Saturday 14 July 2012

பெண்மை

குயிலின் ஆனந்தப் பாட்டு,
கூவிநின்ற திசை நோக்க,
பாடினவன் பறந்தேவிட்டான்.

விரட்டிநின்ற தென்றல் வலிமை,
விட்டோடிப்பறந்த, அலையலையாய்
தவன்ற மேகக்கூட்டங்கள்போல்.

என்னிம்சை போதுமென்று
மௌனமொழி காட்டிநின்றாள்
மந்திரப்புன்னகைக்காரி இமசையரசி.

கண்ணழகிருந்தென்ன, கன்னம்
கிண்ணமாய் அமைந்தென்ன,

எண்ணம் இனிமையாயிருந்தென்ன,
எழுதி வைத்த மை கருத்தென்ன,

சங்கீதமொழி உரைத்தென்ன,
சந்திரனை முகம் கொண்டென்ன,

கள்ளமில்லா அன்பு பொழிந்தென்ன,
கருணைக் கடலாயிருந்தென்ன,

கசக்கிப் பிழியத்தான் பெண்மை.
அடிமைப்படுத்தத்தான் ஆண்மை.

பூமியினை பூத்தே நிற்கும் கடப்பாரைகள்,
பொறுமைகொண்டு அடங்கிக் கிடப்பதால்.

No comments:

Post a Comment