Tuesday 30 August 2011

ஆனந்தக்கண்ணீர்

உருவிநின்ற உயிர் ஒட்டியதால்
உயிர் பிழைத்தாள் மகள்.

பிழைக்க வைத்த வைத்தியர்
கடவுளின் பிறப்பு.

சட்டை செய்யாது அடுத்த
உயிருக்கு உதவுவதற்காய்.

காசு காணாத, கள்ளம் அறியாத
கண்கள் குளமாய் கைகூப்பி
நன்றியுணர்வுடன் தாய்.

தங்க முகத்தினிலிருந்து
விழுந்துத் தீர்ந்த வைரத்துளியாய்
கண்ணீர்.

காசுபணம் மறந்து கடமைமட்டுமே உணர்ந்த
மருத்துவரும் இறைவர்களே.

No comments:

Post a Comment