Sunday 27 May 2012

மயங்கின மலர்

புதிய மஞ்சளாடையில் புதிய காலை,
அதில் புத்தம்புதிதாய் ஆதவன்,

புதிய ஒளிக்கதிரினுள் ஒளிந்துகொண்டு
ஓடித்திரிந்த உயிருள்ள புதிய தென்றல்,

தென்றலின் ஸ்பரிச உரசலில்
புத்துயிராய் மலர்ந்த புது மலர்.

தேனுண்ட வண்டு மயங்கக்
கண்டோம் இவ்வன உலகத்தில்,

வண்டுண்ட தேனால் மலர் மயங்கக்
கண்டதென்னவோ இந்நிலவொளியில்தான்.

கவிதை எழுதுவாயா என்றேன்.
விழிகளில் விருத்தம் எழுதிநின்றாள்.

உதட்டசைவினில் சொக்கும்படி
இனிய குரலில் பாட்டுப் பேசினாள்.

அழகிய ஒடிந்த இடைநடையில்
நடனமும் ஆடிக்காட்டிவிட்டாள்.

நா நனைய சுவையாய் சமைப்பாயா?- கேள்வி.
ஒட்டின உதடுகள் சுவையாக்கின கொட்டிய நா.

நடைபயிலும் குழந்தைக்கு வயிறு புடைக்க
உணவூட்டி மகிழும் தாய் போல்,

கவிதையுலகில் என் எண்ணங்கள்
அனைத்தையும் விரவிக் கரைத்துவிட்டும்,

மலர்த்தேனுண்ட வண்டினைப்போல்
என்னுள் தேடித்தேடிக் குடிக்கின்றாயே,

போதவில்லையா இந்த போதை, மீள
மனமில்லையா உன்னின்ப மூளைக்கு.

No comments:

Post a Comment