Saturday 7 July 2012

காதலை மறந்துநின்ற கிளி

உன்னை .............நினைக்க மறக்கவில்லை ..........

எத்தனை முறை என்னைஉனக்கு
காண்பித்தும்,
உன்பித்தும், என்பித்தும்
குறையப்போவதில்லை.

நீ குடித்து கடல்நீரினை வத்தடிக்கமுடியுமா?
அல்லது
நான்தான் வடித்த முத்தத்தால் உனை நிரப்பிடமுடியுமா.

சேர்ந்தபின்
நம்மைப் பிரித்திடத்தான் முடியுமா.
சேர்த்துவைத்த
நட்புக்காதலைத்தான் மறைத்திடல் முடியுமா.

இலங்கையின் மடியினில் தவழ்ந்து,
இளங்கையின் மணம் ருசித்து,
கலங்கலில் கவிதைகள் படித்து,
கணங்களை காற்றினில் பறக்கவே விட்டு,

சிக்காகோவினுள் புகப்போகும்
திருவிளக்கே, சிறுனகையே,
சிற்றிடைச் செந்தாமரையே,
வருக வருக நிலா மனம்கனிந்து.

குயிலின் ஆனந்தப் பாட்டு,
கூவிநின்ற திசை நோக்க,
பாடினவன் பறந்தேவிட்டான்.

விரட்டிநின்ற தென்றல் வலிமை,
விட்டோடிப்பறந்த, அலையலையாய்
தவன்ற மேகக்கூட்டங்கள்போல்.

என்னிம்சை போதுமென்று
மௌனமொழி காட்டிநின்றாள்
மந்திரப்புன்னகைக்காரி இமசையரசி.

No comments:

Post a Comment