Friday 18 November 2011

உய்யும் உயிரும் உயிரும்

என்னுயிர் நீதானே,
உன்னுயிர் நான்தானே!

மண்ணுயிர் போனாலும்
விண்ணுயிர் நாம்தானே.

கண்ணுயிர் கலந்தபின்னே
கலக்கமென்ன கண்மணியே.

உயிர் வளர்த்த தாய்மடியில்,
கணம் மறந்து உறங்கையிலே,

பயிர் வளர்த்த மழைமேலே
கயிர் வளர்த்த மேகம்தானே.

ஒளி வளர்த்த காலைநேரம்
மதி மறைத்த கதிரவன்தானே,

மரம் கோடி தழைக்கத்தானே
மண்ணுயிர்க்கு உதவத்தானே,

உலக வாழ்க்கைகளின் உரம்
சேர்த்து உதவத்தானே, கடவுள்தானே.

No comments:

Post a Comment