Monday 29 August 2011

கலைந்த எண்ணங்கள்

அலைபேசிகள், அனுப்பப்பட்ட எண்களின்
தகவல்கள் அனைத்தையும்
தேடி இழுத்துத் துடித்து அலறுவதைப்போல்

நீ எனக்கு அனுப்பிய எண்ண அலைகளின்
அதிர்வுகளை அள்ளி  அணைத்து
மூளைக்குள் ஒளித்துக்கொண்டேன்.

உரைத்த உயிர் மூச்சின் உள்ளம்
அறிந்ததினால் உன் இல்லம் தேடி
நிலை நிறைத்து நின்றிருந்தேன்.

உன் விழியம்புகளின் விவகாரங்கள்,
நடையழகின் நாகரீக நடிப்புகள்,
நெஞ்சத்தின் ஆழமான விம்மல்கள்,
உரசிச் சென்ற உயிர்விழுங்கும் சிரிப்பழகு,

புன்னகையை நிரந்தரமாக்கத் துடிக்கிறாய்
பறந்துகொண்டிருப்பதாய் நினைத்து
மயங்கி மலந்து உறங்கிக்கொண்டே.
ஊர் செல்ல வழி புரியாமலே, தெரியாமலே.

காட்சி தர விருப்பமில்லாமல்,
கட்டி முத்தம் கலக்காமல்,
கிறங்கடிக்கும் மொழியாவும் பேசாமல்,
கரையேறிப் பறந்துவிட்டிருக்கிறாய்.

நீ செய்தால் மட்டும்
அது சரியாகத்தானிருக்கும்.

No comments:

Post a Comment