Tuesday 30 August 2011

அன்பு செய்

கழுத்து கட்டிவைக்க, கவனித்து
நின்றது ஒரு ஆடு.

கழுத்து அறுத்து மூச்சு முட்டி துடித்துக்
கிடக்கும் ஒரு ஆடு.

கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவாம்.

கவனித்து நின்ற ஆட்டின் கொட்டை
கவ்வி நிற்கும் கயவன் ஒருவன்.

எண்ணிப்பாரும்

மூச்சி முட்டி முழிக்கும் ஒரு உயிரை,
காட்சி கட்டி கலவரப்பட்டு கலையிழந்து,
கண்டு நிற்ற மற்றொரு உயிர்.

உயிருடனேயே உயிர் சமாதி.

கவனமாயிருங்கள் மானுடர்களே,
அன்பு செய்யத்தான் உயிர்
அவமானப்படுத்த அல்ல.

அரவணைக்கத்தான் மனிதன்
ஆட்சிசெய்ய அல்ல.

No comments:

Post a Comment