Thursday 9 August 2012

இரண்டாம் சுதந்திரப்போர்


எல்லோரும் என்ன நினைக்கிறார்கள், அன்ன ஹசாரேயையும் ராம்தேவையும் பற்றி?
அவர்கள் குழப்பவாதிகள், ஸ்திரமான முடிவு எடுக்கமுடியாததினால் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை என்று.
ராம்தேவ் தொழிலில் கோடிகளை சம்பாதித்திருக்கிறார், அதனால் அவரும் எதுவும் பேசிவிடக்கூடாது என்று. முதலில் தொழில் செய்து சம்பாதிப்பது தவறில்லை. மற்றும் இவ்வளவு நாட்கள் வாயை மூடியிருந்துவிட்டு இப்பொழுது அவர் கேள்வி கேட்கிறார் என்பதற்காக அவரை அவதூறாக பேசிவிட அவசியமில்லை.
இவர்களைப்போன்றவர்கள்கூட முன்னிற்கவில்லை என்றால் நம் கதி என்ன? கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு 5 வருடப்பட்டா கொடுத்திருக்கிறோம். நான் இங்கு நாட்டுக்கு நன்மை செய்துநிற்கும் அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவில்லை. கொள்ளையடிக்கும் ஜென்மங்களைப்பற்றி சொல்கிறேன். தவறு செய்யும் அமைச்சர்கள் பதவிவிலகுவதில்லை.
இன்னும் இரண்டு வருடங்கள் அவர்களுக்கு சம்பாத்திய வாய்ப்புகள் இருக்கின்றன. கூட்டணிக்கட்சிகளும் சரியான முறையில் ஜால்ரா அடிக்க அவர்களுக்கும் பங்கு கிடைக்கிறது. வெளியிலிருந்து எந்த நாய் எப்படிப்பேசினால் என்ன என்றே நினைக்கிறார்கள். 5 வருடங்கள் அவர்களை அசைக்கமுடியாது. எல்லாம் கூட்டாக நடக்கும் கொள்ளை. வாயை மூடிக்கொண்டு மக்களுக்குள் கருத்து வேறுபாடுகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்
நினைத்துப்பாருங்கள் ஒவ்வொரு முறையும் அவர்கள் யாருடன் போராட்டம் செய்பவர்களை ஒப்பிடப்படுகிறார்கள் என்று. காந்தியுடன். உண்மையிலேயே காந்தி உயிரோடிருந்து, இப்பொழுது ஏதாவது உண்ணாவிரதம் என்று துவங்கியிருந்தால் என்ன கதியாகி இருப்பார் என்று கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். முதலில் அவரை உள்ளே தள்ள என்ன வழி என்றுதான் சிந்தித்திருப்பார்கள். அவருக்கும் வருமானவரி நோட்டீஸ் போயிருக்கும்.
அடுத்து ஞாயம் கேட்டுப் போராடும் அவர்களை காந்தியளவுக்கு நேர்மையாய் இருந்தால் மட்டும்தான் அவர்கள் கேள்வி கேட்க வேண்டுமா? மற்றவர்கள் எவரும் கேள்வி கேட்கக்கூடாதா?
ஓட்டுப்போட்டுவிட்டு வாயையும் விரையும் பொத்திக்கொண்டு எல்லாவனும் கொல்லையடிப்பதைப் பார்த்து நிற்கவேண்டுமா?
நன்றாக யோசியுங்கள், இப்படி ஒரு போராட்டம் துவங்காமல் இருந்திருந்தால் நாளைய நம் இந்தியாவின் நிலை என்ன? இங்குள்ள ஏழை மக்களின் கதி என்ன? நேர்மையானவர்கள் என்று உறுதிப்படுத்தினால் மட்டுமே இந்த கொள்ளையர்களை கேள்வி கேட்க முடியுமா என்ன?
முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்களாம் அவர்கள், அதனால் நம்பமுடியவில்லையாம்.
அப்படியானால் கொள்ளையர்களை நம்புவீர்கள் இவர்களை நம்பமுடியாதா?
புதிதாக ஒரு இயக்கம் வரும்பொழுது இப்படித்தான் கருத்து முரண்பாடுகளும் குழப்பங்களும் உருவாகிவிடும். அதையெல்லாம் வென்று கடந்து வர நாம் முனையவேண்டும். அதைவிடுத்து நொட்டை சொல்லி மக்களை திசைதிருப்ப முயலவேண்டாம்.
100 % யோக்கியத்தனமாய் உள்ளவன்தான் கேள்வி கேட்கவேண்டுமெனில் யார் கேள்வி கேட்பது. மறுபடியும் காந்தியைத்தான் பிறப்புவித்து கொண்டுவரவேண்டும்.

No comments:

Post a Comment