Wednesday 31 August 2011

காத்திரு

மலர்களுக்கு ரேகையில்லை.
இருந்திருந்தால்
உன் கூந்தல் உதிர்த்த
மலர் கண்டு உன் இருப்பறிய
உதவியிருக்கும்.

உன்னுள் காதலினால்
ஊற்றப்பட்ட உயிர்
நிரம்பியும், வழிய வழியில்லை.
கொள்ளும் அளவு
கூடிக்கொண்டே இருப்பதினால்.

உன் சந்திப்புக்கு
இத்தனை கால இடைவெளி
கிடைத்த காரணத்தினால்,
உன்மீதுள்ள காதலின் கணமும்
கூடிவிட்டிருக்கின்றது.

தாங்கமுடியாப் பட்சத்தில்
தகிக்கும் கலவித்தீயினுள்
தாவிக்கலப்பதே கலை.

No comments:

Post a Comment