Tuesday 30 August 2011

mullaa

ஓஷோவின் முல்லா கதை.
முல்லா நிறைந்த கவலைகளுடன், தற்கொலை செய்துகொள்ள ஒரு தூக்குக்கயிறு, ஒரு டின் நிறைய பெட்ரோல், ஒரு துப்பாக்கி மூன்றையும் எடுத்துக்கொன்று ஒரு ஆற்றங்கரை மரம் நோக்கி நடந்துகொண்டிருந்தார். முந்தைய முறை தற்கொலை தோல்வியில் முடிந்திருந்தது.
ஆற்றங்கரை மரத்தில் தூக்குக் கயிற்றைக்கட்டி, பெட்ரொலை மேலே ஊற்றி பத்தவைத்துக்கொண்டு, துப்பாக்கியால்
நெற்றியை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதாக தீர்மானம்.
இந்த முறை கட்டாய மரணம்தான்.

பெட்ரொலை ஊற்றி பத்தவைத்தாயிற்று.
கழுத்தில் சுருக்கை மாட்டியாயிற்று.
துப்பாக்கியை நெற்றியில் சுடும்போழுதுதான் பிரச்சினையாயிற்று.
குறி தவறி கயிற்றில் பட, ஆற்றில் விழுந்து தீயும் அணைந்துவிட்டது. அவன் ஆற்றில் நீந்தத்துவங்கினான்.
கடவுள் அவனிடம் நீந்தாமல் இறக்க வற்ப்புருத்தினார்.
முல்லா கூறினார்,
அது முடியாது இறைவா, எனக்குதான் ஏற்கனவே நீந்ததேரியுமே.

No comments:

Post a Comment