Friday 10 August 2012

என்ன நடந்திருக்கிறது இதுவரை?

அண்ணா ஊழலை ஒழிக்க போராடத்துவங்கினார். அவரையும் அவரது ஆதரவாளர்களையும் அவதூறுகள் சொல்லி அடக்க முயன்றது அரசு.
அரசு எந்திரத்தின் சக்திகளை அதற்காக உபயோகித்தது.
அளவுக்கதிகமாக காலம் தாழ்த்தியது.
பின்னர் சமரசமானது மாதிரி காட்டிக்கொண்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
பின்னர் தெருவில் நின்று போராடிநிற்க்கும் ஆயிரம் பேர்களுக்காகவேல்லாம் சட்டம் போடமுடியாது, எங்களை ஆட்சிக்கு அனுப்பிய நூறு கொடிமக்களைக் கருத்தில் கொண்டுமட்டும் முடிவுசெய்வோம் என்றது.
இப்படியாக அரசு கடுப்பேற்றிமுடித்து iac குழுவினை ஆத்திரமூட்டி மக்களிடமிருந்து அந்நியப்படுத்த முயன்றது.
இப்பொழுது அண்ணாவின் செயல்பாடுகளை மட்டுமே மக்களை சிந்திக்கவைத்து, கொள்கைகளை மக்களிடமிருந்து மறக்கடித்திருக்கிறது.
இதற்கு மனிஷ்யபுத்திரன், சோ போன்ற அறிவு ஜீவிகளும் ஜால்ரா தட்டி நிற்கிறார்கள்.
இப்பொழுது மக்கள்மனதில் குழப்பத்தினை ஏற்படுத்தி வெற்றியடைந்தார்கள் அரசியல்வாதிகள்.
அண்ணா ஹசாரே நல்லவரா? செயல்த் திறமையுடையவரா? குழப்பவாதியா என்பதுபோன்ற அரட்டையரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. கொள்கையினை மறக்கடித்தேவிட்டனர் செய்திச் சேனல்கள்.
ஊழல்களைஎல்லாம் செய்துவிட்டு, அவை வெளியில் தெரிந்தபின்னும் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும், காந்தி உருவாக்கின ஒரு தேசியக்கட்சிக்கு, இதைவிடவும் ஒரு அவமானத்தினைத் இருந்துவிடமுடியாது.
கொள்ளைக்குக் கொள்ளையும் அடித்து அரசு எந்திரங்களை துஷ்ப்ரயோகம் செய்து மக்களைக் குழப்பும் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் சவுக்கடி படாமல் தப்பமுடியாது.
ஒன்றுமட்டும் நிச்சயம், இதுபோன்ற ஒரு துவக்கம் இனி வரப்போவதில்லை. இப்பொழுது இல்லைஎன்றால் எப்பொழுதும் நம்மால் முடியாமல் போய்விடும். எல்லாவற்றையும் சரிசெய்திட உதவுங்கள். குழம்பிவிடாதீர்கள்.

No comments:

Post a Comment