Tuesday 6 September 2011

வழியில்லை

காதலி
இல்லா வாழ்க்கை
காதல்
இல்லா பூவை
காமம்
இல்லா அழகு
கட்டுடல்
இல்லா காளை
கார்கூந்தல்
இல்லா கன்னி
கனிவு
இல்லா காதலி
கனவுகளே
இல்லா காதல்
கட்டியணைக்க
இயலா மனைவி
கலவி
கொள்ளா கணவன்
கவனிக்க
இயலா பிள்ளை
கல்வி தர
இயலா பெற்றோர்
கற்று
அறியா குரு
கன்னம்
சிவக்கா முத்தம்
கடைந்து
முடிக்கா கலவி
கருணை
இல்லா மனிதம்
கவலை
நிறைந்த முதிர்கன்னி
காண கண்
இல்லா பணம்
இவை இருப்பு,
தேவையில்லதவையே.

No comments:

Post a Comment