Wednesday 16 May 2012

நேர்மையாய் வாழும் மனநிலை கொண்ட இன்றைய இந்தியன்


1) வரிகட்ட மலைக்கிறான்.
ஏனெனில், அரசு செய்யவேண்டிய
மருத்துவ உதவி, நகராட்சி சாலைகள் பராமரிப்பு, குடிநீர், விலைவாசி கட்டுப்பாடு, கொசு ஒழிப்பு, ஏழைகள் மாதவருவாய் 15000 க்கு உயர்த்தும் முயற்சிவிவசாயத்திற்கு உதவும் தன்மை, தடையில்லாத மின்சாரம், ரௌடிகளை அடக்குதல், அரசு எந்திரம் மாமூல், லஞ்சம்  இல்லாத துரித நடவடிக்கைகள்,
இவைகளை செய்யவோ அல்லது கட்டுக்குள் வைக்கவோ எந்த முயற்சிகளும் மேற்கொள்வதில்லை.
2 ) நிலம் வாங்கும், விற்கும் பொழுது பத்திரப் பதிவுத் தொகையை குறைந்த மதிப்பில் பதிவு செய்கிறான். ஏனெனில் பதிவுக் கட்டணம் அதிக சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.
3) தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கிறான்.
தன்னுடைய நிலத்தை அரசியல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க மிகவும் கவனமாயிருக்க வேண்டியதிருக்கிறது.
கோடிகளை கொள்ளையடித்தவன் அதிகாரிகளை கையில் எடுத்து இஷ்டம்போல் செலவிடத் துணிகிறான். மேலும் பட்டா மாற்றம் துரிதமாக நடப்பதில்லை. பணம் இல்லையெனில் வாழவே முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறார்கள்.
4) வருமான வரிகள் கட்டும்பொழுது எப்படிக் குறைத்துக் கட்டுவது என்றே ஆராய்கிறான்.
நாம் கட்டும் வரிப்பணம் எப்படியும் நல்வழியில் அரசினால் செலவிடப்படாது என்ற கவலை.
வாடகை மட்டுமே 15000 வரை இருக்கும் பொழுது, வருமான வரையறை மிகமிகக் குறைவாய் இருப்பது.
 
கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் அதிகாரிகளும், அரசியவாதிகளும் வரியே கட்டாமல் வலம்வரும் பொழுது நாம் மட்டும் கட்டவேண்டுமே என்ற நிலை.
எப்படியும் எல்லாவித லஞ்சத்திற்கும் பணம் செலவளித்தேயாக வேண்டிய நிலையில் கறுப்புப் பணத்தின் உருவாக்கம் அவசியத் தேவையாகிறது.
5) அரசியல், அதிகாரிகள்  அராஜகத்திற்கு அடிபணிகிறான்.
தவறே செய்யாவிடினும் லஞ்சத்திற்காக ஏதாகிலும் குற்றம் கண்டுபிடித்து, தொழிலே செய்யவிடாமல் அதிகார துஷ்ப்ரயோகம் செய்து தொந்தரவு கொடுப்பது.
 கோர்ட், கேஸ்கள் முடிக்க 10 வருடங்கள் ஆகும் என்றநிலையை சாதகமாக்கி துணிந்து தப்பு, அராஜகம் செய்வது.
 
ஒரு கேள்வி: தொழில் செய்வோர்கள் எல்லா வகைகளிலும் தவிர்க்கமுடியாமல் அதிகாரிகளுக்கு லஞ்சமோ மாமூலோ கொடுத்தே வாழவேண்டியுள்ளது.
ஆனாலும் அவர்கள், வருமானவரி அதிகாரிகளையும் மற்ற அரசு அதிகாரிகளையும் சந்திக்கும்பொழுது பணம் கொடுத்த கணக்குகளுக்கும் விளக்கமளிக்க வேண்டியுள்ளது.
உண்மைகளையும் கூறமுடியாத நிலைமை.
அரசு, மக்களின் நல்வாழ்வுக்கும் வழிவகுக்காமல், தொழில் செய்வோரையும் வாழவும் விடுவதில்லை.

No comments:

Post a Comment