Wednesday 9 November 2011

அடங்காத ஆசை

இதழுடன் இதழாட
மலருடன் விளையாட
இளமயில் நடையாட உன்
இளமையில் இசைந்தாட
கனவுடன் கசந்து கிடக்கிறேன்.

நிலமகள் நிறைந்தாட
நிலவுடன் நீ பறந்தாட
நித்தமுன் நினைவாட
நிலையில்லா மனமாட
வீழ்ந்துகிடக்கிறேன் ஆசையில்.

இரவும் பகலும் கலையே
இருவர் நிலையும் சிலையே
கைப்பற்றின கைகளுக்கு
முத்தமே காணிக்கையாக..

No comments:

Post a Comment