Sunday 27 May 2012

காதலும் கவிதைகளும் மட்டுமே

இந்த அறிமுகம் கூட நன்றாகத்தான் இருக்கிறது,........................

அறிமுகம் நன்றுதான். அதற்காக
நரிமுகம் காட்டிவிடாதே!

சரிமுகம் காட்டி கண்ணுக்குள் வைத்து என்னைக்கட்டிவிடாதே.

சிரிமுகம் காட்டி சிருச்சிருக கொன்று
வதைத்துவிடாதே.

பரிமுகம் காட்டி உன்னுள் என்னைப் புதைத்துவிடாதே.

மௌனங்களால் விலங்கிடப்பட்டு,
விலகிக்கிடந்த குழம்பின வாழ்க்கைதான்.

பயமறியாத கபடமில்லாத மனங்களின்
துணையுடன் கட்டப்பட்ட வீடுதானிது.

இருந்தும் முகம் பழகின சமயம்,
முடிந்து நிற்கின்ற காதல் நிலைதான்.

வஞ்சங்களும், வம்பு வார்த்தைகளும்
நெஞ்சை உருக்கிச் சிவப்பான நினைவுகளும்தான்.

நிஜங்களை உணரமறுக்கும், பணம்
தின்னும் பிணப் பேய்களையும் உணர்ந்தபின்,

விடுதலையாகி வாழ்ந்துகிடப்பது என்னுள்,
கரைந்து விழுந்துகிடக்கும் இக்கவிதைகளே

No comments:

Post a Comment