Friday 10 August 2012

hallo mr. manushyaputthiran sir, listen...

"புனித முகமூடிகள்" என்று அழகாக வர்ணித்து எழுதிவிட்டீர்கள் என்பதற்காக நீங்கள் கூறுவதையெல்லாம் ஏற்கமுடியாது. இந்திய நாட்டின் நிலையறியாமல், லட்சணம் புரியாமல் உங்கள் இஷ்டத்திற்கு எழுதிவிட்டீர்கள்.
வருமான வரி வரம்பு 2 லட்சம். சென்னையில் ஒரு சராசரியான வீட்டின் வாடகை, 12000 . மீதியிலும் நீங்கள் வாழ்வதற்காக உள்ள பணத்திற்கே வரி கட்டித்தான் நிற்கவேண்டும். கிராமத்துமக்களும் நகரத்தில் வாழும் ஏழைகளும் மாதம் 2000 ல் கூட வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர எந்த அரசியலும் உதவிடவில்லை. ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவனே தினமும் மாமூல் கொடுத்துத்தான் வாழவேண்டியதிருக்கிறது. அதுபோலவே எல்லா வியாபார நிறுவனங்களும் தங்களின் தொழில் அளவைப்பொறுத்து லஞ்சம் தரவேண்டியதிருக்கிறது. விரும்பிக்கொடுப்பதில்லை.
நம் நாட்டில் இருக்கும் அத்தனைத் தவறுகளுக்கும் அடிப்படையே லஞ்சமும் மாமூலும்தான். மற்ற அத்தனை பிரச்சனைகளும் அதிலிருந்து விளைந்த பாதிப்புகள்மட்டுமே. ஆகவே ஊழலையும் லஞ்சத்தினையும் ஒழித்தாலே தலையாயக் கடமை.
ஊழல் செய்யும், எந்த அரசியவாதிக்கும், அரசு ஊழியர்க்கும் தண்டனை என்பதே இல்லை.
இப்பொழுது நம் நாட்டின் சிறந்த வியாபாரமே அரசியலும், அரசாங்க உத்தியோகமும்தான் என்றாகிவிட்டது. அதிகாரம், ஊழல் பணத்திற்கு எந்தவரியுமில்லாமை, வழக்கு என்று வந்தால் கோர்டில் கேஸ் முடிய 10 வருடங்கள் என்ற கால தாமதம், ரௌடிகளை வளர்ப்பது, இப்படி எல்லா அடிப்படை தன்மைகளையும் தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள். ஏன்? எந்த தண்டனையும் இல்லை. மக்களால் ஒட்டுமட்டுமே போடமுடியும். அடுத்த 5 வருடத்தின் பட்டா அது. கேட்கமுடியாது.
நீங்கள் ஒரு வருடம் வரிகட்டாமல் இருந்துவிடுங்கள் பார்ப்போம், அறுத்து எறிந்துவிடுவார்கள்.
சாலை வரி கட்டுகிறோம், பின்னர் ஹைவேஸ் சாலைகளுக்கு டோல் கலெக்ஷன் வேறு. கேட்க நாதியில்லை இந்த நாட்டில்.
உண்மையைச் சொல்லப்போனால், நாட்டு மக்கள் தங்கள்தங்கள் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் முற்றிலும் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், வெவ்வேறு பாதைகளில் சென்று மொத்த பணத்தையும் சுருட்டி வெளிநாடுகளில் பதுக்கிவிடுகிறார்கள்.
ஊழல் நாட்டில் அளவுகடந்து சென்றுகொண்டிருக்கிறது. நம் போன்ற தனி மனிதனாலோ, குழுக்களாலோ எதுமே தட்டிக்கேட்க முடிவதில்லை. சோ போன்ற நல்ல பெரியமனிதர்கள், நொட்டை சொல்வதற்கு மட்டுமே பயன்படுகிறார்கள். எதனினையும் துவக்கி, முடித்துவிடும் தைரியம், துணிவு இல்லை.
அரசியல் வியாபாரமாக மாறிக்கொண்டிருக்கிறது. வைக்கோ போன்றோர், மனித உரிமை பற்றின விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நிற்கின்றார்கள்.
ஒரு ஊழலை ஒழித்திடத் துவங்கிநிற்கும் புரட்சியாளர்களாய் அண்ணா ஹசாரே திகழ்கிறார். அவரின் பாதையில் சிலபல தடைகளும் தவறுகளும் இருக்கலாம். அடிப்படையினை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். அவருடைய இந்த போராட்டம் வெற்றியடைந்தால் மக்களுக்கே நன்மை.
வலிய தண்டனை என்ற ஒரு சட்டத்தினைத்தவிர ஊழலினை குறைத்திட வழியில்லை.
கலாம் சொல்லியதுபோல, பிள்ளைகள் ஊழல்வாதித் தந்தைகளைத் திருத்திடவேண்டும் என்பனவற்றுக்கு நடைமுறை சாத்தியங்கள் இல்லை.
ஆகவே அண்ணா ஹசாரேயினை, நல்ல இந்தியாவினை அமைக்க விரும்பும் நெஞ்சங்கள் வாழ்த்தி தங்களால் முடிந்த ஆதரவினைத் தரவேண்டும்.
நான் லஞ்சமும் மாமூலும் கொடுத்திருக்கின்றேன் என்பதற்காக நான் லஞ்சம் வாங்கிநிற்கும் அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் ஒன்றும் கேட்கக்கூடாது என்பது சரியல்ல.
இப்படித்தான் காங்கிரஸ் மக்களைக் குழப்புகிறது.
தெருவில் நிற்கும் ஆயிரம் பேருக்காகவேல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்கிறது அமைச்சர்கள் கபினெட்.
அவர்கள் என்ன நூறு கோடிமக்களும் தெருவுக்கு வந்து போராடவேண்டும் என்று நினைக்கிறார்களா? எதற்குமே ஒரு துவக்கம் வேண்டும் என்பதினை புரிந்துகொள்ளுங்கள் நண்பரே. நீங்களும் நொட்டை சொல்லி நிற்கவேண்டாம் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

No comments:

Post a Comment