Tuesday 6 September 2011

பாக்கியம்

முலைப்பாலை உறிஞ்சி அருந்தும்
மழலையின் மதமதப்பு,
தோல்வியின்போழுது ஆறுதலாய்
தாயன்பு,
கவலையின்போழுது தோழ்தழுவும்
நட்பு,
சிறந்த நகைச்சுவையின்
ஆரவார சிரிப்பு,
மறக்கவே முடிய சுவை நிறைந்த
விருந்து,
இன்பத்துடிப்பில் காதலியின்
முனகல்,
கண் ஜாடை கிடைத்த காதலன்
மலர்ச்சி,
இவையெல்லாம் கவலை மறந்த நிலையே.
கிடைப்பதில்லை எல்லோர்க்கும்.

No comments:

Post a Comment