Tuesday 6 December 2011

காதல் காக்கும்

நானே வருவேன் இங்கும் அங்கும்
நாளை தருவேன் பொங்கும் அன்பும்.

திகட்டத் திகட்ட புகுட்டிவிட்டாய்
காதல் அமுதை காலம் முழுமைக்கும்.

நிறைமதியே வான்கடந்து வந்து
கரம் அனைத்துப் பிடிப்பதெப்போழுது.

முழுநிலவே முன்ஜென்ம மிச்சங்களை
முனைந்து முடித்துவைப்பது எப்பொழுது.

களவு கொண்ட ஒளிக்கதிர்களையே
மறு ஒளிபரப்பு செய்கின்றாயே,

உன்னால் மலரப்போகும் மல்லிகை நான்,
உன் மலர்முகம் புலர மறைத்து,

வலைத்தளப் பின்னல்களில் சிக்கித்தவிக்கும்
உன் காதலை காப்பாற்றமாட்டாயா?

உதடுகளின் உரசலில் பற்றிக்கொள்ளும்
காதலுச்சம் கொண்ட காமம்,

தட்டின மலர்கள் பற்றின காமத்தினால்
ஒட்டி உறவாடின காதல்,

நிரம்பின இன்ப மழையில் குளித்துக்கிடக்கும்
கள்வனைக் காக்க வரமாட்டாயா?

No comments:

Post a Comment