Monday 29 August 2011

காதல் இதயம்........

நித்தமும் கூட்டை முதுகில் சுமந்தே...
நகர்ந்து செல்லும் நத்தையாய் - உன்
நினைவுச் சுமையை நெஞ்சில் சுமந்தே
நாளும் வாழ்கின்றேன்
நானும்..!

எத்தனை முறை நடந்தாலும்...
அத்தனை பாதச் சுவடுகளையும்...
அடிக்கடி வந்து அழித்து விடுகிற
கடற்கரையோர கடல் அலையாய்
உன் இதயம்...

'பொத்' என வீழ்ந்த
ஓர் வான் துளியை...
நித்தமும் பாதுகாத்து,
முத்தாக்கும் முயற்சியில்...
முழுதாய் சுகம் காணும்
என் இதயம்..!

No comments:

Post a Comment