Wednesday 7 September 2011

மறந்த காதல்

என்னை மறுத்துவிட்டாய்,
ஜாதகம் படித்து கெட்டவனாவான்
என்றவுடன்.

மறக்க முடியவில்லை
பியிந்து போன மனத்தை,
படித்து, பறந்து, பணம் படைத்து, முடிந்த பின்,
அடைந்தேன் அழகு தமிழச்சிகளை,
மலைத்தேன் மலையாள மங்கையரின்
கொங்கைகளை கண்டு,
கனிந்தேன் கன்னடப் பைங்கிளிகளின்
கைகளில் நின்று,
தெலுங்கு நங்கையர் அழகு பற்றி
சொல்ல வார்த்தையில்லை,

நல்லவன், வல்லவன் என்கிறார்கள்
இப்பொழுது , சொல்லட்டும்
உடல் ஒன்றும் மனம்
சம்பந்தம் கொண்டதல்லவே.

ஆனாலும் மாறவில்லை
மனம் உன் நினைவுகளிலிருந்து.

மறுபடியும் உன்னை சந்திப்பேன்
அடுத்த ஜென்மத்தில் நல்ல ஜாதகத்துடன்.

ஜெயிப்பது ஜாதகம்தான்.

No comments:

Post a Comment