Saturday 11 August 2012

கடவுள் ஒரு கல்

ஆகாயம், ஆண்டவன், பரம்பொருள், பாற்கடல், ஆதிமூலம், அமுதம், கிருஷ்ணா, மகாசிவம், நிர்வாணா, வெற்றுவெளி, வெளி, ஒன்றுமில்லாமை. கற்பனையில் அளவிடமுடியாதது, வரைமுறையற்றது, எங்கும் பரவியிருப்பது, அளப்பறிய உள்வாங்கும் மின்காந்த சக்தியைக் கொண்டிருப்பது, எதிலும் அடங்காதது, இப்படியெல்லாம் அதைப் புரிந்துகொள்ளலாம்.
அது தன்மாற்றம் பெற்றபின் பிரபஞ்சம், (நஞ்சு, அமுதம்,) தோன்றியது.
அது தன்னுள், எலெக்ட்ரான்கள், ப்ரோட்டான்கள், நியுட்ரான்கள் இவைகளாகப் பிரிந்து முழுவதுமாய் நிரப்பிக்கொண்டு ஒரு எல்லைக்குள் மிதக்கவிட்டிருக்கின்றன.
அதாவது ஒரு இலையினில் ஒரு கூட்டுப்புழு தொங்கிநிற்பதுபோல். இங்கு இலை ஆகாயம். கூட்டுப்புழு பிரபஞ்சம்.
இணைக்கும் நுனி கேது.
அதனின் மையம் ராகு. (கேது-ராகு : பாம்பு, அதாவது அதுபோன்ற அமைப்பு)
எலெக்ட்ரான் - ஷிவம்.
ப்ரோடான் - ஷக்தி.
நியுட்ரான் - விஷ்ணு.
ஆக நம் பிரபஞ்சம் இப்படியான அடிப்படைச் சக்தியினாலேயே அமையப் பெற்றிருக்கின்றது.
இவற்றிலிருந்தே உலகின் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியுட்ரான், இவைகளின் தன்மாற்றக் காந்தச் சுழற்சி ஒழுங்கினால் அணு உருவானது.
அணுக்கள் இணைந்து ரசாயன மூலங்கள் தோன்றின.
ரசாயன மூலங்கள் இணைந்து கிரகங்கள் ஆயின.
உலகில் தற்பொழுது காணும் பொருட்கள், கல்  அனைத்திற்கும் இதுவே மூலம்.
உயிர் உருவானதற்கும் ஆதாரம் இதுவே. 
பிள்ளையார் - எல்லா ஐந்தறிவு வரையிலான உயிரினங்கள்.
முருகன் - ஆறறிவுள்ள மனிதன்.
இவ்வளவுதான் இந்துமதம்.

No comments:

Post a Comment