Wednesday 16 November 2011

உண்மையான அன்பு

உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா.

கொடுத்துவிடு, இல்லை கலவுசெய்யப்படும்,
கண்களால் கவிபேசும் பெண்களால்.

இருப்பினும், இறப்பினும் உடலால் மட்டுமே,
இவ்வுலகுக்கு மட்டுமே இறப்பேன்.

உண்மையில், உன்னுள் உயித்தேயிருப்பேன்
இப்பூஉலகு அழியும்வரை அல்ல.

படைத்த இருப்புநிலையாகிய,
உண்மையுமாகிய இறைவன் அழியும்வரை.

உண்மையன்பு, ஆழ்மனத்தினிலேயே
துளிர்கிறது, துவண்டு தவிப்பதில்லை

துயில்வதுவுமில்லை, எங்கே எப்பொழுது எப்படி
உருவானது என்பதறியமுடிவதுமில்லை.

No comments:

Post a Comment