Wednesday 16 November 2011

நினைக்கத்தெரிந்த மனமே

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா?

மறக்கத் துணிந்த பின்னும் முகத்தை
மறைக்கத் தெரியாதா?

முயன்று முயன்று முனைந்தாலும்
வானம் மறைத்தல் முடியுமோ.

தேன் குடித்த வானமகள், மேகம்பிடித்து
நீரைக்கொட்டாமல் முடியுமோ.

விரும்பினாலும் இல்லையானாலும்,
கதிரவனைச் சுற்றியே நிலமகள் வாழ்வு.

களங்கமில்லா நிலாமகளும் விரும்பாவிடினும்
சுற்றிக்கிடக்குமே நீலமகளை.

நீ என்னை வெறுத்தொதுக்கினாலும்
உணர்ந்தேன், உன்னைச் சுற்றியே என் உலகம்.

No comments:

Post a Comment