Tuesday 6 December 2011

ஏனிந்தக் கலக்கம்

உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்.

கண்ணைக் கலந்த பின்னே
கவலை ஏனோ கண்ணே.

கனிந்த காதல் நெஞ்சில்
கவர்ந்த காதல் மடியில்.

கேட்டுக் கேட்டுத்தந்தாய்
கேள்வி இங்கு இல்லை.

வானம் பார்த்த பூமி
மழை காணாது விடுமோ.

வான்மேகம்தான் கற்பம்
கலைந்து நீர் தராது செல்லுமோ.

கலையாத நெற்றிப்பொட்டு
என் முத்தம் படாமல் அழியுமோ.

கைகொள்ளாத உன்னழகை
கடித்துவிடாமல் தொடுமோ.

கண்கொள்ள பின்னழகு
கைபடாமல் கனிந்திடுமோ.

என்னை விட்டுத்தான் நீயும்
ஓடிப்போக நினைக்க முடியுமோ.

No comments:

Post a Comment