Wednesday 31 August 2011

ஊடல்

பார்ப்பது எதுவும் அருமையில்லை,
பாடல் கேட்பதிலும் விருப்பமில்லை,

பேசுவதெல்லாம் கோபமாய் முடிவில்,
நின்றாலும் அமர்ந்தாலும் குற்றமாய்,
எட்டில் சந்திரனா புரியவில்லை,

எட்டாக்கனியினை எண்ணிய கனவா,
குழப்பின மனதை குழைய யோசித்தேன்.

கடைசியில் உணர்ந்தேன்
உன் காந்தக் கண்கள்
வீசிய ஒளி அலைகளின்
கோப கனைகளை.

வந்து நின்ற உன்னை
கண்டு நின்ற நான்.

உன் ஒரு அணைப்பு
ஏற்படுத்திய ஆர்ப்பாட்டத்தினால்
அணைந்து அடங்கி
அமைதியாய் நின்ற,
என்னுள் எரிந்த எரிமலை.

பின் கிடைத்த அமைதியின் ஆழம்
ஒருவருக்கும் புரிய வாய்ப்பில்லை.

காதலில் கோபத்திற்கு தோல்வி

No comments:

Post a Comment