Tuesday 30 August 2011

சோகம்

மழை மிகவும் பிடிக்கும்.

நிலம் செழித்திட, உயிர் மலர்ந்திட,
உதவுகிறதினால் அல்ல.

தாகத்திற்க்கான தண்ணீரை சுமந்து
தரையினில் விதைப்பதினாலும் அல்ல.

அழகு சொட்ட இசை மெட்டுக்கட்டி
கும்மாளமிட்டு குடியமர்ந்ததற்ககாகவும் அல்ல.

சில்லிட்ட குளிர்ச்சியை கரைத்துக் கலந்து கிளர்ச்சி கொள்ள வைத்தமைக்காகவும் அல்ல.

ஆட்சியாளர்களின் அராஜகத்தாலும்,

அடிமைத்தன அரசியலாலும்,

வாழ வகையின்றி, வாழ்க்கையை

தொலைத்து நிற்கும் மனிதத்தின்,

கண்ணீரை

மற்றவர் அறியாவண்ணம்
கலந்து கரைத்து விட்டமைக்காக.

No comments:

Post a Comment