Thursday 16 August 2012

தியானத்தின் அடிப்படை

மனித உடலில் ரத்த வெள்ளையணுக்கள் முக்கிய இடம்பெறுகின்றன. தியானத்தின் மையமே அவைகள்தான். முக்கியமாக 23 சுரப்பிகளுக்கும் அதனதன் திரவங்களை தயார் செய்வதற்கு உதவுகின்றன.
சாதரணமாக லௌகீக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள், அதாவது வாரம் இருமுறை செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு உடலின் ரத்தத்தின் வெள்ளையணுக்களின் அளவு 20 % மட்டுமே இருக்கும். இதனால் அவர்களின் ஆன்மா ( காந்தக்களம் ) அளவும் குறைவாகவே இருக்கும். இந்தநிலையில் தியானம் மருவாது. வெள்ளையணுக்கள் கிருமிகளுடன் போராடுவதும், எலும்பை திடப்படுத்துதல், செமன், நாத உற்பத்தி, இதுபோன்றவைகளுக்கு உதவுகின்றன.
48 நாட்களுக்கு செக்ஸ் விரதம் இருக்கும் பொழுது, விந்து, நாதம் வெளியேற்றம் இல்லாததால் வெள்ளையணுக்கள் உடலில் 100 % அளவுக்கு நிறைந்திருக்கும். ( பின்னர் 15 நாட்களுக்கொருமுறை செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்.)
ஒவ்வொரு சுரப்பிகளிலும் +ve, -ve, காந்த முனைகள் இருக்கும். அதாவது அர்த்தநாரீஸ்வர் பிரிவு நடுச்சுவரின் முனைகள். சுரப்பிகள் முழுவதும் நிறைந்திருந்தால் மட்டுமே அவைகள் ஒரு காந்தக் களத்தை அங்கே உருவாக்கி இன்ப அதிர்வுகளை கொடுக்கமுடியும்.
அந்த நிலையில் மட்டுமே தியானமாக அந்த அதிர்வுகள் மாற்றம்பெற வழியேற்படும். அந்த இன்ப அதிர்வுகளை ஸ்திரமாக நிலைபெறச் செய்வதே தியானம்.

 

No comments:

Post a Comment