Sunday 18 September 2011

முள் படுக்கை

முள் மெத்தையை மஞ்சமாக்கி மலர்ந்து
துயிலும் அழகிய ரோஜாவே,

கலங்கினதுண்டா நீ எப்பொழுதாவது,
நினைத்ததாவதுண்டா,

என் மல்லிகை, துயிலும் மஞ்சம்
ஒரு முள் படுக்கைதான் என்பதினை.

படுக்கை முள் ஆனாலும்
பாழும் மனம் கல்லாகிக் கிடக்கின்றதே!

கல்லைக் கனியவைக்க ஒரு நிரந்தற
வழியாயினும் சொல்லமாட்டாயா.

கோபத்தில் கூட உன் சிவப்பு
கடுமை காட்ட வரவில்லையே.

No comments:

Post a Comment