Wednesday 16 November 2011

என்னவள் நீயேதான்

இறைவன் ஒருநாள் உலகைக்காணத்
தனியே வந்திருந்தானாம்.

இதுவரை எதையும் மன்றாடியதில்லை அவனிடம்.
அதற்காக கொடுத்தவற்றையும் மறுத்ததில்லை.

எனக்கானது என்று நினைத்தவற்றை
அவன் பறித்தபோதும் வருந்தியதில்லை.

அளவுக்கதிகமாய் கொடுத்தபொழுது
ஆசையாய் அவனைத் திட்டியிருக்கிறேன்.

ஆனாலும் அவன் உன்னைக் காண்பித்தபோழுது
கண்ணீர் மழ்கி மகிழ்ந்தே கிடக்கிறேன்.

காரணம் உணர்ந்தேன் நான்,
எனக்குறியவள் நீயேதான் என உளம் நனைந்து.

2 comments: