் நெருக்கி,

உயிர் கலந்து உருகி
உறிஞ்ச, உடல் மருகி,

உறைந்து கிடக்கும் உயிர்
பருகி, உடல் கலப்பது.

உன் வான்மழை உதிர்த்த
கனவு, வார்த்தைத்துளி,

வழிந்ததும், என் முகம்
ஏங்கிக்கிடக்குது அடுத்ததுளி.

அண்ணாந்து நோக்குது தினம்
மறுதுளி எப்பொழுதுவருமென்று.

பொய்யுரைப்பதூவும், களவுசெய்து
கண்ணுரைப்பதூவும்

கலங்காத காவியக்
காதலில் நற்கருப்பஞ்சாரே

இதையத்தின் துடிப்பிலும்
நீ லப்பை ஒலித்தால்
எனக்கு டப்பைக் கேட்குமாறு
செய்விக்கின்றாயே.

இரவுகளின் துடிப்புகள்
மூன்றாயினும் உயிரின்
துடிப்புகள் ஊன்றி நிற்கின்றதே,
கலக்கவே துடிக்கின்றதே!

காத்திருக்க முடியாமல்
ஒடியலையும் மேகங்களைபோல,
தேடித்தேடி நுழைகின்றதே!
நட்பினுள் இன்பக்காதலினை.

கனவினில் நீந்தி நீண்டுகிடக்கும்
நம் முத்தமே முடிந்திட மறுக்கும்,

இந்நிலையில், சந்திக்கும் நிமிட
உயிர்முத்தக் காலளவு உணர்தலேப்படி?

அதன் மொத்தசுவை முடிதலேப்படி?
ஆதவனின் ஒளிவெள்ளம் நிற்பதேப்படி?

அந்தச் சுவையென்ன, இனிப்பா?
இன்பம்கொள்ள இறைதந்த மோட்சமா?

உயிர் உரசலுக்கு நடக்கும்
உதட்டுரசல், ஒத்திகையோ?

உன்னையும் என்னையும்
ஒட்டக்கொடுத்த உயிர்பசையோ?

காலம் மறந்திடக் காமன்
காட்டும் கைவரிசையோ?

கலந்த சர்க்கரை பிரியமுடியா நீரினை
நினைவுறுத்தும் சுவைபிரியா நினைவலையோ?

No comments:

Post a Comment