Monday 29 August 2011

நீ பாதி நான் பாதி

ஆதி, பாதியாகி வாதிட்ட மீதி நீ,
நிலை மறந்து மோதிட்டாய் உன் பாதியில்.

பாதிப் பாதியாய் பல பாதி, துதி பாடி,
சில பாதி உறுதி என நம்பி மறு பாதி
கொண்டு களித்த நீதி உரைத்திட்டேன்.

என் பாதி இது பாதி என வாதிட்ட
ஒரு பாதி, எட்டி நின்ற வீண் பாதிகள்.

கண்டு தொட்டேன் உற்ற பாதி நீதான்
எனவே ஆய்ந்து பட்ட உரசலாய் மீறி.

தொட்டதும் கிண்ணம் சிவந்து,
விரல் பட்டதும் கண்கள் சிவந்து
நின்ற நீ என் பாதி.

பாதி உந்தனை காதல் பசை
கொண்டு பாதி எந்தனை
ஒட்டியே முழுமை செய்திட்டேன்
பாவியான பாதிகளை ஆவியான ஆதியாய்.

No comments:

Post a Comment