Wednesday 9 November 2011

நிலாப்பெண்ணே

கண்ணின் ஓவியமோ கருவிழி,
கண்டெடுக்கப்பட்ட
வெண்ணிலவின் கருவண்டோ.

தென்றலின் சீதனமாய்
பட்டுச் சேலை பறந்து நின்று
கட்டுப்படுத்தினதால்
ஒட்டி உறவாடும்
அன்னநடை பின்னுவதோ.

வளர்ந்த கார்குழல்
ஏனோ பெண்ணே
காளையரின் காதலினை
அடக்குதற்கோ,

சடையின் நடனத்தில்
மத்தளம் தட்டிநிற்கும்
இடையோ
கவரும் கவனச் சிதறல்கள்.

No comments:

Post a Comment