Monday 29 August 2011

தாத்தாவின் வாழ்க்கை

ராஜ குடும்பப் பிறப்பினில்
மூன்றாம் சிங்கமாயே இவர்.

பட்டுச் சொக்காய் அணிந்துதான்
வாழ்வின் துவக்கம்,

பஞ்சனை மெத்தையிலேயே
இரவின் உறக்கம்,

இரவு பகல் ஊழியம் செய்ய
உறவு மக்கள்,

பள்ளி செல்ல என்னவோ
சாரட் வண்டிதானாம்,

எல்லாம் அறியாப் பருவம்
வரையினிலே மட்டுமே,

விவரம் அறிந்த சிலநாளிலே,
உறிக்கப்பட்டது பட்டுச் சொக்காய்.

மாறிய வாழ்க்கை கால்நடையாகியது
பள்ளி செல்லும் வழியை.

வந்து நின்றதாம் வாயிற்படியில்
மஞ்சளிலே ஏதோ கடிதம்,

கொடுத்த தகப்பன் தலையிலே கை,
தாய் தலைகவிழ்ந்து கண்ணீருடன்.

மாலையில் மறைந்த ஆதவன்
உதிக்க மறுத்துவிட்டான் காலையில்.

பதினான்காம் வயதில் ஒரே இரவில்
இடிந்துவிட்டது வாழ்ந்த இவர் கோட்டை.

தாங்கி நின்று தன்மானம் காத்து தயங்கித்
தயங்கியே முடிந்தது இவர் வாழ்க்கை.

பதினாலு வயதுக்கு முன் கோடிக்கு அதிபதி,
அடுத்தநாள் கோடி உடுத்த வழியில்லா தளபதி.

வேண்டாமடா இறைவா இனியொருமுறை
இப்படியொரு நிலை உலகில் எவர்க்கும்.

No comments:

Post a Comment