Tuesday 6 December 2011

வசந்தத்தில் அவள்

காலங்களில் அவள் வசந்தம்,
மலர்களிலே அவள் மல்லிகை

மங்கையரில் அவள் தென்றல்
முகமலர்வில் அவள் தாமரை.

மனங்களிலே அவள் மாளிகை
மந்திரப் புன்னகை அவள் அடையாளம்.

மயக்கும் வித்தையில் அவள் மலர்வனம்
மச்சமுனக்கு அவள் மடிகிடைத்தால்.

தடவிச்சென்ற தென்றலுக்கும்
குளிரக்காணக் கண்ணில்லை.

குனிந்து நனைந்து கூடிக்
குலாவிட துணிவுமில்லை.

தென்றலின் துணையும் உனக்கில்லை
தூவும் மேகமும் வரவில்லை.

நினைவுகளில் மலர்களை
நிறைந்து சுகமாகச் சுமந்துநிற்கிறாய்,

அது தன் நறுமணத்தை இதமாகத்
தொலைவு கடந்தும் வீசிக்கிடக்கின்றது.

No comments:

Post a Comment