Monday 29 August 2011

உயிரின் உயிரே...!

திரும்பும் திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது...!

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது...!

சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது..!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது...!

பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது......!

அன்பே..............
உன்னை நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!

No comments:

Post a Comment