Thursday 1 September 2011

உணர்ச்சிகள்

உரசின ஸ்பரிசம்
உள்ளுள் உசுப்பின
சிரசு, காய்ந்து
சீற்றமுடன் உணர்வு.
சிந்தனைக்கும் இடமின்றி
சிரிக்கவும் மனமின்றி
சிலையாய் நிற்கின்றேன்.
சில கருணைக்கொலைகளை
மட்டுமாவது
செய் இல்லை அனுமதி.
வீழ்ந்துகொண்டிருக்கின்றேன்
வான் எழுந்த பந்தாய்.

No comments:

Post a Comment