Tuesday 6 December 2011

கொஞ்சம் காதல்கோபம்

சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்,

பின்னலிட்ட உன் கூந்தலில்
அள்ளிவைத்த மல்லிகை,

ஊஞ்சலிட்டு ஆடையில்
ஆடைதொட்டு வாசம் பாடுது.

பாட்டு வந்து கூடையில் சுவாசம்,
வந்து கூடுவிட்டு கூடு பாயுது.

வந்து நின்ற தென்றலை
உண்டுநின்ற நாசி, மயங்கிநிக்கிது.

உலை கொதித்து நின்று
ஒன்று கூட ஏங்கி பாக்குது.

கோபப்பார்வை வீசினால்
வீச்சுவார்த்தை பேசினால்,

காத்துக் கிடக்கும் காதல்
எங்குசென்று வென்று மீள்வது.

கருணை கொஞ்சம் காட்டம்மா
காலைக் கொஞ்சம் நீட்டம்மா,

மடிசாய்ந்து மயங்கச் செய்யம்மா,
மந்திரத்தை எடுத்து வீசம்மா!


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்,
நெருப்பாய் சுடுகிறதே.

வான்தெருவினில் வட்டமிட்டால்
வஞ்சகர் கண்களும் கண்ணடிக்கும்.

உன் குளிர்முகம் மலரவிட்டால்
காதலும், கனியும் காமனுக்குள்ளே.

அல்லது மேகச் சேலையை
உடுத்திநில், மறைத்துக்கொள்

உன்னழகை முன்னழகை
பின்னழகை, தேய்ந்து நீட்டாதே.

கொடிமுல்லை வாடிநிற்கும்
செடிமல்லி மாய்ந்துநிற்கும்.

வடிவழகி, அன்ன நடையழகி உன்
வரைந்த வட்டஉடல் கடையிழந்தால்.

வீதிக்கு வந்த பொருள்
விருந்தாகியே போகும் விழிகளுக்கு.

இழப்பு ஏதுமில்லை முகம் காட்டிநிற்க,
முகவரியை மாற்றி நிற்காதே.

ஒருநாளும் முழுமதியே உன்னால்
சுட்டெரிக்கும் சூரியனாக முடியாது.

No comments:

Post a Comment